தமிழநம்பி
தமிழில் கலந்து எழுதப்படும் அயன்மொழிச் சொற்கள், சரியான பொருளைப் புரிந்து கொள்ளாமல் மனம்போனபோக்கில் எழுதப்படுகின்றன என்பதை மொழி ஆய்வாளர்கள், தமிழில் பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுதுவதால் விளையும் கேடுகளில் ஒன்றாக மிகத்தெளிவாக எடுத்துக் காட்டி வருகின்றனர்.
அறிஞர் மு.சண்முகம்(பிள்ளை) தமிழகராதி பற்றிய அறிமுகக் கட்டுரையில் தேவமைந்தன் என்னும் பேராசிரியர் பசுபதி ஐயா வடமொழிச் சொற்களின் உரியபொருள் அந்த அகராதியில் கொடுக்கப்பட்டுள்ளதையும் அதன்வழி அவ்வடசொற்கள் தொடர்பற்ற பொருளில் தமிழில் கலந்தெழுதும் போது பயன்படுத்தப் படுவதை அறிய முடிவதையும் எடுத்துக்காட்டி யிருந்தார்கள். இதைத் ‘திண்ணை’யில் வந்த அக்கட்டுரையைப் படித்தவர் அறிவர்.
‘அவர் எங்களோடெல்லாம் சேரமாட்டார்; தனிஆவர்த்தனம் தான்’ – என்றால் தவறான பொருள்தரும். ஏனெனில், ஆவர்த்தனம் = மறுமணம். ஆவர்த்தித்தல் என்றால் மறுமணம் செய்து கொள்ளுதல்.
பிரமாதம் என்றால் தவறு, பேரிடர், அளவில்மிக்கது,விழிப்பின்மை என்பனவே பொருள்களாம். இச்சொல் எவ்வளவு தவறாகப் பயன்படுத்தப் படுகிறது!
உதாசீனம் என்பதற்கு ‘விருப்பு வெறுப்பில்லா நடுநிலை’ என்று பொருள்.
அபிமான புத்திரன் என்பதற்கு வளர்ப்பு மகன், வைப்பாட்டி மகன் எனபனவே பொருள்களாம்.
பாமரன் என்றால் அறிவில்லாதவன் என்றே பொருள்.
பிதாமகன் என்றால் தந்தையைப் பெற்ற பாட்டன் என்பதே பொருளாம்.
‘மிகுதியாக’, ‘விருப்பத்தின்படி’ என்பவற்றையே பொருள்களாகக் கொண்ட யதேச்சை என்ற சொல், தற்செயல், தற்செயலாக என்ற பொருள்களில் எழுதப்படுகிறது.
சிரமம் என்றால் களைப்பு,, உழைப்பு, படைக்கலப் பயிற்சி என்பனவே பொருள்களாம். – இப்படி நிறைய சொற்களை எடுத்துக்காட்டலாம்
இவற்றைப் போன்றே தமிழில் கலந்துள்ள ஆங்கிலம் உட்பட மற்றமொழிச் சொற்களுள்ளும் அவற்றிற்குரிய பொருள் தவிர்த்து விருப்பத்திற் கேற்ப வேறு பொருள்களில் கையாளப் படும் சொற்களும் உள்ளன.
‘அந்தஸ்து’ என்ற சொல் சமற்கிருதச்சொல்லே; உருதுச்சொல் அன்று என்றே அகராதிகள் சொல்கின்றன. ஆங்கிலத்தில் தகுதி-யை ‘fitness’ என்கிறார்கள் என்பது சரியன்று. ‘fitness’ என்பதன் முதற்பொருளாக ‘பொருத்தம்’ என்பதையே தருகிறது சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி (பக்கம் 389). அந்தஸ்து என்பதை ஆங்கிலத்தில் ‘status’ என்று சொல்கிறார்கள் என்பதும் சரியன்று. ஏனெனில், மேற்குறித்த அகராதி ‘status’ என்பதற்கு முதற்பொருளாக ‘சமுதாயப் படிநிலை’ என்றே குறிக்கின்றது. The Compact Oxford Reference Dictionary – யில் ‘status’ என்பதற்கு முதற்பொருளாக ‘a person’s social or professional position in relation to others’ –எனக் கொடுக்கப் பட்டுள்ளதைக் காணலாம்.
தமிழ்மொழியில் எழுதும்போதும் பேசும்போதும் தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்பது எப்படி வேறுபாட்டை உண்டாக்கும்? இவ்வாறு கூறுவது ‘ஆக்கிரமிப்பு’ என்பது நெஞ்சறிய உண்மை கூறுவதாகுமா?
‘Minor irrigation’ என்பதை ‘Small irrigation system’ என மாற்றி எழுதி, அதைத் தமிழில், ‘சிறுநீர்ப் பாசனம்’ என எள்ளல் மொழிபெயர்ப்பு செய்துகொண்டு, அதுவே மிகச்சரியான மொழிபெயர்ப்பு என்று தம்மைத் தாமே பாராட்டிக் கொண்டு, ‘சிறுநீர்ப் பாசனம்’ என்பது சங்கடப் படுத்துகிறது என்று எழுதி உலகின் முதற்றாய்மொழி என்றும் உயர்தனிச் செம்மொழி என்றும் போற்றப்படும் தமிழ்மொழியை இழிவுறுத்த முயல்வது நெஞ்சறிய உண்மை கூறுவதாகுமா?
கல்லாத மேற்கொண்டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும் – என்பார் ஒருதனிப் பேராசானான வள்ளுவப் பெருந்தகை.
தாம் ஏற்க விரும்பாத கருத்தை ஒருவர் கூறினால், அதை வெறி என்பதையும், அதனால் தமிழ் அழிவை நோக்கியே போகும் எனச் சாவமிடுவதையும் எடுத்துக் காட்டுவதைப் பொய்யுரைப்பதாகக் கூறுவது நெஞ்சறிய உண்மை உரைப்பதாகுமா?
முரண்படும் கருத்துக்களை முறையாக மறுக்காமல், மேலாளுமை மனவுணர்வோடு சொற்களால் இழிவுசெய்ய முனையும் போக்கை இருபத் தொன்றாம் நூற்றாண்டில் ஏற்கமுடியுமா?
கார்கிலைப் பெயரில் கொண்டவர் என்பது சுட்டும் முறைகளில் ஒன்றுதானே? அங்ஙனம் சுட்டுவதைக் கார்கில் மேல் எரிச்சல் என இட்டுக் கட்டி ஏற்றிக் கூறுவது நெஞ்சறிய உண்மை கூறுவதாகுமா?
‘செத்தமொழி தாங்கிகள்’ எனக் குறிப்பிட்டது அறச்சினத்தின் வெளிப்பாடே. அவ்வறச்சினத்திற்குப் பல்வேறு தமிழறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ள நயன்மையான பல மறுக்க வியலாக் காரணங்களும், அவற்றிற்கான சான்றுகளும் உள. ஒரு சான்றாக, பரிதிமாற்கலைஞரின் ‘தமிழ்மொழியின் வரலாறு’ என்ற நூலில் வடமொழியர் தமிழுக்கு எதிராகச் செய்த கெடுங்கேட்டுச் சூழ்ச்சி வினைப்பாடுகள் விளக்கப்பட் டுள்ளதைக் காட்டலாம்.
மொழி தொடர்பான செய்தியில், எவ்வகைத் தொடர்பும் இன்றித் திடுமென ‘இந்து மதத்தின்மேல் காழ்ப்புணர்ச்சி’ எனப் பொருத்தமும் பொருளுமற்ற ஒன்றைக் கூறித் துணைதேட முயலும் போக்கை நெஞ்சறிய உண்மை கூறுவதாகச்சொல்லமுடியுமா?
‘அபத்தமான உச்சரிப்புக்கு அடிகோலக்கூடிய தனித்தமிழில் எழுதுகிறேன் பேர்வழி என்று அபத்த மாற்றங்களில் ஈடுபட்டு..’ – என்ற சொற்றொடர் தனித்தமிழை இழிவு படுத்தவில்லை என்பது நெஞ்சறிய உண்மையைச் சொல்வதாகுமா?
முறையான தக்க பொருந்திய மறுமொழி கூற இயலாத நிலையில், ‘உங்களால்தான் தமிழுக்கும் பெருஞ்சித்திரனாருக்கும் இழுக்கு’ எனக்கூறும் எரிச்சல் கூற்றால், ஆழ்மனத்தில் மூவர்மாட்டும் கொண்டுள்ள வெறுப்புணர்ச்சிதானே வெளிப்படுகிறது.
கருத்துக்களைக் கருத்துக்களால் நேர்கொள்ள வேண்டும் தானே? அதை விடுத்து, தான் விடைகூறுவது ஏதோ அருட்கொடை புரிவதாக மேலாளுமை மனவுணர்வில் தருக்கிக் கொள்வதும் தொடர்பே இல்லாமல் மதவுணர்வை எழுப்பிக் குளிர்காய முயல்வதும் வேறுபாட்டை விளைவிக்கும் முயற்சிகளாக அமைகின்றனவே யன்றி முன்னேற்றமான போக்கைக் காட்டுவனவாக இல்லையே!
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. –என்பார் பொதுமறை ஆசான்.
thamizhanambi44@gmail.com
- வார்த்தை மே-2008 இதழில்
- முன்னாள் தெய்வம்
- திராவிட திருக்குறள் பார்வைகள்: எனது விமர்சனத்திற்கு மு.இளங்கோவன் எதிர்வினை குறித்து
- காற்றினிலே வரும் கீதங்கள் – 18 விதி எழுதி வைத்தது !
- ‘பிட்’தகோரஸ் தேற்றங்கள்
- பரிபுறகநராம் லா கூர்நெவில் இலக்கிய விழா
- பதுங்குகுழி நாட்கள் – பா.அகிலன் கவிதைகள்
- பெரும்புதிர்களின் இடையில் : லங்கேஷ் சிறுகதைகள்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியின் சிக்கலான உள்ளமைப்பு எப்படித் தோன்றியது ? (கட்டுரை: 28)
- எரியும் நினைவுகளைக் காவிவரும் ஓர் ஆவணப்படம்!
- ‘எழுத்துக்கலை பற்றி இவர்கள்’- 20 – கி.ராஜநாராயணன்
- மணல் வீடு : சுப்ரபாரதிமணியனின் நாடக நூல் – நடித்தலும், நவீனமும்
- உ.வே.சா வின் நினைவில்
- தனி ஆண்மை கொண்ட நெடுவேல்
- தீபச்செல்வன் கவிதைகள்
- கொலை செய்யப்பட்ட உருவங்கள் : ஜாகிர்ராஜாவின் கருத்தலெப்பை படைப்புலகம்
- “அக்கர்மஷி”யின் அடையாளங்களைத் தேடி
- பிறமொழிச சொற்கள் உரியபொருளில ்தான் கலந் தெழுதப் படுகின்றனவா?
- “தமிழ்க் கணிப்பொறி” வலைப்பதிவர் பயிலரங்கு
- உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக்கிளை துவக்கவிழா.
- வரைமுறைப் படிமங்கள்
- நிழலா..?நிஜமா..?
- Last kilo byte – 14 அஸ்தினபுரத்தின் வாசம் – ஆயில்பாலத்தூவாபனன்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 10
- கண்ணாடி மனிதர்கள்
- அறை எண் 786ல் கடவுள்!
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 6 (சுருக்கப் பட்டது)
- காலத்தைச் செலவு செய்தல்
- சமூக-அரசியல்-பொருளியல் சிந்தனையாளரும் செயல்வீரருமான குணாவின் ஆராய்ச்சிகள்
- சம்பந்தமில்லை என்றாலும் 12 : தீண்டப்படாதவர் வரலாறு-டாக்டர் அம்பேத்கர்
- கே.எம்.பணிக்கரின் “ஆசியாவும் மேற்கத்திய ஆதிக்கமும்” – ஆசியாவின் காலனிய வரலாறும், கிறிஸ்தவ மிஷனரிகளும்
- ஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம்
- மைன் நதியில்..
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 4
- கல்வியும் வேலை வாய்ப்பும்
- “ஞாபகம் வருதே…ஞாபகம் வருதே’ – சரித்திரம் செய்த சாதுக்களின் சவால்கள்
- தாகூரின் கீதங்கள் – 29 முடிவான மனநிறைவு மரணம் !
- பேற்றேனே துன்பம் பெரிது!
- காதலின் உச்சி
- “பிம்பங்களை உடைக்கும் சாத்தான் – கடவுள்”
- தடுப்பூசி மரணங்கள்!!