லா.ச.ரா. குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் – முதல்வர் தகவல்

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

அறிவிப்பு


மதுரை, அக்.31.
லா.ச.ரா. என்று அழைக்கப்படும் எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம் (92) குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

லா.ச.ரா மறைவு குறித்து தினமணி நாளிதழ் புதன்கிழமை விரிவான செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து முதல்வர் கருணாநிதி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, லா.ச. ராமாமிர்தம் இறந்துவிட்டார். அவருடைய குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள். பத்திரிகையாளர்கள் இறந்துபோனால் அவர்கள் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிதி அளிக்கிறோம். லா.ச.ரா. குடும்பத்துக்கும் அரசு நிதியுதவி அளிக்கப்படும், என்று தெரிவித்தார்.

(நன்றி ଭ தினமணி நாளிதழ் செய்தி ଭ 01 நவம்பர் 2007)

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு