பாரதியை தியானிப்போம்
பா.சத்தியமோகன்
யாப்பு, சீர், தளை அசை,தொடைகள் இவை தாம் கவிதைக்குத் தடை என்று
வெளியே வந்தோம். நவீன கவிதை என்றும் புதுக்கவிதை என்றும் நயங்கள்
தோன்றின. பெருக்கெடுத்து ஓடுகிற வெள்ளமாய் இருகரையெங்கும் தொட்டு
என்னென்னமோ வந்தாயிற்று. பிறகு ஒரு கட்டத்தில் புதுக்கவிதை எனப்படும்
நவீன கவிதைகளின் அசைவு- அந்தரங்கம் நோக்கி நகர்ந்தன. இதற்கு சமூக
இடர்பாடும் பெரும் பங்கு வகிக்கிறது. இருப்பினும் இப்போக்கு, வாசகனுக்கு
முதலில் சுவாரசியத்தைத் தந்து பிறகு ஒரு வித வெறுமையை ஏற்படுத்துகின்றன.
அதாவது அதீத சுயவலியைப் பதிவு செய்வது உண்மையைக் கொண்டிருப்பினும்
அதற்கே உண்டான மொழிச்செயல்பாடு மற்றும் மொழித்தன்மை குறுக்கம்
உடையதாக இருப்பதே இதற்குக் காரணம்.
இவற்றை மீறி யாவருக்கும் புரிந்த மொழியில் தன் அனுபவத்தைக்
கவிதையாக்கும் படைப்பாளியோ தன்னை சமரசப்படுத்திக்கொள்ள வேண்டியவனாக
– நிறைவு பெற இயலாதவன் கிறான். க- மொழியின் சக்தியும் விரிவு
பெற வேண்டும். அது அனுபவச் சத்தினை வீச்சுடன் வெளிப்படுத்த வல்ல
உண்மையான போக்கினையும் கொள்ள வேண்டும். இந்த இரு எல்லைகளையும் அறிந்து
தடுமாறாமல் நீண்ட கவிதைப் போக்கினை அளந்து நிறுத்திய மகாகவியை,
அவர் கவிதைகளை வாசிக்கும் எவரும் உணரமுடியும்.
கடைசி கவிதை வரை இந்த மொழி அடர்த்தி எளிமையுடனும், அனுபவம்
நீர்த்துப் போகும் மொழியைத் தவிர்த்தும் மகாகவி எழுதி வந்தார். இது
தமிழின் தமிழரின் தவப்பயனாகும். இதனை மேற்கொண்டும் அறிந்து ழ்ந்து
மென்மேலும் செம்மைப்படுத்துவது நவீனகவிஞர்களின் பொறுப்பு
—-
pa_sathiyamohan@yahoo.co.in
- யூதர்களுக்காக ஏங்கும் இஸ்லாமியர்
- நமது பத்திரிகை உலகமும் அதில் எனது சொற்ப ஆயுளும்
- சிறு குறிப்புகள். (பன்றிவதை, e-pill, சுனாமி ஆராய்ச்சி நிலையம், டிசி, அமைச்சர் அன்புமணி)
- எல்லை
- வண்டிக் குதிரைகள்
- சிக்குவும் மழையும்….
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- அப்ப… பிரச்சனை… ? பெண்மனசு
- எடின்பரோ குறிப்புகள் – 3
- திண்ணை
- நான் உன் ரசிகன் அல்ல..
- பெரியபுராணம் – 69 – 33. நமிநந்தியடிகள் நாயனார் புராணம்
- கீதாஞ்சலி (53) நான் பாட குழந்தை ஆட! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- மறதி
- இரு கவிதைகள்
- கடிதம் கை சேரும் கணம்
- கவிதையோடு கரைதல்..!
- போல் வெர்லென் ((Paul Verlaine 1844-1896)
- The Elephants Rally-யா னை க ளி ன் ஊ ர் வ ல ம்
- அங்கே இப்ப என்ன நேரம் ? (கட்டுரைகள்) : அ.முத்துலிங்கம்
- கனவு மெய்ப்படுமா ?
- மொபைல் புராணம்
- சொன்னார்கள்
- விளக்கு தமிழிலக்கிய மேம்பாட்டு நிறுவனம் – ஞானக் கூத்தனுக்கு புதுமைப்பித்தன் இலக்கிய விருது
- பாரதியை தியானிப்போம்
- விமர்சனங்களும், வாழ்த்துரைகளும்….
- உண்மை நின்றிட வேண்டும்!
- அருவி அமைப்பு நடத்தும் சுடர் ஆய்வுப் பரிசு வழங்கும் விழா
- கடிதம்
- வாளி