கடிதம் பிப் 26,2004 – மகுடேசுவரனின் மடலும், ஒரு சில கருத்துகளும்
இந்துமதி சுப்பிரமணியன்
கவிஞர் மகுடேசுவரனை அவரது படைப்புகள் மூலமாக நன்றாக அறிவேன். ஆனால் அறிமுமில்லை. மத்தளராயன் என்ற புனைப்பெயரில் எழுதும் இரா. முருகன் அவர்களை திண்ணைக்கு வந்த பிறகுதான் தெரியும். வாரபலன் என்ற பெயரில் அவர் எழுதும் மடல்களை படித்திருக்கிறேன். வாயு என்ற கதையும் நினைவிருக்கிறது. அவர் வார பலனில் எழுதும் பல விஷயங்கள் புரியாது என்றாலும், ஆர்வத்தை தூண்டுகிற மாதிரி எழுதுகிறார் என்று நினைக்கிறேன்.
மகுடேசுவரன் எழுதியுள்ள கடிதத்துக்கான அடிப்படை என்ன என்பது எனக்குத் தெரியும்.
ஒரு பிரபல தமிழ் இணையத்தளத்தில் நடக்கும் அரட்டையில் பேசப்பட்ட சில விஷயங்கள் அடிப்படையில் தான் அந்த மடலை அவர் எழுதி இருக்கிறார் என்று தோன்றுகிறது. காரணம், அந்த அரட்டையில் பேசப் பட்ட சில விஷயங்களை சுட்டிக் காட்டுவது போலத்தான் அவரது மடல் இருக்கின்றது. அந்த குறிப்பிட்ட அரட்டையில் நானும் கலந்து கொண்டேன்.
பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்கள் நெறிப்படுத்தி நடத்தும் அந்த அரட்டையில் ( chat) , மகுடேசுவரனுக்கும், எழுத்தாளர் சுஜாதாவுக்கும் நடந்த அரட்டையில் இருந்து ஒரு பகுதியை இங்கே தந்திருக்கிறேன்.
< - செருகல் - >
பிரபல எழுத்தாளர் : மகுடேசுவரன், அமுதசுரபியில் ரவி சுப்ரமணியம் , வெ.சா. இரா.மு கட்டுரைகளைப்
படித்தீர்களா ?
மகுடேசுவரன் : சார், அவசியம் படிக்கிறேன், கொஞ்ச காலமாகவே அமுதசுரபியைப் படிக்கவில்லை.
பிரபல எழுத்தாளர் : மகுடேசுவரன், அதில் உங்கள் கவிதைகள் பற்றி , இரா.முருகன் எழுதியுள்ளார். ரவி,
வைரமுத்துவுக்கு சாகித்திய அகாதமி விருது பற்றி எழுதியுள்ளார்.
மகுடேசுவரன் : தமிழ் இலக்கியம் 2004 மாநாட்டில் கவியரங்கப் பங்கேற்பிற்காக சென்னை வந்திருந்தேன்.
அந்நிகழ்ச்சியைப் ஓட்டி என் கவிதைகள் குறித்து அவர் எழுதியுள்ளாரோ ?
பிரபல எழுத்தாளர் : ஆம். கொஞ்சம் நக்கலாக எழுதியிருந்தார். அவரது வழக்கமான நடையில்.
மகுடேசுவரன் : சார், அந்த மாநாட்டில் அவருக்கு ஒரு வணக்கம் போடத் தவறிவிட்டேன்.
பிரபல எழுத்தாளர் : மகுடேசுவரன், இந்த வணக்கங்கள் எல்லாம் அவசியம்.
< - செருகல் முடிவு - >
நான் மகுடேசுவரனை கேட்க விரும்புவது….
1. ‘ சார், நான் வணக்கம் போட்டிருந்தால், என்னைப் பற்றி நல்ல விதமாக எழுதி இருப்பீர்களா ? ‘ என்று
மத்தளராயன் அவர்களிடன் விசாரித்தீர்களா ? அவர் மின்னஞ்சல் முகவரி, திண்ணையிலேயே கிடைக்கிறதே ?
2. ‘வணக்கம் போட்டால், நல்ல விமரசனம் கிடைக்கும் என்று ஒரு பிரபல எழுத்தாளரான நீங்கள்,
தொகுப்புகள் எல்லாம் வெளியிட்ட ஒரு அறியப்பட்ட கவிஞனான என்னிடம், பொது இடத்தில் உரையாடும்
போது, சொல்ல முடிகிற நிலைமை இருக்கிறது என்றால், அப்படிப்பட்ட
இலக்கிய உலகில் நீங்களும் நானும் குப்பை கொட்டி என்ன ஆகப்போகிறது ? ‘ என்று உங்களுக்கு சுஜாதா அவர்களைப் பார்த்து கேட்கத் தோன்ற வில்லையா ?
3. தறுதலை, ஒருதலை என்கிற வார்த்தை விளையாட்டுக்களை விட்டு, நல்ல கவிஞர் என்று அறியப்பட்ட நீங்கள், எப்போது வெளியே வரப் போகிறீர்கள் ?
அன்புடன்
இந்துமதி சுப்பிரமணியன்
sindumathy@hotmail.com
( அந்த அரட்டையின் தொகுப்பு ( chat transcript) என்வசம் இருக்கிறது. விரும்பினால் இணைப்புத்
தருகிறேன்)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -13)
- நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் -8
- விடியும்!- நாவல் – (37)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தேழு
- சில நேரங்களில் சில மனிதர்கள்
- ‘தொட்டு விடும் தூரம்… ‘
- அறம்: பொருள்: இன்பம்: வீடு
- பயங்கரவாதியை உருவாக்குவது எது ? – பகுதி 2
- அன்பிற்குரிய வைகோ அவர்களுக்கு
- பணம். பதவி. மற்றும் முதுகு சொறிதல்.
- வாரபலன் – பிப் 26,2004-ஹரே ராமா ஹரே டெக்னாலஜி – சித்திர நாவல் – காய்ந்த நீர் காணாமல் போன மணல் – காலைக்கடன் கடவுள் கட்டளை
- மத மாற்றம்
- பேசாத பேச்சு
- இறைவன் எங்கே ?
- சுண்டெலி
- வரமொன்று வேண்டும்
- பிறவி நாடகம்
- மரம்
- பூரணம்
- என் கேள்வி..
- தீராத வியப்பூட்டும் உலகம் – (எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் அறிமுகம்)
- உயிராசையும் தடுமாற்றமும்-ஐல்ஸ் ஐக்கிங்கரின் ‘ரகசியக் கடிதம் ‘
- ஹாலிஃபாக்ஸ் நகரைத் தாக்கிய ஹர்ரிகேன் சூறாவளி ஜுனா (செப்.2003)
- நீயின்றி …
- கவிதைக் கோட்பாடு பற்றி…
- சரித்திரத்தின் சிலுவைகள்: “சிலுவைராஜ் சரித்திரம்”
- 2004 ஆம் வருட ராசிபலன்
- பட்டேல்கிரி
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – கிறிஸ்தோஃப் தர்க்கோஸ் ( Christophe Tarkos)
- வீீடு
- யுத்தம்
- கடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக ?சுரேஷ் அவர்களின் நண்பருக்கு
- கடிதம் – பிப்ரவரி 26,2004
- கடிதம் பிப்ரவரி 26,2004 – பெண் நபி, இஸ்லாம் – (என்)வாதத்தின் கடைசி பகுதி.
- கடிதம் பிப் 26,2004 – மகுடேசுவரனின் மடலும், ஒரு சில கருத்துகளும்
- நூல் வெளியீட்டு விழா
- “பக்தர்களான மார்க்சிய பெரியாரிஸ்டுகள்!”(தினமலர் ) பற்றி
- யாழன் ஆதி கவிதைகள்
- நாம் புதியவர்கள்
- கவிதையிலே ஒரு கதை: ‘பாலம் ‘
- மாலைநேரத்தின் பிரவேசம்
- விந்தையென்ன கூறாயோ ?
- ஒளவை பிறக்க வில்லையா ?
- மழையாக நீ வேண்டும் – 1
- பாட்டி கதை
- உள்ளத்தனைய உயர்வு
- இந்தியா ஒளிர்கிறது (India shining)
- அழவேண்டும்
- கவிதைகள்
- அன்புடன் இதயம் – 9 – நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை