யாழ்ப்பாணத்து அண்மைக்கால இலக்கிய நிகழ்வுகள்

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

தொகுப்பு :- சு. குணேஸ்வரன்


நிகழ்வு – 1————————————————————————

தொலையும் பொக்கிஷங்கள் நூல் வெளியீடு

இலக்கியம் என்றால் என்ன என்பதை அறியாத அப்பாவித்தனம் நிறைந்த எழுத்தாளர்கள் தற்போது இலக்கியத்தை ஆக்கி வருகிறார்கள். இவ்வாறு தெரி வித்தார் எழுத்தாளர் தெணியான்.

வதிரி இராஜேஸ்கண்ணனின் ‘தொலையும் பொக்கிஷங்கள்’ சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா யா/தேவரையாளி இந்துக்கல்லூரியில் 11.07.2009 அன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கி நடத்திய தெணியான் மேற்கண்டவாறு தெரி வித்தார். சமூகப் பயனற்ற வகையில் எழுதுவதை எழுத்தாளர்கள் தவிர்க்க வேண்டும். சமூகவியல் பார்வையுடைய எழுத்துக்கள் வெளிவரவேண்டும். என்ற ஆதங்கத்தையும் அவர் தெரிவித்தார்.

சமூகவியல் பார்வைகளுடன் சமுகத்திற்கு பயனளிக்கும் வகையில் இராஜேஸ்கண்ணனின் ஆக்கங்கள் அமைந்துள்ளன எனவும் தெணியான் குறிப்பிட்டார்.

நிகழ்வில் மங்கள விளக்கினை தேவரையாளி இந்துக்கல்லூரி அதிபர் ம. நவநீதமணி, வைத்தியர் கமலநாதன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

வெளியீட்டுரையினையும் அறிமுகவுரையினையும் யாழ் பல்கலைக்கழக கல்வியியற்றுறை விரிவுரையாளர் கலாநிதி த. கலாமணி அவர்கள் நிகழ்த்தினார். சமூக யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு தனது ஆக்கங்களைத் தரும் இராஜேஸ்கண்ணன் உச்சங்களைத் தொட வேண்டும் என்ற கருத்தினையும் அவர் முன்வைத்தார்.

நூலின் மதிப்புரையை அம்பன் அ.மி.த.க பாடசாலை ஆசிரியர் சு. குணேஸ்வரன் தேவரையாளி இந்துக்கல்லூரி ஆசிரியர் வேல். நந்தன் ஆகியோர் நிகழ்த்தினர்.

கதைகளின் காலம், கதைக்கரு, மொழி, களம், உரையாடற்பாங்கு, சித்திரிப்பு, என்ற வகையில் ஆய்வுரையை நிகழ்த்திய குணேஸ்வரன், நவீன சிறுகதையின் எல்லைகளைத் தொடுகின்ற வகையில் தனது களத்தையும் கதைகளையும் உத்திகளையும் இராஜேஸ்கண்ணன் விரிவுபடுத்த வேண்டும் என்று கருத்தை முன்வைத்தார்.

வேல் நந்தன் தனது உரையில், கதைக்குள் நின்று கதையை நகர்த்திச் செல்லும் வகையை எடுத்துக் கூறி சமூகவியற் பார்வைக்குள் நின்று எழுதுகின்ற அவரின் தன்மையை எடுத்துக் காட்டிகோட்பாடுகளுக்குள் படைப்பாளியை அடக்காமல் அவரை அவராகவே விட்டுவிடுங்கள் என்றும் கூறினார். இராஜேஸ்கண்ணனின் ஏற்புரையோடு நிகழ்வு நிறைவு பெற்றது.
-பூ. நகுலன்

நிகழ்வு – 2————————————————————-

பருத்தித்துறை அறிவோர் கூடல்

பருத்தித்துறை அறிவோர் கூடல் இலக்கியச் சந்திப்பின் மாதாந்த நிகழ்வு யூலை 5 ஆம் திகதி இடம்பெற்றது. திரு து. குலசிங்கம் அவர்களின் தொடக்க உரையோடு நிகழ்வு ஆரம்பமாகியது. சு. குணேஸ்வரன் ‘புலம்பெயர் இலக்கியம் – வரலாறும் வகைப்பாடும்’ என்ற பொருளில் தனது உரையினை நிகழ்த்தினார்.

புலம்பெயர் இலக்கியம் என்ற சொற்பிரயோகம்> உலகில் புலம்பெயர் வரலாறு> தமிழ் நாட்டு புலம்பெயர் வரலாறு> ஈழத்தமிழன் புலம்பெயர்வு> புலம்பெயர்ந்த சமூகம்> அவர்கள் எதிர்கொள்கின்ற சிக்கல்கள் என்றவாறு தனது உரையை நிகழ்த்தினார்.

ஈழத்தமிழரின் புலம்பெயர் 1960 களில் இருந்து நிகழ்ந்தாலும் 1980 களின் பின்னரான புலம்பெயர்வே ‘புலம்பெயர் இலக்கியம்’ (DIASPORA LITERATURE) என்ற சொற்றொடருக்கு மிகுந்த அர்த்தத்தைக் கொடுத்ததாகவும்> இன்று புலம்பெயர்ந்து தமது படைப்புக்களை படைத்து வரும் ஷோபாசக்தி> திருமாவளவன்> சுகன்> பார்த்திபன் போன்றோரின் படைப்புக்கள் ‘புகலிட இலக்கியம்’ (EXIL LITERATURE ) என்ற வகைப்பாட்டுக்குள் கொள்ளத்தக்கவை என்ற கருத்தினை முன்வைத்தார். புகலிட இலக்கியம் என்பது அரசியல் அழுத்தம் கூடிய சொற்றொடராகவே இருப்பதாகவும் குறி;ப்பிட்டார்.

இந்த உரையை தொடர்ந்து நான்கு அமர்வுகளில் நிகழ்த்தப் போவதாகவும் உரையாளர் தெரிவித்தார். படைப்பாளிகள்> ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் நன்றியுரையை எழுத்தாளர் இராகவன் நிகழ்த்தினார்.

நிகழ்வு – 3———————————————————–

ஞானம் ஞானசேகரனின் இலக்கியச் சந்திப்பு

ஞானம் ஞானசேகரனின் இலக்கியச் சந்திப்பு ஒன்று கடந்த யூலை மாதம் ‘அவை’ இலக்கிய அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

எழுத்தாளர் தெணியான் தலையையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஞானசேகரன் ‘அண்மைக்கால இலக்கியப் போக்கு’ என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் 1980 களின் பின்னர் வெளிவந்த பல படைப்புகளை எடுத்துக் காட்டிப் பேசினார். கவிதைகள்> கதைகள்> ஆகியன பற்றிப் பேசும்போது ஞானத்தில் வெளிவந்த ஆக்கங்களை மையப்படுத்தியே தனது உரையை நிகழ்த்தியமையால் சில வாதப்பிரதி வாதங்களும் இடம்பெற்றன.

தெணியான் அவர்கள் தனது கருத்தினைத் தொpவிக்கும்போது ஞானத்தில் வந்த படைப்புக்கள் மட்டும்தான் தற்கால இலக்கியப்போக்கைத் தீர்மானிப்பவையல்ல என்ற கருத்தினையும் சுட்டிக்காட்டினார்.

நிகழ்வில் கல்வயல் வே. குமாரசாமி> கலாநிதி த. கலாமணி> கொற்றை பி. கிருஸ்ணானந்தன்> சின்னராஜன்> அஜந்தகுமார்> இராஜேஸ்கண்ணன்> துவாரகன்> வேல் நந்தகுமார்> ஆகியோர் உட்பட 50 ற்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வு – 4——————————————————————-
ஞானசேகரனின் உரை

துன்னாலை வடிவேலர் மண்டபத்தில் ஞானசேகரனின் நாவல் பற்றிய உரை இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பொன். சுகந்தன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் அறிமுகவுரையை த. அஜந்தகுமார் நிகழ்த்தினார். உரையை ஞானசேகரன் நிகழ்த்தினார்.

தமிழ் நாவலின் போக்கு அதன் வளர்ச்சி பற்றி உரை நிகழ்த்தினார். நிகழ்வுக்கு உயர்தர மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

நிகழ்வு – 5————————————————————————-

அன்புடை நெஞ்சம் வெளியீட்டு விழா

நெல்லை லதாங்கியின் ‘அன்புடை நெஞ்சம்’ என்ற குறுநாவலின் வெளியீட்டு விழா அண்மையில் நெல்லியடி பிரதேச சபை மண்டபத்தில் எழுத்தாளர் தெணியான் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரமத விருந்தினராக ஆறு திருமுருகனும்> சிறப்பு விருந்தினராக கரவெட்டி பிரதேச செயலாளர் எஸ். சத்தியசீலனும் கலந்து கொண்டனர். அறிமுகவுரையை விக்கினேஸ்வராக் கல்லூரி அதிபர் திரு சிவசிதம்பரம் நிகழ்த்தினார்.

நூல் மதிப்புரையை யாழ் பல்கலைக்கழக கல்வியியற்றுறை விரிவுரையாளர் திருமதி இராசநாயகம்> மற்றும் ஆசிரியர் திரு சு. குணேஸ்வரன் ஆகியோர் நிகழ்த்தினர்.

நிகழ்வு – 6 ————————————————————————-

இலக்கியச் சந்திப்பு

ஞானம் ஞானசேகரனுடான இலக்கியச் சந்திப்பு ஒன்று கடந்த 16.08.2009 அன்று எழுத்தாளர் ராஜசிறீக்காந்தனின் பிறந்தகமான யாவத்தை அல்வாய் தெற்கில் கவிஞர் வதிரி கண எதிர்வீரசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் நிகழ்வு இடம்பெற்றது.

க. சி;ன்னராஜன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வரவேற்புரையை வேல் நந்தன் நிகழ்த்தினார். ‘படைப்பாக்க அனுபவப் பகிர்வு’ என்ற பொருளில் ஞானசேகரன் உரை நிகழ்த்தினார். தனது நாவல்கள் சிறுகதைகள் ஆகியவற்றின் படைப்புநிலையில் தான் எதிர்கொண்ட அனுபவங்களையும் இதழியல் அனுபவங்களையும் எடுத்துக் கூறினார்.

நிகழ்வில் பல படைப்பாளிகளும் ஆர்வலர்களும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

நிகழ்வு – 7 ————————————————————————-
இலக்கிய ஒன்றுகூடல்

அகில இலங்கை கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கிய ஒன்று கூடல் கடந்த 17.08.2009 அன்று நெல்லியடி தடங்கன் புளியடி முருகமூர்த்தி ஆலய மண்டபத்தில் சங்கத் தலைவர் பொன் சுகந்தன் தலைமையில் இடம்பெற்றது.

‘கிழக்குப் பிரதேசத்தின் அண்மைக்கால இலக்கியச் செல்நெறி’ என்னும் பொருளில் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி செ. யோகராசா அவர்கள் உரை நிகழ்த்தினார். நிகழ்வின் தொடக்கவுரையை சு. குணேஸ்வரன் நிகழ்த்தினார்.

கலாநிதி செ.யோகராசா தனது உரையில் 90 களுக்குப் பின்னர் கிழக்கின் மட்டக்களப்பு> அம்பாறை> திருகோணமலை பிரதேசத்தின் இலக்கியப்போக்கினை மிக விரிவாக எடுத்துரைத்தார். கவிதை> சிறுகதை> நாவல்> புனைவுசாரா இலக்கியங்கள்> சஞ்சிகை மற்றும் சிறுவர் இலக்கியப் போக்கு ஆகியன பற்றி உரை நிகழ்த்தினார்.

நிகழ்வில் எழுத்தாளர் தெணியான்> குப்பிளான் ஐ. சண்முகன்> கலாநிதி த.கலாமணி> செ. சுதர்சன்> இராஜேஸ்கண்ணன் ,அஜந்தகுமார்> இராகவன்> இ.சு முரளீதரன்> பா. இரகுபரன் உட்பட 50 வரையான படைப்பாளிகளும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். மிகக் கனதியாகவும் காத்திரமாகவும் நடைபெற்ற நிகழ்வின் இறுதியில் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

திண்ணைக்காக சு. குணேஸ்வரன்
mskwaran@yahoo.com

Series Navigation

தொகுப்பு :- சு. குணேஸ்வரன்

தொகுப்பு :- சு. குணேஸ்வரன்