அநங்கம் இதழ்-கலந்துரையாடல் நிகழ்வு
கே.பாலமுருகன்
கெடா மாநில எழுத்தாளர் இயக்கத்தின் ஏற்பாட்டில் “அநங்கம்” இலக்கிய இதழ் குழுவின் கலந்துரையாடல் அங்கம் சுப்ரமன்ய ஆலயத்தின் நூல் நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. அநங்கம் இதழாசிரியர் கே.பாலமுருகன் அவர்கள் அநங்கம் இரண்டாவது இதழை அறிமுகப்படுத்தி பேசினார். அந்த அறிமுக உரையில் மலேசிய இலக்கியத்தின் தீவிரத்தன்மையை மேலும் சிறப்பிக்கவும் இளம் எழுத்தாளர்களுக்கும் மூத்த எழுத்தாளருக்கும் தரமான களமாக அமையவும் அநங்கம் இதழ் புதியதாக மலர்ந்து நமது வாசகர்களின் வாசிப்பு தளத்தை உயர்த்த தொடர்ந்து செயல்படும் என்று கூறினார்.
கலந்துரையாடல் அங்கத்தில் மூத்த எழுத்தாளர் திரு.கோ.புண்ணியவான் அவர்கள் தமது “அநங்கம் பொதுவான பார்வையில்” எனும் தலைப்பில் உரையாற்றினார். அவர் குறிப்பிடுகையில் அநங்கம் இதழ் மலேசிய படைப்பிலக்கியத்தின் தரத்தை உயர்த்த ஒரு நல்ல களமாக அமையக்கூடிய எல்லாம் வளர்ச்சி நிலைகளையும் கொண்டுள்ளது என்று கூறினார். மேலும் அநங்கம் இரண்டாவது இதழில் பிரசுரமாகிய எல்லாம் படைப்புகளையும் குறித்து தமது வாசகப் பார்வையில் விமர்சனம் செய்து பேசினார். குறிப்பாக மூத்த தலைமுறை எழுத்தாளர் மா.இராமையா அவர்கள் எழுதிய “ஊம்” சிறுகதை குறித்து பேசியபோது, அவரின் அந்தச் சிறுகதை புதுமைப்பித்தனை போன்ற சமூக விமர்சனத்தை உள்ளடக்கியுள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து நாட்டின் மூத்த பெண் எழுத்தாளரான திருமதி பாக்கியம் முத்து அவர்கள் “அநங்கம் பொதுவான ஆய்வில்” எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை படைத்தார். அக்கட்டுரையில் அநங்கம் இதழின் நோக்கம் குறித்து பாராட்டுத் தெரிவித்தத்துடன், மூத்த எழுத்தாளர்களையும் இளம் எழுத்தாளர்களையும் ஒரே களத்தில் இணைக்கும் அநங்கத்தின் நோக்கம் நாளைய இலக்கிய கட்டமைப்பிற்கு நம்பிக்கையை அளிக்கிறது என்றும் கூறினார். அநங்கம் தொடர்ந்து விவேகத்துடனும் யாரையும் புறக்கணிக்காத நிலையில் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஆக்கம்
கே.பாலமுருகன்
அநங்கம் இதழாசிரியர்
மலேசியா
bala_barathi@hotmail.com
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் நேர்ந்தது என்ன ? (கட்டுரை 49)
- பெண்ணியம்
- அநங்கம் இதழ்-கலந்துரையாடல் நிகழ்வு
- பார்வைக் கோணம் – முத்துலிங்கத்தின் வெளி
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்திரெண்டு
- ஈரம்
- “நெருப்பு” என்று சொன்னாலும் சுடும்”
- உங்கள் பெயர் என்ன?
- தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் கையில் எடுத்த சாதியும் வர்ணமும் – 2
- இன்றைய நாட்காட்டியின் கதை
- உடைந்த மாதாவும் உடையாத மாடுகளும்
- செஞ்சுடரில் பூனைக் கண்கள்
- புல்லாங்குழல்
- மறைதல் பொருட்டு வலி
- வேத வனம் விருட்சம் 17 கவிதை
- என் பாவம் கடவுளுக்குப் பிடித்திருக்கிறது
- தேங்காய்களை தின்று அசைகிற கொடி
- வேத வனம் விருட்சம் 18
- கவிதைகள்
- வ. சுப. மாணிக்கனாரும் வள்ளுவச் செயல் நெறியும்
- தமிழர் கருத்துக் கருவூலம் – அன்றைய விடுகதையும் இன்றைய விடுகதையும்
- இன்னபிறவும்….
- பன்னீர்ப்பூக்கள்
- நினைவுகளின் தடத்தில் – (23)
- அம்பைக்கு இயல் விருது2008ம் ஆண்டுக்கான இயல் விருது
- இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: பாமரனுக்கு…சிந்தனைகள் – பிலேஸ் பஸ்க்கால்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -18 << பூமியின் காயங்கள் ! >>
- நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் – புத்தக அறிமுகம்
- பி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்
- உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்
- ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – புத்தக அறிமுகம்
- தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் கையில் எடுத்த சாதியும் வர்ணமும் – 1
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -2 பாகம் -6
- முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் ! (பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -6)
- பிரபல எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின் மூன்று புத்தம்புதிய நூல்கள்
- உன்னால் வீண்பழி சுமந்தவனின் அறை
- வார்த்தை ஜனவரி 2009 இதழில்…
- தீபச்செல்வனின் ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ புத்தகம் வெளியீடு
- காலம் சஞ்சிகையின் 31 வது இதழ் வெளிவந்துவிட்டது!
- நர்கிஸ் -மல்லாரி பதிப்பகம் இணைந்து நடத்திய ‘முகம்மது இஸ்மாயில் -இபுராஹிம் பீவி நினைவு ‘ நாவல் -கட்டுரைப் போட்டி
- சென்னை புத்தகக் கண்காட்சி 2009-ல் எனிஇந்தியன்.காம்
- கவிதைகள்
- தாகூரின் கீதங்கள் – 63 வாழ்க்கைப் பயணத்தின் முடிவு !
- தீக்குச்சியாகட்டும் புத்தாண்டு
- கவிதைகள்
- “காட்சிகள் மாறுகின்றன…!”