நியூசிலாந்து பயண நினைவுகள்

This entry is part [part not set] of 35 in the series 20070301_Issue

கோ.ந. முத்துக்குமாரசுவாமி



1.மண்ணும் மைந்தரும்

புவியியல்படி நியூசிலாந்து பழமையான நாடு. ஆனால், வரலாற் றின்படி பார்த்தால், உலகில் உள்ள பிற நாடுகளை விட இளமையான நாடு. 1000 ஆண்டுகளுக்கு முன் இங்கு மனிதர்கள் வாழ்ந்திருந்ததற்கு உரிய அடையாளம் எதுவுமே இல்லை. உலகத்தின் பிற பாகங்களில் நாகரிகம் வளர்ந்தும் அழிந்தும் மாறியும் வரலாறு படைத்துக் கொண்டிருக்கையில், இந்த நாட்டில் மன்பதை தோன்றவே இல்லை. இந்த நாட்டைப் பற்றி மக்கள் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை.

நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்குத் தென்கிழக்கே ஏறக்குறைய 1200 மைல் தூரத்தில் உள்ளது.இது, இரண்டு பெரிய தீவுகளும் ஒரு மிகச் சிறிய தீவும் அடங்கிய நாடு, ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் உள்ள கடற்பகுதி `டாஸ்மன் கடல்` என்று ழைக்கப் படுகின்றது. ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் வடக்கிலும் மேற்கிலும் நீண்ட தொலைவில் இத் தீவுக் கண்டத்துக்கும் நியுசிலாந்துக்கும் இறங்கி வரும் படிக்கட்டுக்களைப் போல ஆசியாவின் தீபகற்பங்கள் தோற்றம் அளிப்பதைப் பூகோளப் படங்களில் காணலாம். கிழக்குத் திசையில் பசிபிக் மகா சமுத்திரம் தென் அமெரிக்கக் கரைகளைத் தழுவிக் கொண்டு நீண்டு பரந்துள்ளது. வடகிழக்குத் திசையில் பசிபிக் சமுத்திரத்தில் , பூகோளப் படத்தில் இடம் பெற முடியாத அளவுக்குச் சிறு புள்ளிகளைப் போலச் சிறுசிறு தீவுக் கூட்டங்கள் உள்ளன சமோவா, ·பிஜி , தோங்கா என்பன போல ஒருசிலவே பெயரிட்டுக் குறிப்பிடத் தக்கன. இத்தீவுக் கூட்டங்கள் அனைத்தும் பாலினீஷியத் தீவுகள் என்ற பொதுப் பெயராலேயே அழக்கப் படுகின்றன. நியூசிலாந்துக்குத் தெற்கே1600 மைல்களுக்கு அப்பால் பனிஉறைந்துள்ள அண்டார்டிக் கடற்பகுதியாகிய தென்கோடி உள்ளது.

பரந்து விரிந்த கடலுக்கு நடுவே நியூசிலாந்து மிகச் சிறிய தீவுகளைப் போலத் தோன்றும். ஆனால், இந்நாடு நிலப் பரப்பில் பிரிட்டனை விடப் பெரியது. ஆயினும் நம் ஆந்திரப் பிரதேசத்தைக் காட்டிலும் சிறியது. நம் இந்திய மாநிலங்களில் உத்திரப் பிரதேசம் , இராஜஸ்தான், ஆந்திரா முதலியன நிலப் பரப்பில் நியூசிலாந்தை விட பெரியன. நியூசிலாந்து 270 534 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ளது. வடதீவின் தென்கோடியில் உள்ள வெலிங்டன் இந்நாட்டின் தலைநகர். வடதீவின் நடுவில் இருக்கும் ஆக்லந்து வணிக நகரம். சர்வதேச விமான நிலையம் இங்குதான் உள்ளது.

1350ல், பாலினீஷியத் தீவுகளிளிருந்து `மவுரி` எனும் இனத்தவர்கள் இங்கு வந்து குடியேறியதாக மரபுவழிச் செய்திகள் கூறுகின்றன. வாய்மொழிவழியே வழங்கும் அவர்களுடைய பாடல்களும் கதைகளும் இக்குடியேற்றத்தைப் பற்றிப் பேசுகின்றன.

அவர்களுடைய மூதாதையர்களின் நாடு, பசிபிக் கடலில் உள்ள `ஹவாய்க்கி`(Hawaiki island) தீவு. அங்கு அப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருந்த உள்நாட்டுப் போர்களால் அவர்களின் வாழ்க்கை அங்கு மகிழ்ச்சியாக இருக்க வில்லை. எனவே, `நகாயுவே` எனும் தலைவன் அவனுடைய பகைவர்களிடமிருந்து உயிர் பிழைக்க நாட்டை விட்டு வெளியேறத் துணிந்தான். ( இவன் பெயர் கூப்பே என்றும் சொல்லப்படுகின்றது) தோணியில் தன் துணைவர்களுடன் புகலிடம் தேடிப் புறப்பட்டான். மாதங்கள் பல கழிந்தன. மக்களுக்கு நகாயுவே பற்றி¢ய நினைவுகள் மறையத் தொடங்கின.

நீண்ட இடைவெளிக்குப் பின் ஒருநாள், யாரும் சற்றும் எதிர்பாரத படி, அவன் அங்குத் தோன்றி சுற்றத்தாருக்கு அதிர்ச்சியளித்தான். நெடுந்தொலைவில், தான் கண்டு வந்த, மக்களினம் வாழாத தீவுகளையும், உறைபனியால் மூடப்பட்ட மலைகளையும் இனிய நீரோடைகள் ஆறுகள் பற்றியும் அடர்ந்த காடுகள்,சோலைகள், விலங்குகள், பறக்கவியலாத பெரிய பறவைகள் முதலியன பற்றிக் கதைகதையாகக் கூறினான். தான் கூறும் கதைகள், உண்மையானவை என மெய்ப்பிக்க அவன், தான் கொண்டு வந்த பச்சைக் கற்களையும் ( Green Jade) `மோவா` (Moa)ப் பறவைகளின் இறகுகள், எலும்புக் கூடுகள் முதலியவற்றையும் காட்டினான்.

உறவினர்களும் தோழர்களும் அவன் நிகழ்த்திய சாகசங்களை அக்கறையுடன் கேட்டனர். தம் நாட்டில் நிலவிய துன்பமயமான உள்நாட்டுக் கலவரங் களிலிருந்து தப்பிக்க விரும்பிய அவர்கள், நகாயுவே கூறிய நெடுந்தொலைவில் உள்ள, மக்களினம் இல்லாத அத்தீவுகளுக்குச் சென்று குடியேற முடிவு செய்தனர். அங்கு இயற்கையில் உணவுகள், மதிப்பு மிக்க பச்சைக் கற்கள், பிறசெல்வங்கள் முதலியன பற்றி நகாயுவே யிடமிருந்து அறிந்த செய்திகள் அவர்கள் எண்ணத்திற்கு வலுவூட்டி விரையச் செய்தன. ஆண் பெண் குழந்தைகள் என எண்ணூறு பேர் ஒளிமிக்க வளமான வாழ்க்கையை நாடிப் புறப்படத் தயாராயினர்.

இரண்டு அணியாக நூறுபேர் வரிசையாக அமர்ந்து இயக்கும்படியான நீண்ட தோணிகளை (Canoes) அமைத்துக் கொண்டனர். உணவுக்கும் விதைக்கும் என உருளைக் கிழங்கு, சக்கரைவல்லிக் கிழங்கு (taro) முதலியவற்றைச் சேகரித்து எடுத்துக் கொண்டனர்; மரம் அறுக்க, வெட்ட, தோண்டப் பயன்படும் கருவிகளை நகாயுவே கொண்டு வந்த உறுதியான பச்சைக் கற்களிலிருந்து சமைத்துக் கொண்டனர். மவுரிகள்கற்கால நாகரிகத்தினர். இரும்பை இவர்கள் அறியார். சுமார் 100 அடி நீளம் கொண்ட எட்டுத் தோணிகளில் இவர்கள் புறப்பட்டனர். இந்த எட்டுத் தோணிகளுக்கும் பெயர்கள் கூறப்படுகின்றன. இந்தத் தோணிகளின் பெயர்களே, அவற்றில் பயணித்து வந்த மவுரிகளின் சந்ததியினருக்குப் பெயர்களாக மரபுவழி வழங்கப்பட்டு வருகின்றது.

`தனரோவா` எனும் கடல் தெய்வத்தின் (`Tanaroa` is the God of ocean) துணையுடன் தாங்கள் கருதிப் புறப்பட்ட தீவுகளைக் கண்டனர். நீண்டு நெடிய மேகக் கூட்டத்தால் மூடப்பட்டிருந்த அத்தீவுகளுக்கு `ஒடியரொவா`(`Aotearoa` – The long white cloud or the long light) என்று பெயரிட்டு அழைத்தனர். இதற்கு நீண்ட மேகம் அல்லது நீண்ட ஒளிக்கற்றை என்பது பொருள்.

திடீரென்று தோன்றிய புயலால்,எட்டுத் தோணிகளும் திசை திருப்பப் பட்டு, முன்பே தமக்குள் பேசி வைத்துக் கொண்டாற்போல , தீவுகளின் எட்டு இடங்களில் கரை சேர்ந்தன. அவர்கள் ஏறி வந்த எட்டுத் தோணிகளின் பெயர்களே, தனித்தனி அவற்றில் பயணித்தவர்களுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் பெயர்க ளாயின. இவற்றிலிருந்து பல கிளைகளும் உட்பிரிவுகளும் நாளா வட்டத்தில் தோன்றின. என்றாலும், இக்கூட்டத்தினர் கரை சேர்ந்த இடமே இவர்களின் பூர்வீக பூமி என வழங்கப் படலாயிற்று.

`டாஸ்மன்` (Tasman`) என்னும் டச்சுக்காரர்தான் ஒடியோராவை முதன் முதல் கண்ட ஐரோப்பியர். டாஸ்மன் இத்தீவுகளைக் கண்டாரே ஒழிய இங்குக் கால் பதிக்கவில்லை. இத்தீவுகளை, இவர், புதுநிலம் என்னும் பொருளில், `நொவோ ஜிலேண்டியா` (Novo zelandia) என்றழைத்தார். இதன் ஆங்கில வடிவம் தான் `நியூசிலாந்து` என்பது.

நியூசிலாந்தில் முதன்முதல் கால் வைத்த ஆங்கிலேயர் `கேப்டன் குக்` என்பவர். இவர் தம்முடைய `எண்டோவர்` (Endeavour) என்னும் கப்பலில்`தஹிதி` ( Tahiti ) தீவுகளை நோக்கிச் செல்லும் வழியில் 1769 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 6ஆம் தேதி இங்கு இறங்கினார். கேப்டன் குக் மூன்று முறை நியூசிலாந்து வந்து சென்றதாக வரலாறு கூறுகின்றது.

குக்கின் வருகையின்போது மவுரிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 150,000 இருக்கும் என அவருடைய அறிக்கை கூறுகின்றது. மவுரிகள் நல்ல வலுவான, வீரர்களுக்கு உரிய உடற்கட்டு உடையவர்கள் என்றும், பழுப்பு நிறம் வாய்ந்தவர்கள் என்றும் குக் கூறுகின்றார். உணவுக்காக மவுரிகள் உருளைக்கிழங்கு, வல்லிக் கிழங்கு ஆகியவற்றைப் பயிரிட்டனர் என்றும் மீன்,எலி, பறவைகள்,புழுக்கள் முதலியவற்றைப் பிடித்து உணவாகக் கொண்டனர் என்றும் தங்கள் முன்னோர் கொண்டு வந்த நாய்களின் சந்ததிகளையும் இறைச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டனர் என்றும் குக் கூறுகின்றார்.

நியூசிலாந்துக்கு உரியதெனச் சிறப்பாகக் கூறத் தக்க விலங்கு எதுவும் இல்லை. `மோவா` (Moa), எனும் ஒரு வகைப் பறவையும் `கிவி`( kiwi) எனும் ஒருவகைப் பறவையும் நியூசிலாந்துக்கு உரியன. மோவா இனம் இப்பொழுது அழிந்து விட்டது. மோவாவின் பரிணாமமே இப்பொழுது ஆஸ்திரேலியாவில் தீக்கோழி (ostrich) யாகவும் நியூசிலாந்தில் `கிவி`யாகவும் மாறியுள்ளன. மவுரிகள் அருவி, ஓடைகளின் குளிர் நீரின் சுவை அறிந்திருந்தார்களே அன்றி வேறு `குடி`யின் சுவை அறியார், என்கிறார், குக்.

கேப்டன் குக் நியூசிலாந்திற்கு வழி கண்டறிந்த பின் இங்கு ஐரோப்பியர்களின் குடியேற்றம் (colony) நிகழத் தொடங்கியது. இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து மக்கள் முதலில் இங்குக் குடியேறத் தொடங்கினர். மீன்பிடிக் கப்பல்கள் (Sealers and Whalers), மரவியாபாரிகளின் கப்பல்கள்(Timbers) மூலம் இக்குடியேற்றம் நடைபெற்றது. கத்தோலிக்கர்களுக்கு அஞ்சிய புரோடஸ்டந்துகளும் இவர்களில் அடங்குவர். இன்றும் இங்கு புரோடஸ்டந்துகள்தாம் மிகுதியாக உள்ளனர்.

1800களில் இங்குக் குடியேறியவர்கள், தாம் குடியேறிய இந்த நாட்டையே தம்முடைய தாய் நாடாகப் பாவிக்கத் தொடங்கினர். இவர்கள் இந்த நாட்டின் வளத்தைச் சுரண்டிப் பணக்காரராகித் தம் சொந்த நாட்டிற்குத் திரும்பி வளமாக வாழ எண்ணியவர்கள் அல்லர். தொழிற் புரட்சியின் காரணமாகப் பண்பட்ட தங்கள் நாட்டின் சூழ்நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட நிலைமையை இங்குக் குடியேறியவர்கள் சந்திக்க வேண்டியதாயிற்று. இங்கு வாழ்க்கை என்பது, புதிய நிலத்தை வெற்ற்¢ கொள்ள ஒரு போராட்டமாகவே இருந்தது.

மைக்கேல் கிங் என்னும் நியூசிலாந்து வரலாற்று ஆசிரியர் கூறியுள்ள செய்தி ஒன்றை இங்கு எடுத்துக் காட்ட விரும்புகின்றேன். தமக்குத் தம்முடைய தந்தை வழி, தாய் வழிப் பாட்டிமார் இருவரும் கூறியதாக அவர் கூறும் அச்செய்தி அக்காலத்தில் தம்முடைய சொந்த நாட்டை விட்டுப் பல்லாயிரம் மைல்கள் கடல் கடந்து பல துன்பங்களுக்கு இடையில் இத்தீவுகளில் குடியேறியவர்களின் மனோபாவத்தை விளக்குவதாக உள்ளது. “ சமவாய்ப்பு உள்ள நிலத்தில் உழைப்பால் நல்ல வளமான சிறந்த குடும்பங்களை உருவாக்கவும் , பிறந்த குடியின் செல்வாக்கால் அன்றிக் கடின உழைப்பால் எங்கள் திறமையால், தகுதியால் எங்களுக்கு ஒரு அடையாளத்தை அடையவுமே நாங்கள் இங்கிலாந்தை விட்டு அகன்று இங்கு வந்தோம்.”

( I was reminded frequently by both grand mothers why they had abandoned the United Kingdom : to raise healthy families ina land of open option: and to achieve identity and status on the basis of what they did rather than on the circumstances of their birth”) இத்தகைய கருத்தே இன்றும் நியூசிலாந்தின் குடியேற்றக் கொள்கைக்கு (Immigration Policy) அடித்தளமாக உள்ளது.

ஆங்கிலேயரைத் தொடர்ந்து பிற ஐரோப்பிய நாட்டவரும்

இங்குக் குடியேறத் தொடங்கினர்.

இங்கு வாழ்கின்ற ஐரோப்பியர்கள் அனைவரும் தம்மைக் குடியேறிகள் அல்லது குடியேறியவர்களின் சந்ததியினர் என்று கூறிக் கொள்ளத் தயங்குவதில்லை. ஆனால், தங்களை நியூசிலாந்தினர் என்று அடையாளம் காட்டிக் கொள்ளவே விரும்புகின்றனர்; ஆங்கிலேயர், ஐரிஸ்காரர் என்று கூறுவதை விரும்புவ தில்லை. அனைத்து இனத்தினரும் கூடியதால் உருவான நியூசிலாந்து பண்பாடு ( Aotearoa/ Newezealand culture) தங்கள் மூதாதையரின் நாட்டுக் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டது எனக் கூறித் தங்களை நியூசிலாந்துடன் அடையாளம் காட்டுகின்றனர். வாழும் உரிமையில் முன்னர்க் குடியேறியவருக்கும் அண்மையில் குடியேறியவருக்கும் இடையே எத்தகைய வேறுபாட்டைக் காட்டுவதையும் பொதுவாக இவர்கள் விரும்புவதில்லை.

குடியுரிமை பெற்று இங்கு வாழும் ஐரோப்பியர்களை மவுரிகள் `பாஹியா`(Pakeha) என்று அழைக்கின்றனர். பாஹியா, மவுரி இருவரும் நியூசிலாந்தினர் என்பதில் இவர்களுக்குள் கருத்து வேற்றுமை இல்லை.

பாஹியா என்பது மவுரி மொழியில் வெள்ளைப் பன்றியைக் குறிக்கும் என்றும் தங்களை இழித்துக் கூறும் இப்பெயரைச் சட்டபூர்வமாகத் தடை செய்ய வேண்டும் என்றும் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பியர் சிலர் விரும்பினர். ஆனால், நியூசிலாந்து அறிஞர்கள் pakeha என்பது பிற ஐரோப்பியர்களிடமிருந்து வேறுபடுத்திச் சரியாகத் தம்மை அடையாளம் காட்டும் மரியாதை மிக்க சொல்லே என்று கருதுகின்றனர். குடியேற்றங்கள் நிகழ்ந்த காலத்தில், ஏற்கெனவே குடியேறிய ஒருவன், புதிதாகக் குடியேறியவனை முதலில் சந்தித்த பொழுது, ` நீ நம்மாள் தானே?` எனக் கொச்சை மொழியில் கேட்டு நட்புக் கொள்கின்ற முறையில் `Bugger,yea` எனக் கேட்டான். அது மவுரி காதில் விழுந்தது. தன் காதில் விழுந்த அச்சொல் ஐரோப்பியர் இனத்தைக் குறிக்கும் என நினைந்தான். `Bugger, yea` அவனுடைய உச்சரிப்பில், `Pakeha` என ஆயிற்று, என, இச்சொல்லின் தோற்றத்திற்குச் சமாதானமும் கூறினர். எங்ஙனமாயினும், பாஹியா மவுரி இருவருக்கும் நியூசிலாந்தைத் தவிர வேறு சொந்த நாடு இல்லை.

இந்த இரு இனத்தவரில், மவுரி முந்தி வந்தவர் என்பதால் அவர்களுக்கு உரிய சில சிறப்பு உரிமைகளை இவ்விரு இனத் தலைவர்களும் கூடி, `வைத்தாங்கி` எனும் இடத்தில் 1840 செய்து கொண்ட உடண்படிக்கை (Treaty of Waitangki ) தெளிவாக்குகின்றது. இந்த உடன்படிக்கை ஏற்பட்ட நாளை Waitangki Day எனத் தேசிய விடுமுறை நாளாகக் கொண்டாடுகின்றனர்.

ஐரோப்பியர்களின் குடியேற்றத்தினாலும் அதனைத் தொடர்ந்த போர்களினாலும் மவுரிக்கு நிலவுடைமை இழப்பு ஏற்பட்டது. இழப்புக்கு ஈடு செய்யவும், மவுரியின் மொழி, பண்பாடு மற்றும் பிற உரிமைகளைப் பாதுகாக்கவும் வைத்தாங்கி உடன்படிக்கை வழிவகை செய்கின்றது. இன்று மவுரிமொழி தேசிய மொழியாக, ஆங்கிலத்துடன் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுகின்றது. எழுத்து வடிவம் இல்லாத இம்மொழி ஆங்கில எழுத்துக்களால் எழுதப்படுகின்றது. ஊர்ப் பெயர்கள் மவுரிகள் வழங்கியவாறே வழங்கப்படுகின்றன. பிற்காலத்தில் ஆங்கிலப் பெயர்களாக மாற்றப்பட்டனவற்றில் வரலாற்று முக்கியத்துவம் பெறாதன மீண்டும் சட்டப்படி மவுரி வழங்கியவாறே பெயர் மாற்றம் பெற்றன. மக்களவை, ஊராட்சி மன்றங்கள் முதலிய அமைப்புக்களில் மவுரிக்கு உரிய சிறப்பு உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டுள்ளது. அரசு சுற்றறிக்கைகள் இருமொழிகளிலும் வெளியிடப்படுகின்றது. மவுரியின் நலன்களைக் கவனித்துக் கொள்ள Maori Affair எனத் தனி அமைச்சும் உள்ளது. குழந்தைகள் காப்பகமும் மழலையர் பள்ளிகளும் பெரும்பாலும் மவுரிகள் வசமே உள்ளன.

200 ஆண்டுகளுக்கு முன்னர் நரமாமிசம் சாப்பிடும் cannibals காட்டுமிராண்டிகளாக இருந்த சமுதாயம் இன்று அடைந்துள்ள நாகரிகத்தைப் பார்க்கும்போது, பாஹியா சமுதாயம் எத்துணைப் பெருந்தன்மையுடனும் கடமை உணர்வுடனும் நடந்து கொண்டுள்ளது என்பது தெளிவாகின்றது. அத்துடன் 2000 ஆண்டு நாகரிகப் பழமை பேசும் நம் இந்திய சமுதாயம் நம் சமுதாயத்தின் ஒரு கூறினை மலம் வாருபவர்களாக நாயினும் கீழோராக அடிமைப்படுத்தி வைத்திருந்த அவமானமும் தோன்றுகின்றது.

இன்று நூற்றுக்கு நூறு சுத்தமான மவுரி இல்லை. கலப்பினம்தான் உள்ளது. தாய் அல்லது தந்தை வழியில் ஐரோப்பியர்களின் கலப்பு இவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அனைவருமே கிறித்துவ மதத்தைத் தழுவியுள்ளனர். ஆயினும், இவர்களுக்கு எனத் தனிக் கிறித்துவக் கோட்பாடுகளும் சர்ச்சுகளும் உண்டு. சமயத் தலைவர்களும் போதகர்களும் உண்டு. ஆங்கிலத்தைத் தாய்மொழி போலப் பேசுகின்றனர்.

பாஹியாக்களும் மவுரிகளும் நம்மவர்களை இங்கு எவ்வாறு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதில்தான் சிக்கல்கள் தென்படுகின்றன.

கடந்த நூறு அல்லது நூற்றைம்பது ஆண்டுகளில் நியூசிலாந்தில் ஐரோப்பியர்களே அன்றி, உலகின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் குடியேறியுள்ளனர். மலேயாத் தீபகற்பம், சமோவா, தோங்கா, தஹிதி முதலிய பசிபிக் தீவுகளிலிருந்தும், சீனா இந்தியா பாகிஸ்தான் முதலிய ஆசிய நாடுகளிலிருந்தும் மக்கள் பெரும் அளவில் இங்குக் குடியேறியுள்ளனர். இப்படிக் குடியேறியவர்களுக்கு வேடிக்கைப் பெயர்களும் (knick names ) உண்டு. பசிபிக் தீவுகளிலிருந்து குடியேறியவர்கள் தேங்காய் மிகுதியாக உண்பார்கள், ஆதலால், அவர்களுக்குத் `தேங்காய்கள்`( coconuts) என்று பெயர். ஆசியர்கள், குறிப்பாக இந்தியர்களின் உணவில் உறைப்பான மசாலா இருப்பதால், அவர்களுக்கு மசாலா மன்சீஸ் (Masala munchis) அல்லது க்ரிஸ்ப் மன்சீஸ் (crisp munchis) என்று பெயர். சீனர்களைச்ளுக்குச் `சிங்கீஸ்`(chingis) என்று செல்லப் பெயர். இப்பெயர்க் காரணம் தெரியவில்லை.

கடந்த ஐம்பது ஆண்டுகளில், நியூசிலாந்தில் முதலீடு செய்தும் தொழில் நுட்பம் உதவியும் வளப்படுத்தும் திறம் கொண்டோரை இந்நாடு வரவேற்றது. இதனால் இந்தியர்கள் 1947 தொடங்கியே இந்தியாவிலிருந்தும் ·பிஜி, மலேஷியாவிலிருந்தும் இங்குக் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இத்தகையோரில் குஜராத்தியினர் குறிப்பிடத் தக்கோர். இலங்கையிலிருந்து ஐ.நா.வின் உதவியோடு தமிழர்கள் அகதிகளாக இங்கு வந்துக் குடியுரிமை பெற்றுக் கணிசமான அளவில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தத்தம் தகுதிகளையும் திறமைகளையும் காட்டி அரசனுமதியுடன் குடியேறியவர்கள் என்பதுஅறிய வேண்டும்.

முறையும் தகுதியும் அற்ற குடியேற்றத்தினைத் தடுக்க அரசு point system எனும் முறையை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அத்துடன், இங்குக் குடியேறிய பின் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு அரசு அளிக்கும் இலவச மருத்துவ உதவியோ, வேலையற்ற காலத்துக்கு உதவித்தொகை (dole)யோ , இவை போன்ற எந்த உதவியும் கிடைக்காது. வேலைக்கு உத்திரவாதம் கிடையாது. குடியேறியவர் தன்னுடைய திறமையால் இரண்டாண்டுகள் சமாளித்த பின்னர்தான் அரசாங்க உதவிக்குத் தகுதி உடையவராகின்றார்.

கடந்த சில ஆண்டுகளில், இவ்வாறு குடியேறியவர்களால் தங்கள் வாழ்க்கையும் வாழ்வுரிமைகளும் பாதிக்கப்படுவதாக சில பாஹியாக்களும் மவுரிகளும் கருதி, குடியேற்றத்தை அனுமதிக்கும் அரசின் போக்கைக் கண்டித்து வருகின்றனர். இன்றைய அரசு தொழிலாளர் கட்சியால் அமைக்கப் பட்டது. முக்கிய எதிர்க்கட்சி Newzealand First என்னும் கட்சி. இதன் முக்கிய தலைவர்களில் ஒருவர் வின்ஸ்டன் பீட்டர் என்பவர். இவர் பாராளுமன்ற உறுப்பினரும் கூட. இவர் ஒரு கலப்பின மவுரி. அரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கையால் (Immigration Policy) அரசு ஒதுக்கும் வீடுகளும்,மருத்துவ உதவிகளும் பிறசலுகைகளும் வந்தேறிகளே எளிதில் பெற்று விடுகின்றனர்; சொந்த நாட்டு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி யுள்ளது;தங்களின் வாழ்வுரிமைகளைப் பறிக்கும் இக்குடியேற்றச் சட்டத்தை மாற்ற வேண்டும் என இவர் கடுமையாக வாதாடி வருகின்றார். மேலும், இந்தியா-பாக்கிஸ்தான், சிங்களர்-தமிழர் போன்று, பகை உணர்ச்சி உடையவர்களை ஒருசேர இங்குக் குடியேற அனுமதிப்பதால் உலகில் எங்கெங்கோ நடைபெறும் சண்டைகள் இங்கும் நிகழ் அரசு வாய்ப்பு அளிக்கின்றது என்றும் வின்ஸ்டன் பீட்டர் சாடுகின்றார். அவருடைய தாக்குதல் கணைகளுக்குக் குறி ஆசியர்கள்.குறிப்பாகச் சீனர்களும் இந்தியர்களும்.

வின்ஸ்டன் பீட்டரின் கருத்துக்குக் கணிசமான ஆதரவு வளர்ந்து வருகின்றது.தேசியத் தலைவர்களில் இவருடைய தகுதி சற்று உயர்ந்திருப்பது நாளிதழ்களின் கருத்துக் கணிப்பில் தெரிய வருகின்றது.

சீனர்களும் ஜப்பானியர்களும் இங்குப் பெரும் அளவில் பொருள் முதலீடு செய்கின்றனர். ஜப்பானியர்கள் உல்லாசப் பயணிகளாக அதிக அளவில் இங்கு வருகின்றனர்; இங்குப் பொருள் செலவிடுகின்றனர். நியூசிலாந்தின் பொருளாதாரத் திற்கு இவ்விரு நாடுகளின் உறவு மிக இன்றியமையாதது. எனவே, இவர்களை அரசு கட்டுப் படுத்த விரும்புவதில்லை. இந்தியர்கள் பணி தேடியே இங்குக் குடியேறு கிறார்கள்;. வளமான வாழ்வினை நாடியே இங்கு வருகிறார்கள். இவர்கள் தங்கள் தொழில் திறமையை இங்குப் பணமாக்கிக் கொள்கிறார்களே யன்றிப் பொருள் முதலீடு செய்வதில்லை என்ற கருத்து நிலவுகின்றது.அதனால், அரசு குடியேற்றச் சட்டத்தில் கொண்டு வரும் மாற்றங்கள் இந்தியர்களையே அல்லது இவர்கள் போன்ற ஆசியர்களையே பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகின்றது.

நான் வெலிங்டனில் இருந்த சமயத்தில் பாராளுமன்றக் கூட்டம் நடக்கும் போது நம்மூர்ப் பாணியில் ஒர் போராட்டம் நடந்தது. நம்மூர் அரசியல் பாணியில் `ஒழிக`ப் போராட்டம் நடத்தியவர், நம்மவர்தான். அவர் பெயர் கருணா முத்து. ( இவர் கலைஞர் கருணாநிதியின் உறவினரோஅல்லது மதுரையின் முன்னாள் மேயர் மதுரை முத்துவின் உறவினரோ தெரியவில்லை ). இவர், மற்றும் வேறு இருபது பேருடன் கூடி வின்ஸ்டன் பீட்டருக்கு எதிராகக் குரல் எழுப்பினார். இது, இங்கு அரசியல் நடத்தும் முறைக்கும் மாறாக, `ரசக் குறைவாக` இருப்பதாக நம்மவர்களே கருதுகின்றனர். இந்த `ஒழிக` போராட்டத்தை இங்குள்ள தொலைக் காட்சிகள் படம் பிடித்து நாடு முழுதும், ஏன், ஆஸ்திரேலியாவிலும் கூட, ஒளி பரப்பிக் காட்டின. இதனால், கருணா முத்து ஒரே நாளில் நாடு முழுதும் பேசப்படக் கூடிய ஒருவர் ஆனார். இது, அண்மையில் நியூசிலாந்து அரசியலில் நுழைந்துள்ள இவர், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளச் செய்த `cheap popularity stunt` என்றும் சிலர் கருதுகின்றனர்.

கருணாமுத்து கூறுவதென்ன?

“ நானும் ஒரு `கிவி`(நியூசிலாந்துக்காரர்) என்பதை வின்ஸ்டன் பீட்டர் அறிந்து கொள்ள வேண்டும். ஏழாண்டுகளாக் நான் இந்த நாட்டுக்கு வரிசெலுத்தி வருகின்றேன். இங்குதான் என் குடும்பத்தையும் வளர்த்து வருகின்றேன். நியூசிலந்து சமுதாயத்திற்கு என் பங்குக் கடமையை ஆற்றி வருகிறேன். `Nationnal Party` உறுப்பினராகி அரசியலிலும் பணியாற்றி வருகிறேன். `All Blacks`க்கு ஆதரவாளனாக உள்ளேன்.( All Blacks –நியூசிலாந்தின் ரக்பி அணி). நாங்கள் எங்களைக் `கிவிஸ்` என்றே கருதி வருகிறோம்”

கருணா முத்து 1995ல், மருத்துவராகிய தம் மனைவி, மகளுடன் நியூசிலாந்தில் குடியேறினார். 1999ல் குடியுரிமை பெற்றார். நாட்டின் கவனத்தைத் தம் கருத்தின்பால் ஈர்க்கவே பாராளுமன்றத்தின் முன் இப் போராட் டத்தை நடத்தியதாகக் கூறினார். தம்மைப்போல இங்குக் குடியேறியவர்களைப் பற்றி வின்ஸ்டன் பீட்டர் கூறி வரும் பொய்யும் புனைகதைகளையும் கண்டு விரக்தி அடைந்து, எதிர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகக்கூறினார்.

சென்ற மாதம் நடந்த பார்லிமெண்ட் கூட்டத்தில் வின்ஸ்டன் பீட்டர் நியூசிலாந்தின் Immigration Service ஊழல் மலிந்ததாகி விட்டது என்றும், அதனால் மிக எளிதாக ஆசிய நாடுகளிலிருந்து கற்பழிப்பவர்களும் கொலைகாரர்களும் போதைப்பொருள் கடத்துவோரும் பித்தலாட்டக்காரர்களும் (rapists, murderers, necrophiles, fraudsters) நாட்டுக்குள் அனுமதிக்கப் பட்டு குடிபுகுந்து விடுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். கருணாமுத்துக்கு இது வரம்பு மீறிய குற்றச் சாட்டாகப் பட்டது. இதனால் வின்ஸ்டன் பீட்டர் நியூசிலாந்தில் இன வேற்றுமையையும் பகைமையையும் (Xenophobia and racism) தூண்டுவதாகக் கருணாமுத்து சாடினார். பல்லாண்டுகளாக இங்குக் குடிஉரிமை பெற்று அமைதியாக வாழ்ந்து வருவோர் (immigrants) நியூசிலாந்தின் மக்களா? இல்லையா?, வின்ஸ்டன் பீட்டர் தெளிவாகக் கூற வேண்டும் என அவர் வற்புறுத்தினார்.

தாமும் தம்மைப் போன்றவர்களும் தங்களுடைய தகுதிகளை மெய்ப்பித்துக் குடியுரிமை பெற்று நியூசிலாந்து மண்ணில் தம் குடும்பத்தின் வேரைப் பதித்துள்ளதாகக் கருணாமுத்து கூறுகிறார். அவருடைய மனைவியார் ஒரு பொதுநல மருத்துவர். இங்கு மருத்துவராகப் பணியாற்ற விதித்துள்ள தேர்வுகளை அவர் முதல் தடவையிலேயே திறம்படத் தேறிவிட்டதால் அத் தேர்வுகளை மிக எளிமையா னவை எனக் கருதி விடக் கூடாது என்றும் தாமும் தம் கடின உழைப்பினா லேயே இங்கு வாழ்வதாகவும் சலுகையினாலன்று என்றும் வலியுறுத்தினார்.

“நான் இந்த நாட்டுக்கு விசுவாசம் உள்ளவன். நன்றியுள்ளவன். இந்த நாட்டை `ஸ்பிரிங் போர்டு` ஆகப் பயன்படுத்தி, வளமான வேறு நாடுகளுக்குக் கப்பலேற மாட்டேன். நியூசிலாந்து என்னுடைய நாடு “ என்கிறார், கருணா.

கருணாமுத்து நேஷனல் கட்சி உறுப்பினர். உள்ளாட்சி அரசியலில் அக்கறை காட்டி வருகிறார். `ரியல் எஸ்டேட்` தொழில் செய்கிறார் என எண்ணுகிறேன்.

அரசின் குடியேற்றக் கொள்கைகளைக் கடுமையாக விமர்சிப்பவர்களில் மற்றும் ஒருவர் பீட்டர்பிரெளன் என்பவர். இவரும் Newzealand First கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர். இவர் 1964ல் இங்கிலாந்திலிருந்து வந்து இங்குக் குடியேறியவர்.

புதிதாகக் குடியேறுபவர்களால் இங்கு ஏற்கெனவே வாழ்ந்து வருபவர்களின் வாழ்க்கைத் தரம், பணி நிலை( `working condition`), உழைப்புச் சந்தை ( `labour market`) ஆகியன பாதிக்கப்படுகின்றன. பணிக்கு அமர்த்துபவர்கள், நியூசிலாந்தினருக்குப் பயிற்சி அளித்துப்பணியில் அமர்த்துவதற்குப் பதிலாக, ஏற்கெனவே அத்துறையில் பயிற்சி பெற்றுள்ள குடியேறிகளை அப்பணியில் நியமிக்கிறார்கள். புதிதாகக் குடியேறியவர்கள் குறைந்த ஊதியத்திற்குப் பணி செய்ய ஒத்துக் கொள்கிறார்கள். இத்தகைய போக்கினால் நியூசிலாந்தினர் `கிவிகள்` பெரிதும் பாதிப்புக்கு உள்ளகின்றனர், என்கிறார், பீட்டர் பிரௌன். மேலும், இவருடைய கட்சி, ஆங்கிலம் பேசும் நாட்டினரையும், `கிறித்துவ அறத்தில்` ( Christian Ethics) ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்களையும் மட்டுமே குடியேற அனுமதிக்கலாம். அவர்களே நியூசிலந்தின் நீரோட்டத்தில் எளிதில் கலந்து கரைந்து விடுவர், என்கிறது.. அதாவது, பிற மதத்தவர்களின் குடியேற்றம் தடுக்கப்பட வேண்டும் என்பதை வேறு வகையாகச் சொல்லுகிறது.

ஆளும் கட்சியாகிய தொழிலாளர் கட்சி(Labour party ) சமயச் சார்பு அற்றது;. குடியேறியவர்களின், குறிப்பாக, ஆசிய இனத்தவரின் ஆதரவைப் பெற்றுள்ளது. எதிர்க் கட்சிகள் கிறித்துவ சமயச் சார்பான கருத்துக்களைக் கூறி வருகின்றன. ஆசியர்கள் தத்தம் தனிக் கலாச்சாரங்களை இங்குக் கொண்டு வந்து அவற்றைப் பேணும் தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்து வருவதால் நாட்டில் குழப்பமும் கலவரமும் அமைதி குன்றும் சூழ்நிலையும் உருவாகும் என இக்கட்சிகள் எச்சரிக்கின்றன.

எதிர்க்கட்சிகளின் நெருக்குதலால் அரசு குடியேற்றச் சட்டங்களில் மாற்றங்களை அறிவித்து வருகின்றது. புதிய மாற்றங்கள் ஏற்கெனவே இங்கு வாழ்ந்து வரும் நம்மவர்களை எப்படிப் பாதிக்கும் எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நியூசிலாந்து குடியேற்றச் சட்டத்தில் பல திருத்தங்களை அரசு கொண்டு வந்துள்ளது. ஆது ஆசியர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என அஞ்சப்படுகின்றது. ஆசியர்களினால் மவுரிகளின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன என்னும் வாதத்தைத் தைரியமாக மறுப்பவர்களும் சிலர் உள்ளனர். இலங்கையிலிருந்து இங்குக் குடியேறியுள்ளவர்களில் ஒருவர் The Dominion Post என்னும் நாளிதழில் , “ இலங்கையிலிருந்து இந்த நாட்டில் குடியேறியவர்கள் உயர்ந்த கல்வியும் தொழில் திறமையும் உடையவர்கள்; தகுதியினாலும் திறமையினாலும் உழைத்துச் சம்பாதிப்பவர்கள்; அதிக அளவில் வருமான வரி செலுத்துபவர்கள். அவர்கள் செலுத்தும் வரிப்பணம் அரசு அளிக்கும் உதவித் தொகையாகின்றது. மவுரி இனத்தவரின் உரிமைகள் மூழ்கடிக்கப் பட்டுள்ளன (swamped) என்றால், அது, பிரிட்டீஷாரால்தான், ஆசியர்களால் அல்ல” என எழுதியுள்ளார்.


kumaran388@hotmail.com

Series Navigation

முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி

முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி

நியூசிலாந்து பயண நினைவுகள் – 1.மண்ணும் மைந்தரும்

This entry is part [part not set] of 43 in the series 20070125_Issue

கோ.ந. முத்துக்குமாரசுவாமி


புவியியல்படி நியூசிலாந்து பழமையான நாடு. ஆனால், வரலாற்றின்படி பார்த்தால், உலகில் உள்ள பிற நாடுகளை விட இளமையான நாடு. 1000 ஆண்டுகளுக்கு முன் இங்கு மனிதர்கள் வாழ்ந்திருந்ததற்கு உரிய அடையாளம் எதுவுமே இல்லை. உலகத்தின் பிற பாகங்களில் நாகரிகம் வளர்ந்தும் அழிந்தும் மாறியும் வரலாறு படைத்துக் கொண்டிருக்கையில், இந்த நாட்டில் மன்பதை தோன்றவே இல்லை. இந்த நாட்டைப் பற்றி மக்கள் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை.

நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்குத் தென்கிழக்கே ஏறக்குறைய 1200 மைல் தூரத்தில் உள்ளது.இது, இரண்டு பெரிய தீவுகளும் ஒரு மிகச் சிறிய தீவும் அடங்கிய நாடு, ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் உள்ள கடற்பகுதி `டாஸ்மன் கடல்` என்று ழைக்கப் படுகின்றது. ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் வடக்கிலும் மேற்கிலும் நீண்ட தொலைவில் இத் தீவுக் கண்டத்துக்கும் நியுசிலாந்துக்கும் இறங்கி வரும் படிக்கட்டுக்களைப் போல ஆசியாவின் தீபகற்பங்கள் தோற்றம் அளிப்பதைப் பூகோளப் படங்களில் காணலாம். கிழக்குத் திசையில் பசிபிக் மகா சமுத்திரம் தென் அமெரிக்கக் கரைகளைத் தழுவிக் கொண்டு நீண்டு பரந்துள்ளது. வடகிழக்குத் திசையில் பசிபிக் சமுத்திரத்தில் , பூகோளப் படத்தில் இடம் பெற முடியாத அளவுக்குச் சிறு புள்ளிகளைப் போலச் சிறுசிறு தீவுக் கூட்டங்கள் உள்ளன சமோவா, ·பிஜி , தோங்கா என்பன போல ஒருசிலவே பெயரிட்டுக் குறிப்பிடத் தக்கன. இத்தீவுக் கூட்டங்கள் அனைத்தும் பாலினீஷியத் தீவுகள் என்ற பொதுப் பெயராலேயே அழக்கப் படுகின்றன. நியூசிலாந்துக்குத் தெற்கே1600 மைல்களுக்கு அப்பால் பனிஉறைந்துள்ள அண்டார்டிக் கடற்பகுதியாகிய தென்கோடி உள்ளது.

பரந்து விரிந்த கடலுக்கு நடுவே நியூசிலாந்து மிகச் சிறிய தீவுகளைப் போலத் தோன்றும். ஆனால், இந்நாடு நிலப் பரப்பில் பிரிட்டனை விடப் பெரியது. ஆயினும் நம் ஆந்திரப் பிரதேசத்தைக் காட்டிலும் சிறியது. நம் இந்திய மாநிலங்களில் உத்திரப் பிரதேசம் , இராஜஸ்தான், ஆந்திரா முதலியன நிலப் பரப்பில் நியூசிலாந்தை விட பெரியன. நியூசிலாந்து 270 534 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ளது. வடதீவின் தென்கோடியில் உள்ள வெலிங்டன் இந்நாட்டின் தலைநகர். வடதீவின் நடுவில் இருக்கும் ஆக்லந்து வணிக நகரம். சர்வதேச விமான நிலையம் இங்குதான் உள்ளது.

1350ல், பாலினீஷியத் தீவுகளிளிருந்து `மவுரி` எனும் இனத்தவர்கள் இங்கு வந்து குடியேறியதாக மரபுவழிச் செய்திகள் கூறுகின்றன. வாய்மொழிவழியே வழங்கும் அவர்களுடைய பாடல்களும் கதைகளும் இக்குடியேற்றத்தைப் பற்றிப் பேசுகின்றன.

அவர்களுடைய மூதாதையர்களின் நாடு, பசிபிக் கடலில் உள்ள `ஹவாய்க்கி`(Hawaiki island) தீவு. அங்கு அப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருந்த உள்நாட்டுப் போர்களால் அவர்களின் வாழ்க்கை அங்கு மகிழ்ச்சியாக இருக்க வில்லை. எனவே, `நகாயுவே` எனும் தலைவன் அவனுடைய பகைவர்களிடமிருந்து உயிர் பிழைக்க நாட்டை விட்டு வெளியேறத் துணிந்தான். ( இவன் பெயர் கூப்பே என்றும் சொல்லப்படுகின்றது) தோணியில் தன் துணைவர்களுடன் புகலிடம் தேடிப் புறப்பட்டான். மாதங்கள் பல கழிந்தன. மக்களுக்கு நகாயுவே பற்றி¢ய நினைவுகள் மறையத் தொடங்கின.

நீண்ட இடைவெளிக்குப் பின் ஒருநாள், யாரும் சற்றும் எதிர்பாரத படி, அவன் அங்குத் தோன்றி சுற்றத்தாருக்கு அதிர்ச்சியளித்தான். நெடுந்தொலைவில், தான் கண்டு வந்த, மக்களினம் வாழாத தீவுகளையும், உறைபனியால் மூடப்பட்ட மலைகளையும் இனிய நீரோடைகள் ஆறுகள் பற்றியும் அடர்ந்த காடுகள்,சோலைகள், விலங்குகள், பறக்கவியலாத பெரிய பறவைகள் முதலியன பற்றிக் கதைகதையாகக் கூறினான். தான் கூறும் கதைகள், உண்மையானவை என மெய்ப்பிக்க அவன், தான் கொண்டு வந்த பச்சைக் கற்களையும் ( Green Jade) `மோவா` (Moa)ப் பறவைகளின் இறகுகள், எலும்புக் கூடுகள் முதலியவற்றையும் காட்டினான்.

உறவினர்களும் தோழர்களும் அவன் நிகழ்த்திய சாகசங்களை அக்கறையுடன் கேட்டனர். தம் நாட்டில் நிலவிய துன்பமயமான உள்நாட்டுக் கலவரங் களிலிருந்து தப்பிக்க விரும்பிய அவர்கள், நகாயுவே கூறிய நெடுந்தொலைவில் உள்ள, மக்களினம் இல்லாத அத்தீவுகளுக்குச் சென்று குடியேற முடிவு செய்தனர். அங்கு இயற்கையில் உணவுகள், மதிப்பு மிக்க பச்சைக் கற்கள், பிறசெல்வங்கள் முதலியன பற்றி நகாயுவே யிடமிருந்து அறிந்த செய்திகள் அவர்கள் எண்ணத்திற்கு வலுவூட்டி விரையச் செய்தன. ஆண் பெண் குழந்தைகள் என எண்ணூறு பேர் ஒளிமிக்க வளமான வாழ்க்கையை நாடிப் புறப்படத் தயாராயினர்.

இரண்டு அணியாக நூறுபேர் வரிசையாக அமர்ந்து இயக்கும்படியான நீண்ட தோணிகளை (Canoes) அமைத்துக் கொண்டனர். உணவுக்கும் விதைக்கும் என உருளைக் கிழங்கு, சக்கரைவல்லிக் கிழங்கு (taro) முதலியவற்றைச் சேகரித்து எடுத்துக் கொண்டனர்; மரம் அறுக்க, வெட்ட, தோண்டப் பயன்படும் கருவிகளை நகாயுவே கொண்டு வந்த உறுதியான பச்சைக் கற்களிலிருந்து சமைத்துக் கொண்டனர். மவுரிகள்கற்கால நாகரிகத்தினர். இரும்பை இவர்கள் அறியார். சுமார் 100 அடி நீளம் கொண்ட எட்டுத் தோணிகளில் இவர்கள் புறப்பட்டனர். இந்த எட்டுத் தோணிகளுக்கும் பெயர்கள் கூறப்படுகின்றன. இந்தத் தோணிகளின் பெயர்களே, அவற்றில் பயணித்து வந்த மவுரிகளின் சந்ததியினருக்குப் பெயர்களாக மரபுவழி வழங்கப்பட்டு வருகின்றது.

`தனரோவா` எனும் கடல் தெய்வத்தின் (`Tanaroa` is the God of ocean) துணையுடன் தாங்கள் கருதிப் புறப்பட்ட தீவுகளைக் கண்டனர். நீண்டு நெடிய மேகக் கூட்டத்தால் மூடப்பட்டிருந்த அத்தீவுகளுக்கு `ஒடியரொவா`(`Aotearoa` – The long white cloud or the long light) என்று பெயரிட்டு அழைத்தனர். இதற்கு நீண்ட மேகம் அல்லது நீண்ட ஒளிக்கற்றை என்பது பொருள்.

திடீரென்று தோன்றிய புயலால்,எட்டுத் தோணிகளும் திசை திருப்பப் பட்டு, முன்பே தமக்குள் பேசி வைத்துக் கொண்டாற்போல , தீவுகளின் எட்டு இடங்களில் கரை சேர்ந்தன. அவர்கள் ஏறி வந்த எட்டுத் தோணிகளின் பெயர்களே, தனித்தனி அவற்றில் பயணித்தவர்களுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் பெயர்க ளாயின. இவற்றிலிருந்து பல கிளைகளும் உட்பிரிவுகளும் நாளா வட்டத்தில் தோன்றின. என்றாலும், இக்கூட்டத்தினர் கரை சேர்ந்த இடமே இவர்களின் பூர்வீக பூமி என வழங்கப் படலாயிற்று.

`டாஸ்மன்` (Tasman`) என்னும் டச்சுக்காரர்தான் ஒடியோராவை முதன் முதல் கண்ட ஐரோப்பியர். டாஸ்மன் இத்தீவுகளைக் கண்டாரே ஒழிய இங்குக் கால் பதிக்கவில்லை. இத்தீவுகளை, இவர், புதுநிலம் என்னும் பொருளில், `நொவோ ஜிலேண்டியா` (Novo zelandia) என்றழைத்தார். இதன் ஆங்கில வடிவம் தான் `நியூசிலாந்து` என்பது.

நியூசிலாந்தில் முதன்முதல் கால் வைத்த ஆங்கிலேயர் `கேப்டன் குக்` என்பவர். இவர் தம்முடைய `எண்டோவர்` (Endeavour) என்னும் கப்பலில்`தஹிதி` ( Tahiti ) தீவுகளை நோக்கிச் செல்லும் வழியில் 1769 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 6ஆம் தேதி இங்கு இறங்கினார். கேப்டன் குக் மூன்று முறை நியூசிலாந்து வந்து சென்றதாக வரலாறு கூறுகின்றது.

குக்கின் வருகையின்போது மவுரிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 150,000 இருக்கும் என அவருடைய அறிக்கை கூறுகின்றது. மவுரிகள் நல்ல வலுவான, வீரர்களுக்கு உரிய உடற்கட்டு உடையவர்கள் என்றும், பழுப்பு நிறம் வாய்ந்தவர்கள் என்றும் குக் கூறுகின்றார். உணவுக்காக மவுரிகள் உருளைக்கிழங்கு, வல்லிக் கிழங்கு ஆகியவற்றைப் பயிரிட்டனர் என்றும் மீன்,எலி, பறவைகள்,புழுக்கள் முதலியவற்றைப் பிடித்து உணவாகக் கொண்டனர் என்றும் தங்கள் முன்னோர் கொண்டு வந்த நாய்களின் சந்ததிகளையும் இறைச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டனர் என்றும் குக் கூறுகின்றார்.

நியூசிலாந்துக்கு உரியதெனச் சிறப்பாகக் கூறத் தக்க விலங்கு எதுவும் இல்லை. `மோவா` (Moa), எனும் ஒரு வகைப் பறவையும் `கிவி`( kiwi) எனும் ஒருவகைப் பறவையும் நியூசிலாந்துக்கு உரியன. மோவா இனம் இப்பொழுது அழிந்து விட்டது. மோவாவின் பரிணாமமே இப்பொழுது ஆஸ்திரேலியாவில் தீக்கோழி (ostrich) யாகவும் நியூசிலாந்தில் `கிவி`யாகவும் மாறியுள்ளன. மவுரிகள் அருவி, ஓடைகளின் குளிர் நீரின் சுவை அறிந்திருந்தார்களே அன்றி வேறு `குடி`யின் சுவை அறியார், என்கிறார், குக்.

கேப்டன் குக் நியூசிலாந்திற்கு வழி கண்டறிந்த பின் இங்கு ஐரோப்பியர்களின் குடியேற்றம் (colony) நிகழத் தொடங்கியது. இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து மக்கள் முதலில் இங்குக் குடியேறத் தொடங்கினர். மீன்பிடிக் கப்பல்கள் (Sealers and Whalers), மரவியாபாரிகளின் கப்பல்கள்(Timbers) மூலம் இக்குடியேற்றம் நடைபெற்றது. கத்தோலிக்கர்களுக்கு அஞ்சிய புரோடஸ்டந்துகளும் இவர்களில் அடங்குவர். இன்றும் இங்கு புரோடஸ்டந்துகள்தாம் மிகுதியாக உள்ளனர்.

1800களில் இங்குக் குடியேறியவர்கள், தாம் குடியேறிய இந்த நாட்டையே தம்முடைய தாய் நாடாகப் பாவிக்கத் தொடங்கினர். இவர்கள் இந்த நாட்டின் வளத்தைச் சுரண்டிப் பணக்காரராகித் தம் சொந்த நாட்டிற்குத் திரும்பி வளமாக வாழ எண்ணியவர்கள் அல்லர். தொழிற் புரட்சியின் காரணமாகப் பண்பட்ட தங்கள் நாட்டின் சூழ்நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட நிலைமையை இங்குக் குடியேறியவர்கள் சந்திக்க வேண்டியதாயிற்று. இங்கு வாழ்க்கை என்பது, புதிய நிலத்தை வெற்ற்¢ கொள்ள ஒரு போராட்டமாகவே இருந்தது.

மைக்கேல் கிங் என்னும் நியூசிலாந்து வரலாற்று ஆசிரியர் கூறியுள்ள செய்தி ஒன்றை இங்கு எடுத்துக் காட்ட விரும்புகின்றேன். தமக்குத் தம்முடைய தந்தை வழி, தாய் வழிப் பாட்டிமார் இருவரும் கூறியதாக அவர் கூறும் அச்செய்தி அக்காலத்தில் தம்முடைய சொந்த நாட்டை விட்டுப் பல்லாயிரம் மைல்கள் கடல் கடந்து பல துன்பங்களுக்கு இடையில் இத்தீவுகளில் குடியேறியவர்களின் மனோபாவத்தை விளக்குவதாக உள்ளது. “ சமவாய்ப்பு உள்ள நிலத்தில் உழைப்பால் நல்ல வளமான சிறந்த குடும்பங்களை உருவாக்கவும் , பிறந்த குடியின் செல்வாக்கால் அன்றிக் கடின உழைப்பால் எங்கள் திறமையால், தகுதியால் எங்களுக்கு ஒரு அடையாளத்தை அடையவுமே நாங்கள் இங்கிலாந்தை விட்டு அகன்று இங்கு வந்தோம்.”

( I was reminded frequently by both grand mothers why they had abandoned the United Kingdom : to raise healthy families ina land of open option: and to achieve identity and status on the basis of what they did rather than on the circumstances of their birth”) இத்தகைய கருத்தே இன்றும் நியூசிலாந்தின் குடியேற்றக் கொள்கைக்கு (Immigration Policy) அடித்தளமாக உள்ளது.

ஆங்கிலேயரைத் தொடர்ந்து பிற ஐரோப்பிய நாட்டவரும்

இங்குக் குடியேறத் தொடங்கினர்.

இங்கு வாழ்கின்ற ஐரோப்பியர்கள் அனைவரும் தம்மைக் குடியேறிகள் அல்லது குடியேறியவர்களின் சந்ததியினர் என்று கூறிக் கொள்ளத் தயங்குவதில்லை. ஆனால், தங்களை நியூசிலாந்தினர் என்று அடையாளம் காட்டிக் கொள்ளவே விரும்புகின்றனர்; ஆங்கிலேயர், ஐரிஸ்காரர் என்று கூறுவதை விரும்புவ தில்லை. அனைத்து இனத்தினரும் கூடியதால் உருவான நியூசிலாந்து பண்பாடு ( Aotearoa/ Newezealand culture) தங்கள் மூதாதையரின் நாட்டுக் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டது எனக் கூறித் தங்களை நியூசிலாந்துடன் அடையாளம் காட்டுகின்றனர். வாழும் உரிமையில் முன்னர்க் குடியேறியவருக்கும் அண்மையில் குடியேறியவருக்கும் இடையே எத்தகைய வேறுபாட்டைக் காட்டுவதையும் பொதுவாக இவர்கள் விரும்புவதில்லை.

குடியுரிமை பெற்று இங்கு வாழும் ஐரோப்பியர்களை மவுரிகள் `பாஹியா`(Pakeha) என்று அழைக்கின்றனர். பாஹியா, மவுரி இருவரும் நியூசிலாந்தினர் என்பதில் இவர்களுக்குள் கருத்து வேற்றுமை இல்லை.

பாஹியா என்பது மவுரி மொழியில் வெள்ளைப் பன்றியைக் குறிக்கும் என்றும் தங்களை இழித்துக் கூறும் இப்பெயரைச் சட்டபூர்வமாகத் தடை செய்ய வேண்டும் என்றும் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பியர் சிலர் விரும்பினர். ஆனால், நியூசிலாந்து அறிஞர்கள் pakeha என்பது பிற ஐரோப்பியர்களிடமிருந்து வேறுபடுத்திச் சரியாகத் தம்மை அடையாளம் காட்டும் மரியாதை மிக்க சொல்லே என்று கருதுகின்றனர். குடியேற்றங்கள் நிகழ்ந்த காலத்தில், ஏற்கெனவே குடியேறிய ஒருவன், புதிதாகக் குடியேறியவனை முதலில் சந்தித்த பொழுது, ` நீ நம்மாள் தானே?` எனக் கொச்சை மொழியில் கேட்டு நட்புக் கொள்கின்ற முறையில் `Bugger,yea` எனக் கேட்டான். அது மவுரி காதில் விழுந்தது. தன் காதில் விழுந்த அச்சொல் ஐரோப்பியர் இனத்தைக் குறிக்கும் என நினைந்தான். `Bugger, yea` அவனுடைய உச்சரிப்பில், `Pakeha` என ஆயிற்று, என, இச்சொல்லின் தோற்றத்திற்குச் சமாதானமும் கூறினர். எங்ஙனமாயினும், பாஹியா மவுரி இருவருக்கும் நியூசிலாந்தைத் தவிர வேறு சொந்த நாடு இல்லை.

இந்த இரு இனத்தவரில், மவுரி முந்தி வந்தவர் என்பதால் அவர்களுக்கு உரிய சில சிறப்பு உரிமைகளை இவ்விரு இனத் தலைவர்களும் கூடி, `வைத்தாங்கி` எனும் இடத்தில் 1840 செய்து கொண்ட உடண்படிக்கை (Treaty of Waitangki ) தெளிவாக்குகின்றது. இந்த உடன்படிக்கை ஏற்பட்ட நாளை Waitangki Day எனத் தேசிய விடுமுறை நாளாகக் கொண்டாடுகின்றனர்.

ஐரோப்பியர்களின் குடியேற்றத்தினாலும் அதனைத் தொடர்ந்த போர்களினாலும் மவுரிக்கு நிலவுடைமை இழப்பு ஏற்பட்டது. இழப்புக்கு ஈடு செய்யவும், மவுரியின் மொழி, பண்பாடு மற்றும் பிற உரிமைகளைப் பாதுகாக்கவும் வைத்தாங்கி உடன்படிக்கை வழிவகை செய்கின்றது. இன்று மவுரிமொழி தேசிய மொழியாக, ஆங்கிலத்துடன் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுகின்றது. எழுத்து வடிவம் இல்லாத இம்மொழி ஆங்கில எழுத்துக்களால் எழுதப்படுகின்றது. ஊர்ப் பெயர்கள் மவுரிகள் வழங்கியவாறே வழங்கப்படுகின்றன. பிற்காலத்தில் ஆங்கிலப் பெயர்களாக மாற்றப்பட்டனவற்றில் வரலாற்று முக்கியத்துவம் பெறாதன மீண்டும் சட்டப்படி மவுரி வழங்கியவாறே பெயர் மாற்றம் பெற்றன. மக்களவை, ஊராட்சி மன்றங்கள் முதலிய அமைப்புக்களில் மவுரிக்கு உரிய சிறப்பு உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டுள்ளது. அரசு சுற்றறிக்கைகள் இருமொழிகளிலும் வெளியிடப்படுகின்றது. மவுரியின் நலன்களைக் கவனித்துக் கொள்ள Maori Affair எனத் தனி அமைச்சும் உள்ளது. குழந்தைகள் காப்பகமும் மழலையர் பள்ளிகளும் பெரும்பாலும் மவுரிகள் வசமே உள்ளன.

200 ஆண்டுகளுக்கு முன்னர் நரமாமிசம் சாப்பிடும் cannibals காட்டுமிராண்டிகளாக இருந்த சமுதாயம் இன்று அடைந்துள்ள நாகரிகத்தைப் பார்க்கும்போது, பாஹியா சமுதாயம் எத்துணைப் பெருந்தன்மையுடனும் கடமை உணர்வுடனும் நடந்து கொண்டுள்ளது என்பது தெளிவாகின்றது. அத்துடன் 2000 ஆண்டு நாகரிகப் பழமை பேசும் நம் இந்திய சமுதாயம் நம் சமுதாயத்தின் ஒரு கூறினை மலம் வாருபவர்களாக நாயினும் கீழோராக அடிமைப்படுத்தி வைத்திருந்த அவமானமும் தோன்றுகின்றது.

இன்று நூற்றுக்கு நூறு சுத்தமான மவுரி இல்லை. கலப்பினம்தான் உள்ளது. தாய் அல்லது தந்தை வழியில் ஐரோப்பியர்களின் கலப்பு இவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அனைவருமே கிறித்துவ மதத்தைத் தழுவியுள்ளனர். ஆயினும், இவர்களுக்கு எனத் தனிக் கிறித்துவக் கோட்பாடுகளும் சர்ச்சுகளும் உண்டு. சமயத் தலைவர்களும் போதகர்களும் உண்டு. ஆங்கிலத்தைத் தாய்மொழி போலப் பேசுகின்றனர்.

பாஹியாக்களும் மவுரிகளும் நம்மவர்களை இங்கு எவ்வாறு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதில்தான் சிக்கல்கள் தென்படுகின்றன.

கடந்த நூறு அல்லது நூற்றைம்பது ஆண்டுகளில் நியூசிலாந்தில் ஐரோப்பியர்களே அன்றி, உலகின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் குடியேறியுள்ளனர். மலேயாத் தீபகற்பம், சமோவா, தோங்கா, தஹிதி முதலிய பசிபிக் தீவுகளிலிருந்தும், சீனா இந்தியா பாகிஸ்தான் முதலிய ஆசிய நாடுகளிலிருந்தும் மக்கள் பெரும் அளவில் இங்குக் குடியேறியுள்ளனர். இப்படிக் குடியேறியவர்களுக்கு வேடிக்கைப் பெயர்களும் (knick names ) உண்டு. பசிபிக் தீவுகளிலிருந்து குடியேறியவர்கள் தேங்காய் மிகுதியாக உண்பார்கள், ஆதலால், அவர்களுக்குத் `தேங்காய்கள்`( coconuts) என்று பெயர். ஆசியர்கள், குறிப்பாக இந்தியர்களின் உணவில் உறைப்பான மசாலா இருப்பதால், அவர்களுக்கு மசாலா மன்சீஸ் (Masala munchis) அல்லது க்ரிஸ்ப் மன்சீஸ் (crisp munchis) என்று பெயர். சீனர்களைச்ளுக்குச் `சிங்கீஸ்`(chingis) என்று செல்லப் பெயர். இப்பெயர்க் காரணம் தெரியவில்லை.

கடந்த ஐம்பது ஆண்டுகளில், நியூசிலாந்தில் முதலீடு செய்தும் தொழில் நுட்பம் உதவியும் வளப்படுத்தும் திறம் கொண்டோரை இந்நாடு வரவேற்றது. இதனால் இந்தியர்கள் 1947 தொடங்கியே இந்தியாவிலிருந்தும் ·பிஜி, மலேஷியாவிலிருந்தும் இங்குக் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இத்தகையோரில் குஜராத்தியினர் குறிப்பிடத் தக்கோர். இலங்கையிலிருந்து ஐ.நா.வின் உதவியோடு தமிழர்கள் அகதிகளாக இங்கு வந்துக் குடியுரிமை பெற்றுக் கணிசமான அளவில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தத்தம் தகுதிகளையும் திறமைகளையும் காட்டி அரசனுமதியுடன் குடியேறியவர்கள் என்பதுஅறிய வேண்டும்.

முறையும் தகுதியும் அற்ற குடியேற்றத்தினைத் தடுக்க அரசு point system எனும் முறையை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அத்துடன், இங்குக் குடியேறிய பின் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு அரசு அளிக்கும் இலவச மருத்துவ உதவியோ, வேலையற்ற காலத்துக்கு உதவித்தொகை (dole)யோ , இவை போன்ற எந்த உதவியும் கிடைக்காது. வேலைக்கு உத்திரவாதம் கிடையாது. குடியேறியவர் தன்னுடைய திறமையால் இரண்டாண்டுகள் சமாளித்த பின்னர்தான் அரசாங்க உதவிக்குத் தகுதி உடையவராகின்றார்.

கடந்த சில ஆண்டுகளில், இவ்வாறு குடியேறியவர்களால் தங்கள் வாழ்க்கையும் வாழ்வுரிமைகளும் பாதிக்கப்படுவதாக சில பாஹியாக்களும் மவுரிகளும் கருதி, குடியேற்றத்தை அனுமதிக்கும் அரசின் போக்கைக் கண்டித்து வருகின்றனர். இன்றைய அரசு தொழிலாளர் கட்சியால் அமைக்கப் பட்டது. முக்கிய எதிர்க்கட்சி Newzealand First என்னும் கட்சி. இதன் முக்கிய தலைவர்களில் ஒருவர் வின்ஸ்டன் பீட்டர் என்பவர். இவர் பாராளுமன்ற உறுப்பினரும் கூட. இவர் ஒரு கலப்பின மவுரி. அரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கையால் (Immigration Policy) அரசு ஒதுக்கும் வீடுகளும்,மருத்துவ உதவிகளும் பிறசலுகைகளும் வந்தேறிகளே எளிதில் பெற்று விடுகின்றனர்; சொந்த நாட்டு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி யுள்ளது;தங்களின் வாழ்வுரிமைகளைப் பறிக்கும் இக்குடியேற்றச் சட்டத்தை மாற்ற வேண்டும் என இவர் கடுமையாக வாதாடி வருகின்றார். மேலும், இந்தியா-பாக்கிஸ்தான், சிங்களர்-தமிழர் போன்று, பகை உணர்ச்சி உடையவர்களை ஒருசேர இங்குக் குடியேற அனுமதிப்பதால் உலகில் எங்கெங்கோ நடைபெறும் சண்டைகள் இங்கும் நிகழ் அரசு வாய்ப்பு அளிக்கின்றது என்றும் வின்ஸ்டன் பீட்டர் சாடுகின்றார். அவருடைய தாக்குதல் கணைகளுக்குக் குறி ஆசியர்கள்.குறிப்பாகச் சீனர்களும் இந்தியர்களும்.

வின்ஸ்டன் பீட்டரின் கருத்துக்குக் கணிசமான ஆதரவு வளர்ந்து வருகின்றது.தேசியத் தலைவர்களில் இவருடைய தகுதி சற்று உயர்ந்திருப்பது நாளிதழ்களின் கருத்துக் கணிப்பில் தெரிய வருகின்றது.

சீனர்களும் ஜப்பானியர்களும் இங்குப் பெரும் அளவில் பொருள் முதலீடு செய்கின்றனர். ஜப்பானியர்கள் உல்லாசப் பயணிகளாக அதிக அளவில் இங்கு வருகின்றனர்; இங்குப் பொருள் செலவிடுகின்றனர். நியூசிலாந்தின் பொருளாதாரத் திற்கு இவ்விரு நாடுகளின் உறவு மிக இன்றியமையாதது. எனவே, இவர்களை அரசு கட்டுப் படுத்த விரும்புவதில்லை. இந்தியர்கள் பணி தேடியே இங்குக் குடியேறு கிறார்கள்;. வளமான வாழ்வினை நாடியே இங்கு வருகிறார்கள். இவர்கள் தங்கள் தொழில் திறமையை இங்குப் பணமாக்கிக் கொள்கிறார்களே யன்றிப் பொருள் முதலீடு செய்வதில்லை என்ற கருத்து நிலவுகின்றது.அதனால், அரசு குடியேற்றச் சட்டத்தில் கொண்டு வரும் மாற்றங்கள் இந்தியர்களையே அல்லது இவர்கள் போன்ற ஆசியர்களையே பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகின்றது.

நான் வெலிங்டனில் இருந்த சமயத்தில் பாராளுமன்றக் கூட்டம் நடக்கும் போது நம்மூர்ப் பாணியில் ஒர் போராட்டம் நடந்தது. நம்மூர் அரசியல் பாணியில் `ஒழிக`ப் போராட்டம் நடத்தியவர், நம்மவர்தான். அவர் பெயர் கருணா முத்து. ( இவர் கலைஞர் கருணாநிதியின் உறவினரோஅல்லது மதுரையின் முன்னாள் மேயர் மதுரை முத்துவின் உறவினரோ தெரியவில்லை ). இவர், மற்றும் வேறு இருபது பேருடன் கூடி வின்ஸ்டன் பீட்டருக்கு எதிராகக் குரல் எழுப்பினார். இது, இங்கு அரசியல் நடத்தும் முறைக்கும் மாறாக, `ரசக் குறைவாக` இருப்பதாக நம்மவர்களே கருதுகின்றனர். இந்த `ஒழிக` போராட்டத்தை இங்குள்ள தொலைக் காட்சிகள் படம் பிடித்து நாடு முழுதும், ஏன், ஆஸ்திரேலியாவிலும் கூட, ஒளி பரப்பிக் காட்டின. இதனால், கருணா முத்து ஒரே நாளில் நாடு முழுதும் பேசப்படக் கூடிய ஒருவர் ஆனார். இது, அண்மையில் நியூசிலாந்து அரசியலில் நுழைந்துள்ள இவர், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளச் செய்த `cheap popularity stunt` என்றும் சிலர் கருதுகின்றனர்.

கருணாமுத்து கூறுவதென்ன?

“ நானும் ஒரு `கிவி`(நியூசிலாந்துக்காரர்) என்பதை வின்ஸ்டன் பீட்டர் அறிந்து கொள்ள வேண்டும். ஏழாண்டுகளாக் நான் இந்த நாட்டுக்கு வரிசெலுத்தி வருகின்றேன். இங்குதான் என் குடும்பத்தையும் வளர்த்து வருகின்றேன். நியூசிலந்து சமுதாயத்திற்கு என் பங்குக் கடமையை ஆற்றி வருகிறேன். `Nationnal Party` உறுப்பினராகி அரசியலிலும் பணியாற்றி வருகிறேன். `All Blacks`க்கு ஆதரவாளனாக உள்ளேன்.( All Blacks –நியூசிலாந்தின் ரக்பி அணி). நாங்கள் எங்களைக் `கிவிஸ்` என்றே கருதி வருகிறோம்”

கருணா முத்து 1995ல், மருத்துவராகிய தம் மனைவி, மகளுடன் நியூசிலாந்தில் குடியேறினார். 1999ல் குடியுரிமை பெற்றார். நாட்டின் கவனத்தைத் தம் கருத்தின்பால் ஈர்க்கவே பாராளுமன்றத்தின் முன் இப் போராட் டத்தை நடத்தியதாகக் கூறினார். தம்மைப்போல இங்குக் குடியேறியவர்களைப் பற்றி வின்ஸ்டன் பீட்டர் கூறி வரும் பொய்யும் புனைகதைகளையும் கண்டு விரக்தி அடைந்து, எதிர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகக்கூறினார்.

சென்ற மாதம் நடந்த பார்லிமெண்ட் கூட்டத்தில் வின்ஸ்டன் பீட்டர் நியூசிலாந்தின் Immigration Service ஊழல் மலிந்ததாகி விட்டது என்றும், அதனால் மிக எளிதாக ஆசிய நாடுகளிலிருந்து கற்பழிப்பவர்களும் கொலைகாரர்களும் போதைப்பொருள் கடத்துவோரும் பித்தலாட்டக்காரர்களும் (rapists, murderers, necrophiles, fraudsters) நாட்டுக்குள் அனுமதிக்கப் பட்டு குடிபுகுந்து விடுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். கருணாமுத்துக்கு இது வரம்பு மீறிய குற்றச் சாட்டாகப் பட்டது. இதனால் வின்ஸ்டன் பீட்டர் நியூசிலாந்தில் இன வேற்றுமையையும் பகைமையையும் (Xenophobia and racism) தூண்டுவதாகக் கருணாமுத்து சாடினார். பல்லாண்டுகளாக இங்குக் குடிஉரிமை பெற்று அமைதியாக வாழ்ந்து வருவோர் (immigrants) நியூசிலாந்தின் மக்களா? இல்லையா?, வின்ஸ்டன் பீட்டர் தெளிவாகக் கூற வேண்டும் என அவர் வற்புறுத்தினார்.

தாமும் தம்மைப் போன்றவர்களும் தங்களுடைய தகுதிகளை மெய்ப்பித்துக் குடியுரிமை பெற்று நியூசிலாந்து மண்ணில் தம் குடும்பத்தின் வேரைப் பதித்துள்ளதாகக் கருணாமுத்து கூறுகிறார். அவருடைய மனைவியார் ஒரு பொதுநல மருத்துவர். இங்கு மருத்துவராகப் பணியாற்ற விதித்துள்ள தேர்வுகளை அவர் முதல் தடவையிலேயே திறம்படத் தேறிவிட்டதால் அத் தேர்வுகளை மிக எளிமையா னவை எனக் கருதி விடக் கூடாது என்றும் தாமும் தம் கடின உழைப்பினா லேயே இங்கு வாழ்வதாகவும் சலுகையினாலன்று என்றும் வலியுறுத்தினார்.

“நான் இந்த நாட்டுக்கு விசுவாசம் உள்ளவன். நன்றியுள்ளவன். இந்த நாட்டை `ஸ்பிரிங் போர்டு` ஆகப் பயன்படுத்தி, வளமான வேறு நாடுகளுக்குக் கப்பலேற மாட்டேன். நியூசிலாந்து என்னுடைய நாடு “ என்கிறார், கருணா.

கருணாமுத்து நேஷனல் கட்சி உறுப்பினர். உள்ளாட்சி அரசியலில் அக்கறை காட்டி வருகிறார். `ரியல் எஸ்டேட்` தொழில் செய்கிறார் என எண்ணுகிறேன்.

அரசின் குடியேற்றக் கொள்கைகளைக் கடுமையாக விமர்சிப்பவர்களில் மற்றும் ஒருவர் பீட்டர்பிரெளன் என்பவர். இவரும் Newzealand First கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர். இவர் 1964ல் இங்கிலாந்திலிருந்து வந்து இங்குக் குடியேறியவர்.

புதிதாகக் குடியேறுபவர்களால் இங்கு ஏற்கெனவே வாழ்ந்து வருபவர்களின் வாழ்க்கைத் தரம், பணி நிலை( `working condition`), உழைப்புச் சந்தை ( `labour market`) ஆகியன பாதிக்கப்படுகின்றன. பணிக்கு அமர்த்துபவர்கள், நியூசிலாந்தினருக்குப் பயிற்சி அளித்துப்பணியில் அமர்த்துவதற்குப் பதிலாக, ஏற்கெனவே அத்துறையில் பயிற்சி பெற்றுள்ள குடியேறிகளை அப்பணியில் நியமிக்கிறார்கள். புதிதாகக் குடியேறியவர்கள் குறைந்த ஊதியத்திற்குப் பணி செய்ய ஒத்துக் கொள்கிறார்கள். இத்தகைய போக்கினால் நியூசிலாந்தினர் `கிவிகள்` பெரிதும் பாதிப்புக்கு உள்ளகின்றனர், என்கிறார், பீட்டர் பிரௌன். மேலும், இவருடைய கட்சி, ஆங்கிலம் பேசும் நாட்டினரையும், `கிறித்துவ அறத்தில்` ( Christian Ethics) ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்களையும் மட்டுமே குடியேற அனுமதிக்கலாம். அவர்களே நியூசிலந்தின் நீரோட்டத்தில் எளிதில் கலந்து கரைந்து விடுவர், என்கிறது.. அதாவது, பிற மதத்தவர்களின் குடியேற்றம் தடுக்கப்பட வேண்டும் என்பதை வேறு வகையாகச் சொல்லுகிறது.

ஆளும் கட்சியாகிய தொழிலாளர் கட்சி(Labour party ) சமயச் சார்பு அற்றது;. குடியேறியவர்களின், குறிப்பாக, ஆசிய இனத்தவரின் ஆதரவைப் பெற்றுள்ளது. எதிர்க் கட்சிகள் கிறித்துவ சமயச் சார்பான கருத்துக்களைக் கூறி வருகின்றன. ஆசியர்கள் தத்தம் தனிக் கலாச்சாரங்களை இங்குக் கொண்டு வந்து அவற்றைப் பேணும் தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்து வருவதால் நாட்டில் குழப்பமும் கலவரமும் அமைதி குன்றும் சூழ்நிலையும் உருவாகும் என இக்கட்சிகள் எச்சரிக்கின்றன.

எதிர்க்கட்சிகளின் நெருக்குதலால் அரசு குடியேற்றச் சட்டங்களில் மாற்றங்களை அறிவித்து வருகின்றது. புதிய மாற்றங்கள் ஏற்கெனவே இங்கு வாழ்ந்து வரும் நம்மவர்களை எப்படிப் பாதிக்கும் எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நியூசிலாந்து குடியேற்றச் சட்டத்தில் பல திருத்தங்களை அரசு கொண்டு வந்துள்ளது. ஆது ஆசியர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என அஞ்சப்படுகின்றது. ஆசியர்களினால் மவுரிகளின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன என்னும் வாதத்தைத் தைரியமாக மறுப்பவர்களும் சிலர் உள்ளனர். இலங்கையிலிருந்து இங்குக் குடியேறியுள்ளவர்களில் ஒருவர் The Dominion Post என்னும் நாளிதழில் , “ இலங்கையிலிருந்து இந்த நாட்டில் குடியேறியவர்கள் உயர்ந்த கல்வியும் தொழில் திறமையும் உடையவர்கள்; தகுதியினாலும் திறமையினாலும் உழைத்துச் சம்பாதிப்பவர்கள்; அதிக அளவில் வருமான வரி செலுத்துபவர்கள். அவர்கள் செலுத்தும் வரிப்பணம் அரசு அளிக்கும் உதவித் தொகையாகின்றது. மவுரி இனத்தவரின் உரிமைகள் மூழ்கடிக்கப் பட்டுள்ளன (swamped) என்றால், அது, பிரிட்டீஷாரால்தான், ஆசியர்களால் அல்ல” என எழுதியுள்ளார்.


kumaran388@hotmail.com

Series Navigation

முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி

முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி