கவிதை உருவான கதை-2
எஸ் பாபு
—-
கடந்த 2002ம் ஆண்டு ஒரு வருட ஆராய்ச்சிப்பணிக்காக பிரான்சு நாட்டில் இருந்தேன். ஒரு அமைதியான ஊர். பாரீசிலிருந்து 300 மைல் தெற்கில் உள்ள ஆஞ்சே என்னும் ஊர். குளிர் காரணமாக இரவு ஒன்பது மணிக்கெல்லாம் ஊர் அடங்கிவிடும். எப்போதாவது கடந்து செல்லும் விரைவுக் கார்களின் சப்தம், யாரோ இளைஞர்கள் (பெரும்பாலும் வார விடுமுறைகளில்) பீர் குடித்துவிட்டு சப்தமாக பேசிச் செல்வது தவிர வேறு ஓசைகளற்றன இரவுகள். ஒரு நாள் நாங்கள் குடியிருந்த வீட்டின் எதிர்புற அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து நள்ளிரவு கடந்த நேரம் ஒரு பெண்ணின் அலறல் கேட்டது. நள்ளிரவு கடந்தே தூங்கச் செல்லும் பழக்கமுடைய நான் அரை தூக்கத்திலிருந்து அலறல் ஒலி கேட்டு விழித்தேன். சன்னல் பக்கம் வந்து நின்று எதிர்புற குடியிருப்பை பார்த்தேன். எச்சலனமும் இல்லை. பக்கத்து குடியிருப்புகளிலும் சலனமில்லை. அது சாதாரண அலறல் அல்ல என்பதால் எனக்கு தூக்கம் போய்விட்டது. மனைவியோ ‘என்ன சப்தம் ‘ என்று கேட்டுவிட்டு உறக்கத்தைத் தொடர்ந்தாள். என்னால் முடியவில்லை. இரண்டு மூன்று சிகரெட்டுகளைத் தீர்த்து விட்டு முகந்தெரியா அப்பெண்ணின் அலறலையும் அதன் காரணத்தையும் யோசித்தபடி படுக்கப்போனேன், எனினும் விடியும் வரை தூக்கம் வரவில்லை. இவ்வனுபவத்தின் வெளிப்பாடே கீழ்க்காணும் கவிதை:
வலி
—-
ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும்
எதிர்புற அடுக்குமாடி
குடியிருப்பிலிருந்து
இரவின் அமைதியை
கிழித்துக் கொண்டு வெளிப்பட்டது
ஒரு பெண்ணின் அலறல்
ஒரு கணம் தான்
ஒரே கணம் தான் பொறுத்து
நிசப்தம் வந்து மூடிக்கொண்டது
ஒலியதிர்வுகளை
நெடுநேரமாகியும்
யாதொரு கொலையாளியும்
வெளியேறக் காணேன் நான்
விளக்கேதும் உயிர்கொள்ளாததால்
விபத்தென்றும் கொள்ளமுடியவில்லை
புதிய உயிரொன்று
பிறந்திருக்கலாமென்றால்
பிறந்த் உயிரின் அழுகுரல் தொடரவில்லை
ஏதொன்றும் நிகழாதது போல
தொடரும் இவ்விரவில்
எதற்காகவோ அலறிய
அப்பெண்ணின் துடிப்பினால்
தீர்ந்து கொண்டிருக்கிறது
என் இரவு.
–எஸ். பாபு.
(மேற்கண்ட கவிதை ‘பன்முகம் ‘ காலாண்டிதழில் சூலை-செப்டம்பர் 2002 இதழில் வெளியானது)
அன்புடன்
பாபு
Babu Subramanian
Postdoc
Department of Agriculture, Food and Nutritional Science,
410, Agriculture / Forestry Centre,
University of Alberta,
Edmonton T6G 2P5
Alberta, CANADA.
Office phone: 780-492-1778
Home phone: 780-432-6530
- உணவுச் சங்கிலிகள்
- புழுத் துளைகள் (குறுநாவல் – 4)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -15
- விளிம்பு
- என்னைப் பெத்த அம்மாாாாஆ…
- காடன்விளி
- கல்யாண ரத்து தீர்மானம்
- காயம்
- தயானந்த சரஸ்வதி சொல்லும் கடமை என்ன ?
- நிழல் யுத்தமும், நிஜ யுத்தமும்
- இது எப்படி இருக்கு…. ?
- இந்துத்துவம் = சர்வ மத சமத்துவ சம்மதத்துவம்
- முரண்பாடுகளின் முழுமை
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 1
- அன்புடன் இதயம் – 14 – காற்று
- மலைப்படுகடாம். ஒரு சித்திரம்
- வா
- மைக்ரோசாஃப்ட் – வின்டோஸ் சமாச்சாரங்கள்
- காசு
- டாலர்க் கனவுகள்
- அனுபவம்
- வெற்றி
- மரபும் புதிதும் : இரு கவிதைகள்
- தொழில்நுட்பச் செய்திகள் ஏப்ரல் 15, 2004
- உலக விந்தைகளில் ஒப்பற்ற பொறியியல் உன்னதமான பனாமா கால்வாய் [Panama Canal (1870-1914) The Greatest Engineering Marvel]
- டான் கில்மோர்
- குளிர்பானங்கள்
- ஜெய மோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ : ஓர் அலசல்
- கவிதை உருவான கதை-2
- சரியும் மணல் மடிப்புகள் நடுவே
- நந்திக் கலம்பகம்.
- குதிரைவால் மரம்
- ஜங் அவுர் அமான்!
- என்னோடு என் கவிதை
- ஓட்டப்பந்தயம்
- காலம் சஞ்சிகையின் இலக்கியப் பொழுது
- ஆருயிர்கெல்லாம் ‘வம்பு ‘ செய்யல் வேண்டும்!
- தேவலோகத்தில் ஒரு கடிதப் போக்குவரத்து
- மலர் வசந்தம் – நிழற்படத் தொகுப்பு
- கடிதம் – ஏப்ரல் 25 – சுமதி ரூபனின் ‘வடு ‘
- கடிதங்கள் ஏப்ரல் 15,2004
- 2004-ஆம் ஆண்டிற்கான இலக்கியச் சிற்பி விருது
- கடிதம் – ஏப்ரல் 15, 2004
- வாழும் வகை
- ஏசுநாதர் வாழ்க்கை : நடன நாடகம் – ஏப்ரல் 18 , 2004
- தமிழ்ப் படைப்பிலக்கியத் தடத்தில் மா அரங்கநாதன் படைப்புகள்
- கடிதம் – ஏப்ரல் 15,2004
- உயிர்மைக்கு ஒரு கடிதம்
- யூசுஃபும் கண்ணாடியும் -கதை — 04
- அளவுகோல்
- எந்த செய்தி – யார் பிரசுரித்தது ? தினகரன் – தினத்தந்தி தினமலர்
- என்னைப் பொறுத்தவரை
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள்
- உயிர் தொலைத்தல்
- அம்மணம்
- அவதாரம்
- மன்னித்து விடலாம்….
- பகல் மிருகம்
- தீர்மானிக்காதவரை.. .. ..
- வசந்தத்தின் திரட்சி
- கவிதைகள்
- சத்தியின் கவிக்கட்டு 3
- தமிழவன் கவிதைகள்-ஒன்று
- என் பிரிய தோழி
- வேர்கள்
- துரோகர்(துரோணர்)
- ஓவியம்
- பரம்பொருள்
- புத்தாண்டுப் பொன்மகளே புது அழகாய் நீவருவாய்!
- திரேசா