ஆட்டுக்கறி குருமா

This entry is part [part not set] of 29 in the series 20020617_Issue


தேவையான பொருட்கள்

அரைக்கிலோ ஆட்டுக்கறி

1 பெரிய வெங்காயம் நறுக்கியது

1/2 கோப்பை எண்ணெய்

உப்பு ருசிக்கேற்ப

1 மேஜைக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள்

1 தேக்கரண்டி மஞ்சள் தூள்

1 தேக்கரண்டி ஜீரகத்தூள்

1 கோப்பை தண்ணீர்

கறிக்கு:

1/2 கிலோ தயிர்

1 கோப்பை கடலைமாவு

1 தேக்கரண்டி முழு ஜீரகம்

உப்பு தேவைக்கேற்ப

4 கோப்பை தண்ணீர்

செய்முறை:

வெங்காயத்தை ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும். ஆட்டுக்கறியைச் சுத்தம் செய்து சிறுதுண்டங்களாக நறுக்கி, ஒரு கோப்பை தண்ணீர் ஊற்றி வெங்காயத்தோடு சேர்த்து மூடி மெதுவான தீயில் வேகவைக்கவும். இத்துடன் மசாலாவுக்கு வேண்டிய மஞ்சள், மிளகாய், ஜீரகத்தூள் ஆகியவற்றையும் சேர்க்கவும். தண்ணீர் ஆவியானதும், மேலும் வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில், தயிர், கடலைமாவு, சிறிதளவு உப்பு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு நன்றாகக் கலக்கவும். இத்துடன் 4 கோப்பை தண்ணீர் ஊற்றவும். ஒரு தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதனை சூடு செய்து அதில் முழு ஜீரகத்தைப்போட்டு அதனை இந்த தயிர் கடலைமாவு கலவையில் கொட்டவும். இந்த கலவையை அடுப்பில் ஏற்றி சூடு செய்து கெட்டியாக விடவும். ஆட்டுக்கறி நன்றாக வெந்ததும், அதனை இந்த கறிக்கலவையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். கலவையை மூடி 5 நிமிடத்துக்கு வேகவைக்கவும்.

Series Navigation