பூமியில் உயிர் தோன்றுதலுக்கு வேற்றுலக பங்களிப்பு

This entry is part [part not set] of 30 in the series 20020909_Issue

அரவிந்தன் நீலகண்டன்


இந்த பூமியில் உயிர் எவ்வாறு தோன்றியது ? மனித குலம் தன் வரலாறு முழுக்க கேட்டுக் கொண்டிருக்கும் ஓர் கேள்வி இது. சிருஷ்டி மர்மங்கள் மீதான ஆர்வம் ஒரு உயிரினத் தனிக்கூறாக மனித இனத்தில் துலங்குகிறது.

தொழில் நுட்ப முன்னேற்றம் மனித வரலாற்றின் வேறெந்த சமயத்தையும் விட தற்போது உயிரின சிருஷ்டியின் மர்மத்தை நமக்கு தெளிய வைத்துவிடக் கூடும் என்றே தோன்றுகிறது. ஆனால் உண்மையிலோ நிலை வேறு மாதிரியாக உள்ளது. பிரபஞ்சத்தை -அதன் இயக்கங்களை மிக நுண்ணளவிலும் மிக பிரம்மாண்ட வடிவிலும் நாம் தரிசிக்க வழிவகுத்த தொழில்நுட்பம் உயிர் சிருஷ்டியின் மர்மத்தை ஆழப்படுத்தியுள்ளது என்பது மட்டுமல்ல அம்மர்மத்தின் பல புதிய பரிமாணங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

1903-இல் சுவீடிஷ் அறிவியலாளரான அர்கீனியஸ் ‘அண்டவெளி-விதை பரவல் ‘ எனும் முன்யூகத்தை பூமியில் உயிரின் தோற்றத்தை விளக்க முன்வைத்தார். அண்ட வெளியில் விண்மீன்கள் வெளிஉமிழும் வெப்பத்தின் ஆற்றலைக் கொண்டு கிரகங்களிடையே பயணம் செய்யும் நுண்ணுயிர் கோளங்கள் மூலம் உயிர் இந்த பூமிக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்பதே அவரது யூகம். இந்த முன்யூகத்தின் தவறினை நம் இன்றைய அறிவு மிக நன்றாகவே விளக்குகிறது. அண்டவெளியில் கதிரவன் உட்பட விண்மீன்கள் உமிழும் கதிர்களில் இருப்பது வெறும் வெப்ப ஆற்றல் மாத்திரமல்ல. அர்கீனியஸின் நுண்ணுயிர் கோளங்களின் உயிர்தன்மைக்கான சீரமைப்பினையும் முற்றிலும் அழித்துவிடக்கூடிய கதிர்வீச்சும் அந்த விண்மீன் கதிர்களில் உண்டு. வளிமண்டல பாதுகாப்பற்று இக்கதிர்வீச்சுக்களில் சிக்கும் உயிர்க்கோளங்கள் உடனே அழிவது நிச்சயம்.

1924-இல் ரஷ்ய அறிவியலாளரான அலெக்சாண்டர் ஒப்பாரின் ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார்.

கார்பன் சார்ந்த மூலகங்களால் நிரம்பப்பட்ட புவியின் நீர்நிலைகள், எதிர்ெஎரி வேதித் தன்மை கொண்ட இளம் வளி மண்டலம் இவற்றில் உருவான மூலகக் குழம்பிலிருந்து உலகின் முதல் உயிருருக்கள் தோன்றின எனும் சாத்தியக்கூற்றினை அவர் முன் வைத்தார். இந்த ‘ஆதிகால கரிம மூலகக் குழம்பு ‘ எனும் கோட்பாடு பிரபலமடைந்தது. 1953 ெஇல் இம்முன்யூகம் பரிசோதனைச்சாலையில் அதன் சாத்தியத் தன்மைக்காக ஆராயப்பட்டது.

சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஹெரால்ட் யூரேயின் பட்டதாரி மாணவரான ஸ்டான்லி மில்லர், மீத்தேன், அமோனியா மற்றும் ஹைட்ரஜன் வாயுக்கள் மற்றும் நீர் அடங்கிய ஒரு அறையில் (ஆதி புவியின் வளி மண்டலத்தில் அப்புவியின் நீர்நிலை) மின்ெஅதிர்வுகளை (தொல் பழம் மின் புயல்கள்) ஏற்படுத்திய பின்னர் தெளிவுபடுத்தி எடுத்த கலவையில் உயிரின் அடிப்படை இயங்குதலுக்கு இன்றியமையாதவையான பல மூலகங்கள் ெஅமினோ அமிலங்கள் உட்படெ உருவாகியிருப்பதை கண்டார். கார்ல் சாகன் இதே முறையில் அடினோசின் டிரை பாஸ்பேட் எனப்படும் உயிரின் ஆற்றல் பரிமாற்ற மூலகத்தை உருவாக்கினார். இவ்விதமாக தொல்பழம் நீர்நிலைகளின் கரிம மூலகக் குழம்பிலிருந்து உயிர் உருவானது அறிவியல் உலகில் நிரூபிக்கப்பட்டதோர் கோட்படாயிற்று. டார்வினிய இயற்கைதேர்வு இயக்கம் மூலக அளவிலேயே (சில மூலகங்கள் தம் இயல்பிலேயே மற்ற மூலகங்களை விட உயிரினக் கட்டமைப்பில சிறந்து விளங்குவதால் ‘தேர்வு ‘ செய்யப்படுகின்றன.) நடைபெறுகிறதா இல்லையா எனும் விவாதம் உயிரியலாளரிடையே தீவிரமடைந்தது.

இந்நிலையில் 1979-இல் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் தயால் விக்கிரமசிங்கே, டேவிட் ஆலனுடன் ஆகியோர் பூமியின் வளிமண்டலத்தில் உதிரும் வால்நட்சத்திரத்தின் வால் துசெிகளின் நிறமாலை ஆய்வினை மேற்கொண்டபோது அது காய்ந்த பாக்டாரிய கோளங்களின் தன்மையை ஒத்திருப்பதை கண்டறிந்தார். அவரது சகோதரர் சந்திரா விக்கிரமசிங்கே சர்.பெரெட் ஹோயலுடன் இணைந்து இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில், பூமியில் உயிர்களின் தோற்றம் குறித்து ஒரு துணிகரமான முன்யூகத்தை உருவாக்கினார். அர்கீனியஸ் கூறிய உயிர்கோளங்கள் உண்மையில் வால்நட்சத்திர வால் துசெிகளிலிருந்து உதிர்ந்த பாக்டாரியாக்களாயிருக்கலாம் என்பதே அது. இது ஒரு விளிம்பு கோட்பாடாகவே பிரபல உயிரியலாளர்களாலும் மற்ற அறிவியலாளர்களாலும் மதிக்கப்பட்டது.இதற்கு சில முக்கிய காரணங்கள் இருந்தன. அண்டவெளி துசெிகளும் சரி, எரி விண் கற்களும் சரி பூமியின் வளிமண்டலத்தில் நுழைகையில் உராய்வின் காரணமாக குறைந்தது 200 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்க வேண்டும். மேலும் அண்டவெளியில் உயிர்க்கொல்லி தன்மைகொண்ட புறெஊதா கதிர்கள் போன்றவை நிறைந்துள்ள நிலையில் பாக்டாரியாக்கள் உயிர் வாழ்தல் முடியாததொன்று. (பாலில் பாக்டாரியாக்களை கொல்ல இதே செயல்முறையினை தான் நாம் கடைபிடிக்கிறோம். அண்ட வெளியிலும் வளிமண்டல நுழைதலின் போதும் ஒரு இயற்கையான பாய்சரைசேஷன்தான் நிகழ்கிறது எனலாம்) எனவே ‘அண்டவெளிவெிதை பரவல் ‘ மீண்டும் நிராகரிக்கப்பட்டது.

ஆனால் புத்தாயிரமாண்டின் தொடக்கத்தில் நடைபெறும் அறிவியல் விவாதங்களில், பூமியில் உயிரின் தோற்றம் குறித்த விளக்கங்களில் ‘அண்டவெளிவெிதை பரவல் ‘ முக்கிய இடம் பெறுகிறது. சங்கிலித்தொடராக நிகழ்ந்த பல்வேறு பட்ட அறிவியல் துறை நிகழ்வுகளின் கூட்டு விளைவே இது.

வானொலி அலைவரிசையில் அமைந்த மின்கொந்த அலைகளின் மூலம் அண்டவெளியை ஆராயும் தொலைநோக்கிகள் மூலமாக பல கரிம மூலகங்கள் அண்டவெளியில் கண்டறியப்பட்டு வருகின்றன. இம்மூலகங்களில் உயிரினங்களின் கட்டமைப்பிற்கான மூலகங்களும் அடங்கும். உதாரணமாக, இப்பூமியிலிருந்து 26,000 ஒளி வருடங்களுக்கு அப்பால் ஆகாய கங்கை விண்மீன் குழுவின் மையத்திற்கு அருகில் இராட்சத உருவம் கொண்டு விளங்கும் அண்டெ வெளி துசெிகளில், கிளைகால்டிகைட் போன்ற சர்க்கரைத்தன்மை கொண்ட மூலகங்களை அரிசோனாவின் தேசிய அறிவியல் கழக வான்ெஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எட்டு அணுக்களால் உருவான கிளைகால்டிகைட் ரைபோஸ் மூலகத்தின் மூலக முன்னோடியாகும். ரைபோஸும் அதன் சிறுமூலக மாற்றம் கொண்ட டிஆக்ஸிெரைபோஸும் உயிரின் அதிமுக்கிய மூலகங்களான டிெஎன்ெஏ மற்றும் ஆர்ெஎன்ெஏ அமிலங்களின் அடிப்படை அமைப்பிற்கு இன்றியமையாதவையாகும். ஜனவரி 2001 இல் ஐரோப்பிய விண்ெஆராய்ச்சியாளர்கள் அண்டவெளி துசெிகளில் பென்சீன் மூலகங்கள்

இருப்பதை கண்டறிந்தனர்.

அண்ட வெளியின் மிகப்பெரும் துரெங்களில் உயிரினை உருவாக்கும் மூலகங்களை விண்ணாராய்ச்சியாளர்கள் அறிந்த அதே சமயம், பூமியின் அடி ஆழங்களில் உய்ரின் இருப்பினை புவியியலாளர்களும், உயிரியலாளர்களும் கண்டனர். உதாரணமாக எரிமலைத்தன்மைக் கொண்ட கடல்படுகைகளில் 306 டிகிரி வெப்பத்தில் நுண்ணுயிரிகள் வாழ்வதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். கதிரியக்கத்தால் துயெ¢மையாக்கப்பட்ட உணவுப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அணுஆலைகளின் இருதயப்பகுதிகளில் டெயினோகாக்கஸ் ரேடியோடுயூரான்ஸ் கதிர்வீச்சிலும் உயிர் வாழும் பாக்டாரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ( ‘அண்டவெளிவெிதை பரவல் ‘ கோட்பாட்டாளர்களால் இது அண்டவெளியின் கடின சூழலில் உயிரின் இருப்புக்கான சாத்தியக்கூறினை மெய்ப்பிக்கும் சான்றாகக் காட்டப்படுகிறது. ஆனால் இந்த உயிர்கள் சில அதீத சூழல்களில் இயற்கை தேர்வு மூலம் உருவான உயிர்கள் என்பதால் இவற்றின் இருப்பு ‘அண்டவெளிவெிதை பரவல் ‘ெகோட்பாட்டினை மெய்ப்பிக்கும் சான்றாக கருதமுடியாது என்பதே பொதுவான கருத்தாகும்.) சென்ற சில பத்தாண்டுகளுக்கு முன் அறிவியலாளர்கள் அறிந்திருந்ததை காட்டிலும் இன்று நாம் உயிரின் தகவமைப்புத்தன்மையின் அளப்பரிய அதிசய ஆற்றலினை அறிந்துள்ளோம் என்பதே உண்மை. இந்த ஆற்றல் வால்நட்சத்திர வால்களில் அமர்ந்து விண்மீன் மண்டலங்களை தாண்டி கிரகங்களின் வளிமண்டல உட்பிரவேசித்தலின் பின் அக்கிரகங்களில் உயிர் பரிணாமத்தை தோற்றுவிக்கும் அளவிற்கு தாக்குபிடிக்க முடியுமா ?

செவ்வாய் கிரகத்திலிருந்து எந்த நிகழ்வாலோ அண்டவெளியில் தள்ளப்பட்டதோர் உருளைக்கிழங்கு போன்ற பாறாங்கல் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியின் துருவ பிரதேசத்தில் மோதி புதைந்துகிடந்தது. பின்னர் அது ஆராய்ச்சியாளர்களால் ஆராயப்பட்டபோது ஒரு பெரும் ஆச்சரியத்தை அளித்தது. டேவிட் மெக்கேயின் தலைமையில் அமைக்கப்பட்ட சர்வதேச குழுவினர் அந்த விண்கல்லின் மேல்புறத்தில் குழாய்த்தன்மை கொண்ட வடிவமைப்புகளை கண்டனர். மனித முடியின் ஆரத்தில் 1/25 பரிமாணம் கொண்ட இந்த அமைப்புகள் பாக்டாரியங்களால் ஏற்படுத்தப்படும் வடிவமைப்புகளை பெரிதும் ஒத்திருந்தன. பாக்டாரிய இயக்கங்களால் உருவாக்கப்பட்ட அவ்வடிவமைப்புகள் ALH84001L எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கல் புவியின் வளிமண்டலத்திற்குள் நுழைவதற்கு முன்னே உருவாக்கியிருக்க வேண்டும் என டேவிட் மெக்கே கருதுகிறார். டேவிட் மெக்கேயின் இம்முடிவுகள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் டேவிட் மெக்கேயின் பாக்டாரியா குறித்த முடிவுகளை ஏற்க மறுப்பவர்கள் கூட இவ்விண்கல்லில் இருக்கும் பல்ெஅரோமாடிக் ஹைட்ரோகொர்பன் மூலகங்கள், ALH84001L இப்புவியின் வளி மண்டலத்திற்குள் நுழைவதற்கு முன்பே அதில் படிந்துவிட்டதை மறுக்கவில்லை.

எனில் செவ்வாயில் ஏறக்குறைய 4.5 x 109 ஆண்டுகளுக்கு முன் பல்ெஅரோமாடிக் ஹைட்ரோகொர்பன் மூலகங்களை உருவாக்கும் நிலெவேதியியல் நிகழ்வுகள் நடந்துள்ளன என்பதே பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்துவதுதான். உயிர் தோற்றத்தின் முக்கியமான பரிணாம படிநிலை அது என்பதனை அனைவரும் அறிவர்.

2001ெஇல் பாரதத்தின் புனேயில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விண்ணாராய்ச்சி மையத்தை சார்ந்த ஜெயந்த் விஷ்ணு நர்லிக்கர் 2001ெஇல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் துணையுடன் ஒரு பரிசோதனையை வடிவமைத்து நடத்தினார். டாடா வளிஆய்வு மையமும் இதில் பங்கு கொண்டது. பலுணெ¢ சோதனையின் மூலம் வளிமண்டலத்தின் உயர்ஸெ¢ட்ராட்டோஸ்பியர் தளங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட வளி மண்டல துசெி ஹைதராபாத்தின் செல்லுலெர் மற்றும் மூலக ஆய்வு மையம் மற்றும் வேல்ஸின் கார்டிஃப் பல்கலைக்கழக பரிசோதனைச் சாலைகளிலும் ஆய்வு செய்யப்பட்டது. இப்பரிசோதனை முடிவுகள் வளிமண்டலத்தின் அதிஉயர தளங்களிலும் நுண்ணுயிரிகள் இருப்பதை உறுதி செய்தன. இந்த பாக்டாரியாக்கள் நிலம் சார்ந்த பரிணாமத்தின் விளைவுகள் அல்ல. இவ்விதத்தில் இப்பரிசோதனையே புவிசாரா உயிரின் இருப்பை முதன்முதலாக அறிவியல் ரீதியாக நிறுவிய பரிசோதனையாகும். உலக அறிவியல் வரலாற்றில் ஒரு மகத்தான சாதனை மைல்கல் இது. இப்பரிசோதனை விளைவுகள் பூமியில் உயிர் தோற்றம் குறித்த நமது அறிவியல் நிலைபாடுகளில் ஏற்படுத்தும் தாக்கமும் முக்கியமான தொன்று.

ஏனெனில் சந்திரா-ஹோயல்-நர்லிக்கர் ‘அண்டவெளி-விதை பரவல் ‘ கோட்பாட்டின் முக்கிய முன்கூற்று வளிமண்டல மேல்தளங்களில் நுண்ணுயிரிகள் வாழ்தல்.

அண்டவெளியில் பரவுதலுக்குரிய விதத்தில் நுண்ணுயிரிகள் வாழ்தல் சாத்தியமானதொன்றா ? ஜெர்மானிய விண்வெளி அமைப்பினைச் சார்ந்த ஜெர்டா ஹோர்னெக் ரஷிய துணைக்கோளான ஃபோடானை மையமாகக் கொண்டு செய்த சில முதன்மையான ஆராய்ச்சிகளின் முடிவுகள் இச்சாத்திய கூறு குறித்து ஆராய்கின்றன. பாசிலஸ் சப்டிலிஸ் எனும் பாக்டாரியாவின் உயிர்கோளங்கள் 50 x 106 விண்வெளி கதிர்வீச்சுக்கு ஆளாக்கப்பட்டன. இவை உடனே இறந்தன. பின்னர் க்வார்ட்ஸ் தடுப்புச்சுவருக்கு பின் வைக்கப்பட்ட 50 x 106 உயிர்கோளங்கள் விண்வெளி கதிர்வீச்சுக்கு ஆளாக்கப்பட்டன. இவையும் இறந்தன. பின் செவ்வாய் கிரக விண்கல்லின் வேதித்தன்மையுடன் உருவாக்கப்பட்ட மணல் பூச்சு கொடுக்கப்பட்ட 50 x 106 பாக்டாரிய உயிர்கோளங்கள் விண்வெளி கதிர்வீச்சுக்கு ஆளாக்கப்பட்டன. இவற்றில் 100,000 உயிர்கோளங்கள் மடியாமல் வாழ்ந்தன. செவ்வாய் கிரகத்திலிருந்து ஒரு விண்கல் நேர்கோட்டில் பூமியைத் தாக்க வேண்டுமென்றால் அதற்கு சில வருடங்களே பிடிக்கும். பிரபஞ்ச பரிமாணங்களில் இது ஒன்றும் பெரிய ஆபத்தான பயணம் அல்ல. விண்கற்கள் இப்புவிசொரா பொருட்கள் மிகுதியாக இங்கு வர காரணமாயுள்ளன. கடந்த மூன்று நுறெ¢றாண்டுகளில் மட்டும் பதிவு செய்யப்பட்ட விண்கற்களின் (அண்டார்டிக்க பிரதேசம் தவிர்த்து) எண்ணிக்கை 4660. இவை கொண்டுவரமுடிந்த விண்வெளி பருப்பொருள் அளவு 49,4625 kg . ஒரு செண்டிமீட்டர் நீளம் கொண்ட விண்கல் 10,000 முதல் 100,000 வரை பாக்டாரியாக்களை மற்றும் எண்ணற்ற உயிர்தன்மைக்கு இன்றியமையா கரிம மூலகங்களை கொண்டுவரமுடியும். நம் பூமியின் வயது சற்றேறக்குறைய 4.5 பில்லியன் வருடங்கள். புவியின் உயிர் தோற்றம் குறித்த முழுமையான சித்திரத்தின் வரைச்சீலையின் பரப்பு அண்டவெளியின் கதிரியக்க கதிவீச்சுக்களடங்கிய இருள் வெளியிலும் பரவவேண்டியது கட்டாயமாயிற்று.

பொதுவாக அண்டவெளிவெிதை பரவல் கோட்பாட்டாளர்கள் தீவிர டார்வினிய எதிர்ப்பாளர்களாக உள்ளனர். உண்மையில் டானியல் டெனெட் கூறுவது போல இயற்கைதேர்வு ஒரு இயங்குமுறைக்கான விதிகளின் வடிவமப்பே (algorithm). தான் பற்றி இயங்கும் பொருட்களின் தன்மை குறித்தது மாறுவதல்ல அதன் இயங்குமுறை. புவி சார்ந்த கரிம மூலகங்களடங்கிய தொல் பழம் நீர்நிலையில் மூலக அளவில் இயற்கைதேர்வு நடக்கமுடியுமென்றால், விண்மீன் மண்டலங்களிடையே அண்டவெளியில் கதிவீச்சுக்களால் சக்தி பெற்று உருவான கரிம மூலகங்களிடையேயும் அது நடக்க முடியும். நிச்சயமாக இத்தேர்விற்கான அழுத்தங்கள் மாறலாம். நட்சத்திர துசெிகளில் உருவான மூலகத் தொடர்கள் நம் தொல் பழம் மூதாதை உய்ரினங்களிலும் பின் இயற்கைதேர்விற்கு இணையான உள்ளுறைெஒத்திசைவு மூலமாக நம் செல்களின் ப்ரோகாரியோடிக் தன்மை கொண்ட மைட்டோகாண்டிரியாக்களிலும் கூட இருக்கலாம். எந்த இறை வெளிப்பாடும் ெ எந்த இறை துதெனும் நினைத்தும் பார்க்கமுடியாத அற்புத பிரபஞ்ச இணைவுகள் மூலம் நாம் நம் கற்பனைகளுக்கும் எட்டாத விதத்தில் பிரபஞ்சத்தின் அனைத்தோடும் இணைக்கப்பட்டிருக்கிறோம்.

***

hindoo_humanist@sify.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்