பூனைக் கவிதைகள்

This entry is part [part not set] of 26 in the series 20100620_Issue

செல்வராஜ் ஜெகதீசன்


#

01
கடைசியாய்
காரொன்றில்
அடிபட்டு இறக்குமுன்
அந்தக் கறுப்புப் பூனை
முழித்தது யார்
முகத்திலோ?

o

02
திருடனொருவனை
காட்டிக்கொடுத்த
அடுத்த வீட்டுத்
திருட்டுப் பூனைக்கு
அதற்குப் பிறகும்
அதே பெயர்தான்.

O

03
இருந்தும்
கடந்தும்
போயின
எத்தனையோ.
இன்னும் பல
எங்கோ
எப்படியோ
இருந்து
கடக்க.

O

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி