வெவ்வேறு உலகங்கள்

This entry is part [part not set] of 34 in the series 20100206_Issue

நாவிஷ் செந்தில்குமார்


வீட்டின் முன்னே
பறந்துகொண்டிருந்த
பலூனும்
வண்ணத்துப்பூச்சியும்
ஒரு நூலால்
கட்டப்பட்டிருந்தன…
எது எதை இழுத்துவந்ததென அறிய
நூலை அறுத்தேன்
இரண்டும் வெவ்வேறு திசைகளில்
பயணித்தன
குழந்தைகளின் உலகத்திலிருந்து
தத்தம் உலகத்திற்கு!

Series Navigation

நாவிஷ் செந்தில்குமார்

நாவிஷ் செந்தில்குமார்