சேரா துணை..
செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

முன்பு
மழை அடித்து
பெய்யும் போதெல்லாம்
எழுதி விடுவேன்
ஒரு கவிதை
மழைக்கா
எனக்கா
என்று
புரியாத போதிலும்
மூன்று வரிகள்
முடிந்திருக்கையில்
அடித்து சாத்துகிறாள்
கதவை
மூன்று வரிகளில்
முடிகிறது
என் கவிதை
மழையின் சத்தம்
மட்டும் காதுகளுக்குள்ளே…
இப்போதும்
மழை அடித்து
பெய்யும் போதெல்லாம்
எழுத முயல்கிறேன்
ஒரு கவிதை
–cliffnabird@gmail.com