“வைஷ்ணவ ஜனதோ”
பாஸ்கர்
காந்தியின் ஆங்கில மொழி பெயர்ப்பில் இருந்து தமிழில் மொழி பெயர்த்தது
உண்மையான வைணவன்
ஒரு இயல்பான வைணவன் அவன் எண்ணங்களில்
அடுத்தவர் துன்பம் தன் துன்பமாகும்
அவன் சேவை செய்ய எப்போதும் தயாராக இருக்கிறான்,
அளவிற்கு அதிகமான பெருமையால்
ஒருபோதும் குற்ற உணர்வு இல்லாதவன்.
அவன் எல்லோருக்கும் தலை வணங்குபவன்,
யாரையும் வெறுக்காதவன்,
வார்த்தைகள் மற்றும் செயல்களிலும்
தூய்மையான எண்ணங்களை பாதுகாப்பவன்.
இப்படிப் பட்ட மகனின் தாய் ஆசிர்வதிக்கப்பட்டவள்
அவன் எல்லா பெண்களையும் தன் அன்னையைப் போல் வணங்குகிறான்.
அவன் வேறுபாடில்லாத சமநிலையை பாதுகாக்கிறான்
பொய்யால் அவனுடைய வாய் என்றும் கறை படாது
மேலும் அடுத்தவர் பொருளை தொடுவதும் இல்லை
பாசப் பிணைப்பால் கட்டிப் போட முடியாதவன்.
எப்பொழுதும் ராம நாமத்தில் இணக்கம்,
அவனுடைய உடம்பினுள்ளேயே எல்லா
திருத்தலங்களையும் சொந்தமாக்கிக் கொள்கிறான்.
அவன் ஆசை, ஏமாற்றம
விருப்பு, வெறுப்பு, சினம் இல்லாதவன்.
குஷ்வந்த் சிங் ஆங்கில மூலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தது.
கடவுள் போன்ற ஒரு மனிதன் என்பவன்,
அடுத்தவர்களின் வலியை உணர்பவன்
அடுத்தவர்களின் துன்பத்தை பகிர்ந்து கொள்பவன்
மேலும் பெருமையை வெறுப்பவன்
தன்னை அடியார்க்கு அடியாராக கருதுபவன்,
யாரைப் பற்றியும் ஒரு வார்த்தை கூட தீவினை பேசாதவன்
வார்த்தைகள், உடம்பு மற்றும் மனத்தால் சலனமில்லாமல் தீர்மானத்துடன் இருப்பவன்
அப்படிப்பட்ட பிள்ளையை பெறும் தாய் ஆசிர்வதிக்கப்பட்டவள்.
எல்லோரையும் சமமாக பாவிப்பவன், காமத்தை துறந்தவன்,
தன் தாயை கௌரவிப்பது போல் மற்ற பெண்களையும் மதிப்பவன்
அவன் நாக்கு இறுதி மூச்சு உள்ளவரை பொய்யின் சுவை அறியாது
அடுத்தவர்களின் உலக மோகப் பொருள்களை ரகசியமாக அடைய நினையாதவன்,
துறவின் பாதையில் நடப்பதால்
உலக மோகப் பொருள்கள் மேல் இச்சை இல்லாதவன்,
அவன் உதடுகளில் எப்பொழுதும் ராமனின் நாமம்.
எல்லா புனிதத் தலங்களையும் தன்னுள்ளே கொண்டவன்
பேராசை மற்றும் ஏமாற்றும் குணமற்றவன்,
காமத்தையும் சினத்தையும் வென்றவன்
அப்படிப்பட்ட மனிதன் மூலமாக துறவி நரசையானுக்கு கடவுளை ஒத்த தொலை நோக்குப் பார்வை இருந்தது,
அந்த மனிதன் வழியாக வருகின்ற தலைமுறைகள் அருள் பெறுவார்கள் என்று.
tlbhaskar@gmail.com
http://tlbhaskar.blogspot.com/
- சுய அபிமானம்
- வாழைஇலை
- விஸ்வரூபம் – அத்தியாயம் பதினெட்டு
- இந்த கிண்ணம் நிறைய சந்தோசம்.
- அண்ணா நூற்றாண்டுவிழா திருவிழாக்கள்
- இரத்த பாசம்
- தரமற்ற பொருளை திரும்பப் பெற தயக்கமில்லை!
- கடவுளின் காலடிச் சத்தம் – 7 கவிதை சந்நிதி
- வேதவனம் விருட்சம் 14 கவிதை
- “வைஷ்ணவ ஜனதோ”
- திபேத்தியப் பழமொழிகள்
- சக்திக்குள்ளே சிவம்…
- பள்ளிப்படை கோவில்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன ? [கட்டுரை: 46 பாகம்-1]
- முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் !(பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -2)
- திரு.வி.பி.சிங் நினைவு அஞ்சலிக் கூட்டம்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -2
- பெண் நட்பு பற்று தீ
- காரியம் தொடர் காரணம்
- தாகூரின் கீதங்கள் – 59 மெய்யாய் உன்னை உணர்வது !
- காமெடி சிறுகதைப் போட்டி
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -14 << முடிவில்லாத ஒருவன் >>
- மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
- வார்த்தை டிசம்பர் 2008 இதழில்…