வேத வனம் விருட்சம் 3 கவிதை
எஸ்ஸார்சி
ஆசான் சீடன்
நம்மிருவரையும்
இறையருள் காக்கட்டும்
அறிவின் ஆற்றல்
ஆற்றலின் அர்ப்பணிப்பு
அர்ப்பணிப்பின் அறுவடை
நம்மிருவருக்கும் உரியதாகட்டும்
எதற்காகவும் நமக்குள்
வெறுப்பு அரும்பாதிருக்கட்டும். (நராயண உபநிசத் சாந்தி மந்திரம் )
பகலின் கடவுள்
இரவின் இறை
கதிரவனின் பிரியன்
வல்லமைக்குப்பொறுப்பாளி
புத்தியின் மூலம்
எங்கும் நிறைந்த கடவுள்
படைத்தலுக்குப்பொறுப்பு
என எல்லாரும் வருக
நன்மை தருக.
வளியே
கண்கண்ட தெய்வம் நீ
தோன்றும் உண்மையும்
தோன்றா உண்மையும்
நீயென வணங்குகிறோம்
என்னை எனதாசானை
பேரருள் காக்கட்டும்
என்னை எனதாசானை
காக்கட்டும் அப்பேரருள். ( தைத்ரிய உபநிசத் சாந்தி மந்திரம்)
விண்ணகத்தேவர்களே
எங்கள் காதுகள்
நல்லது கேட்கட்டும்
வணக்கத்திர்குரியவர்களே
எங்கள் கண்கள்
நல்லது காணட்டும்
உடல் உறுதி தாரும்
உம்மை வணங்கி எழுந்திடவே
இந்திரன் இனிமை தருக
அனைத்துமறிந்தஅதவன்
மங்கலம் தருக
தீமை விரட்டும்
பறைவைக்கருடன்
நல்லதே தருக
வியாழக்கடவுன் நமக்கு
விழுமியம் அருள்க. (மாண்டூக்ய உபநிசத் சாந்தி மந்திரம்)
வேதத்தின் சிகரமாய்
அதுவே எல்லாமாய்
நிறைந்த ஔங்காரம்
அறிவொளியொடு சேர்க்கட்டும் என்னை
ஆரோக்கியம் பெறுக
என் உடல்
என் நா
இன்சொல் நவிலுக
என் செவிகள்
செவ்வியது கேட்க
அறிவுத்திரையிட்டு
அப்பாலிருப்பவனே
நான் செவியுற்ற
செம்பொருள்
நீங்காதிருக்கட்டும்
என்னை விட்டு. “
வளம் தரு
வள்ளல் வாழ்க
அறம் ஔங்கு
அண்ணல் வாழ்க
மானுடர் எல்லாரும்
நன்மையே பெருக
செடிகொடிகள்
செழித்தோங்கட்டும்
புவி மீது.
இரண்டு கால்கள்
உற்றவை
நான்கு கால்கள்
பெற்றவை
மானுடர் எல்லாரும்
பெறுக மங்கலம். “
நல்லது செய்யவே
விழையும் நமக்கு
காற்று இனிமை தருக
ஒடும் நதிகள்
இன்சுவை நீர்கொணர்க
செடி கொடிகள்
ஔங்குக செழித்து
இரவும் பகலும்
நன்மை தருவிக்கும்
வானகத்தந்தை
இனியன அருள்க
பூமித் தாவரங்கலின்
பொறுப்பான நிலா
இன்பம் பொழிக
பசுக்களின் பால்வளம்
செழிக்கட்டும் பெறுகியே “
essarci@yahoo.com
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பரிதி குடும்பத்தில் ஒன்றான புளுடோ ஏன் விலக்கப் பட்டது ? [கட்டுரை: 42]
- பாரதியின் நினைவுநாள் செப் 11 – பாரதி
- அவஸ்த்தை
- வேத வனம் விருட்சம் 3 கவிதை
- இணையத்தமிழின் நிறைகளும் – குறைகளும்
- “கூடா நட்பல்ல: தேடா நட்பு!’ ராஜாஜி உறவு பற்றி அண்ணா
- மும்பை நகரம் – இந்தி ஆதிக்கம் – மராத்திய இன உணர்வு
- வீட்டுக்குப் போகணும்
- “தோற்றுப்போய்…..”
- பயணம்
- பங்குருப்பூவின் தேன்.
- சாமி கண்ண குத்திடுச்சு
- காற்றுக்காலம்.
- “காண்டாமணி தயாரிப்பில் 3 தமிழ்ப்படங்கள்”
- வேப்பமரம்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -3
- நகைப்பாக்கள்-சென்ரியூ
- தாகூரின் கீதங்கள் – 48 எல்லையற்ற இன்ப துன்பம் !
- அப்பனாத்தா நீதான்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 8(சுருக்கப் பட்டது)
- வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008 வெளியீடு
- விம்பம் – குறும்பட விழா 2008ம் சிறந்த படங்களுக்கான விருதும்
- கிறிஸ்தவ பயங்கர வாதம் – ஒரு சர்வ தேச நிஜம்
- செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 2
- கவிதைகள்
- “தமிழ் இணையப் பயிலரங்கம்” – தருமபுரி.
- இரண்டு கவிதைகள்
- Venkat Swaminathan’s praise for the Tamil Dictionary brought out by Crea
- வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
- மகாகவி பாரதி நினைவரங்கம்
- நூல் விமர்சன அரங்கு
- மின்சாரக் கம்பியோடு நம்பிக்கையோடு பேசும் ஒற்றைக் குருவி
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஏழு