“பாலைவனத்தில் பூக்களைத் தேடி”

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

கே.பாலமுருகன்



பாலைவனத்தில்
ஆகக் கடைசி
காதலன் நான் மட்டும் தான்!

வெகுத் தொலைவில்
காதலர்கள்
வீடு திரும்பிக் கொண்டிருப்பது
கானல் நீர்போல
தெரிகிறது!

இவையனைத்தும்
பிரமை! மாயை!
காதலி மீண்டும் மீண்டும்
தேற்றி அனுப்பிக் கொண்டிருக்கிறாள்
பாலைவனத்தில்
பூக்கள்
கிடைக்குமென்று!

காதலர்கள் என்றுமே
ஏமாற மாட்டார்கள்
என்று அவளுக்காக
இன்னமும்
பாலைவனத்தின் வெயிலில்
பூக்களுக்காக
நடந்து கொண்டிருக்கிறேன்!

இப்பொழுது
நானும் அவளும்
பாலைவனத்தின்
இருதுருவங்களில்!

சூன்யம் நிரம்பி
பிரக்ஞையையும்
இழந்துவிட்டேன்!

வெகு சீக்கிரத்தில்
பாலைவனப் பூக்கள்
கிடைத்துவிடும்
என்ற நம்பிக்கையில். . .


கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்