வஞ்சியென்றால் என்னை…

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

சக்தி சக்திதாசன்



மேகக்கூட்டமாய் வந்து போகிறேன்
ஏனோ சுட்டெரிக்கும் சூரியனாய்
எனை எரித்தாய்

காதலெனும் தாகத்தினால் தவித்தேன்
கண்களிலே நீராக உனை நீயே
காட்டிக் காட்டி வதைத்தாய்

பருவமெனும் பசியெடுத்து நானும்
இளமையெனும் வறுமையினுள் வாடுகிறேன்
பழுத்திருக்கும் கனியாக பாவை நீயும் ஏன் தான்
கண்முன்னே வந்து வந்து போகின்றாய்

மையலென்னும் சிலந்தி வலையை
மைவிழியினால் பின்னி வைத்து நீயோ
சிக்கி நானும் தவிக்கும் அழகை
சிறிது சிறிதாய் ரசிக்கிறாய்

வஞ்சி என்னும் பெயர் உனக்கு
வைத்தவர்கள் நம்ப்பிக்கை பொய்க்கவில்லை
வாலிபத்தின் வாசலிலே நானும் படுகின்ற
வதைகளுக்கும் முடிவில்லை


sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்