சி. ஜெயபாரதன், கனடா.
கண்ணதாசன் பாடிய
காதல் புறாக்களைத் தேடுகிறேன் !
அவன் பேச நினைப்ப தெல்லாம்
அவள் பேசுவதில்லை !
ஒருமனத் தம்பதிகள்
உலகில் எங்குள்ளார் சொல்வீர் ?
அங்கிங்கு எனாதபடி எங்கும்
என் விழி காண்பது
இருமனத் தம்பதி !
திருமணத் தம்பதியர் உள்ளோட்டம்,
தேடல்கள் என்ன ?
பெண்ணை உணர்ச்சிப்
பிழம்பாய் ஆட்டிப் படைப்பவை
காம சுரப்பிகள் !
ஆணைத் தர்க்க வாதியாய்
ஆக்குவது
அவனது சுரப்பிகள் !
நெஞ்சுக்கும், மூளைக்கும்
நிற்குமோ
ஆயிரமாண்டு போர் ?
ஒருமனத் தம்பதிகள் என்று
கவிதை புனையலாம் !
இவன் ஒன்று நினைப்பாள் !
அவள் ஒன்று நினைப்பாள் !
விதி விளையாடும் !
ஆயினும்
இடிமழை வரும் போது
இருவரும்
ஒரு குடைக்கீழ் நடப்பார் !
+++++++
S. Jayabarathan [jayabarat@tnt21.com] September 13, 2007
- விநாயக சதுர்த்தி
- தனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்
- பிழைதிருத்தம் 15. கைமாறு – கைம்மாறு
- கிணறு/பறவையின் இறகு
- ஒருமனத் தம்பதிகள் ?
- காதல் நாற்பது – 38 முதலில் தந்த முத்தங்கள் !
- “இதற்கு முன்”
- அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா ? அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா ? -2
- இசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)
- “படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி
- 8$
- அந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…
- சி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்
- கடிதம்
- மகாகவி பாரதி பட்டி மன்றம்
- எஸ் பொ பவளவிழா
- ஹெச்.ஜி.ரசூலின் எழுத்துக்கள்
- நிகழ்ச்சிகள் – தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும்
- இளையர்கள் இன்று
- நடக்க முடியாத நிஜம்
- யாருக்கு வாய்க்கும்….
- பரிட்டவணை
- மார்வின் ஹாரிஸ் – கலாச்சார பொருள்முதல் வாதம்
- அநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்
- காஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்
- புதிய விடியலுக்கு பாரதியின் அறிவு ஒளி
- சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3
- பார்கெய்ன்
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்!
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 27
- தவறு யாருடையது?
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 23