கார்த்திக் பிரபு
ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்தது
அந்த பாழடைந்த கிணறு
இரண்டு தண்ணீர் பாம்புகள்
ஒரு பெரிய ஆமை,சிறிய புறாக் கூடு
கலங்கிய தண்ணீர் உடைந்த படிகள்
பக்கத்து மஞ்சநத்தியின் உதிர்ந்த பழங்கள்
இது தான் அக்கிணற்றின் அடையாளங்கள்
முதலில் அதன் இருள் பயம் தந்தாலும்
நாளடைவில் எங்கள் நண்பனாகியது
எப்படி குதித்தாலும் எங்களை மேலேற்றும்
முதன் முதலில் நீச்சல் பயின்ற இடம்
அதன் அடியில் தான் முதல் சிகரெட்
கிரிக்கெட் ஆடிவிட்டு இளைப்பாறல்
பக்கத்து வீட்டு அக்காவின் சிரிப்பு
போலீஸ் காரரின் புதுமனைவி
நண்பனின் தங்கையின் காதல்
என எங்கள் வயதுக்கே உரிய
விஷயங்களின் விவாதங்கள்
எங்கள் ரகசியங்கள் அனைத்தும் தெரியும்
இருந்தாலும் அமைதிக் காக்கும்
இது வரை யாரையும் காவு கொண்டதில்லை
இரவில் அதன் மடியில் நிலவு தெரியும் வரை
கதைத்திருப்போம் நாங்கள்
காலம் கடந்தது உலகம் அழைத்தது
எங்கள் திசைகள் மாறின
கடிதத் தொடர்பில் மறவாமல்
கேட்போம் அக்கிணற்றை பற்றி
அதனடியில் கழித்த காலங்கள்
எங்கள் வசந்த காலமென்றோம்
ஒரு நாள் நண்பனின் கடிதம்
அவள் தங்கையை காவு கொண்டது
அக்கிணறென தெரிந்த போது பதறினோம்
நாளடைவில் தொடர்பறுந்தது
இந்நேரம் இன்னொரு தலைமுறை
அதனடியில் காலம் கழிக்கும்
என நினைத்தவாறே
வெயில் தாழ்ந்த அந்த மாதத்தில்
ஊருக்கும் செல்கையில் விசாரித்தேன்
அச்சம்பவத்திற்கு பின் ஒருமுறை
கிணற்றுக்கு குளிக்கச் சென்ற
சிறுவனின் காலை பிடித்திளுத்திருக்கிறாள்
நண்பனின் தங்கை அதன் பிறகாரும்
செல்வதில்லையாம் அக்கிணற்றுக்கு
அருகில் சென்ற போது இன்னும்
சிதிலமடைந்திருந்தது கிணறு
புதர் மண்டி நிறம் மாறியத் தண்ணீருடன்
அமைதியாய் ஒன்றுமே
நடக்காது போலிருந்தது’
பேய்க் கிணறு…..
பறவையின் இறகு
கண் பொத்தி கைப்பிடித்து
அழைத்து செல்கிறது உன் சிரிப்பு
மூங்கில் நிறைந்த மலைகள் கடந்து
பிராணிகள் புணரும் காடு கடந்து..
கண் திறந்து விட்டு சுழன்றடிக்கும்
புயலின் பின்னால் ஓடுகிறாய்
திரும்ப வர வழித் தெரியாமல்
உன் சுவடுகள் மறைவதை கவனியும் போது
என் மேல் வந்து விழுகிறது
திசைத் தெரியாமல் பறக்கும்
ஒரு பறவையின் இறகு……
gkpstar@gmail.com
- விநாயக சதுர்த்தி
- தனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்
- பிழைதிருத்தம் 15. கைமாறு – கைம்மாறு
- கிணறு/பறவையின் இறகு
- ஒருமனத் தம்பதிகள் ?
- காதல் நாற்பது – 38 முதலில் தந்த முத்தங்கள் !
- “இதற்கு முன்”
- அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா ? அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா ? -2
- இசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)
- “படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி
- 8$
- அந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…
- சி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்
- கடிதம்
- மகாகவி பாரதி பட்டி மன்றம்
- எஸ் பொ பவளவிழா
- ஹெச்.ஜி.ரசூலின் எழுத்துக்கள்
- நிகழ்ச்சிகள் – தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும்
- இளையர்கள் இன்று
- நடக்க முடியாத நிஜம்
- யாருக்கு வாய்க்கும்….
- பரிட்டவணை
- மார்வின் ஹாரிஸ் – கலாச்சார பொருள்முதல் வாதம்
- அநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்
- காஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்
- புதிய விடியலுக்கு பாரதியின் அறிவு ஒளி
- சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3
- பார்கெய்ன்
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்!
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 27
- தவறு யாருடையது?
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 23