உணர்வுகள்

This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue

வைகைச் செல்வி


கங்குகள்
உள்ளுக்குள்
உறைந்திருக்கும்.
திடீரென்று பற்றி
எரியும்.

அலைகள்
எழுந்து
கரையை
உடைக்க
புரண்டு புரண்டு
ஓலமிடும்.

மின்னலடிக்கும்
ஓர் இரவில்
மழை வரப் பார்க்கும்
வேளையில். . . .

எங்கோ ஒரு
இடியோசையில்
எங்கோ ஒரு
குதிரை
கயிற்றை அறுத்து
வேலியைத் தாண்டும்.

++++++++

அனுப்பியவர்: சி. ஜெயபாரதன், கனடா

Series Navigation

வைகைச் செல்வி

வைகைச் செல்வி