தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
நேசிப்பதாய் நீ எனக்கு
உறுதி சொல்லிய
பிறகு
முதல் நாள் சூரிய
உதய மான போது
நிலவின் வருகைக்கு நான்
காத்திருந்தேன் !
சீக்கிரம் உறுவு பூண்டு
நிரந்தரம்
ஆக்கவரும் பந்தங்களை எல்லாம்
நீக்க வேண்டும் !
துரிதமாய்க் காதல் புரியும்
நெஞ்சங்கள்
வெறுப்பையும் காட்டும் விரைவில் !
அவ்வித மனிதக் காதலை
விரும்பேன்
என்னலத்தைக் கருதினால் !
இசைப் பண் முரணாக
எழும்பும்
தேய்ந்த வயோலின் நான் !
சிறந்த பாடகர் அதன் மீது
சினம் கொள்வார்,
தனது பாடல் நாசமாகு மென்று !
அவசரமாய் ஆக்கும்
தாளம்
தப்பிய சுதிப் பாடல்
தள்ளப்படும் கீழே !
எனது தவறெனத் தோன்றாது
உனக்குத்தான்
ஒரு தவறிழைத்தேன் !
முறிந்த பண்ணிசைக் கருவியிலும்
முழுமை யான கானம்
எழுப்பும்
வல்லவர் கரங்கள் !
மேலும்
உன்னத ஆத்மாக்கள்
பேராவலோடு அதைப் புரிந்திடலாம்
ஓரடியிலே !
************
Poem -32
Sonnets from the Potuguese
By: Elizabeth Browing
The first time that the sun rose on thine oath
To love me, I looked forward to the moon
To slacken all those bonds which seemed too soon
And quickly tied to make a lasting troth.
Quick-loving hearts, I thought, may quickly loathe;
And, looking on myself, I seemed not one
For such man’s love!–more like an out-of-tune
Worn viol, a good singer would be wroth
To spoil his song with, and which, snatched in haste,
Is laid down at the first ill-sounding note.
I did not wrong myself so, but I placed
A wrong on thee. For perfect strains may float
‘Neath master-hands, from instruments defaced,–
And great souls, at one stroke, may do and dote.
**********
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 30, 2007)]
- வாசிப்பின் நீரோட்டம்
- திரு முருகு
- எண் கோணத்தின் நான்கு கோணக் கேள்விகளுக்கு எனது பதில்
- புதியதோர் உலகம்
- தேவமைந்தனின் ”புலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்’ கட்டுரை அருமை!
- பிலாக்கோபோபியா
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபத்தொன்று: கார்லோவின் புண்ணியத்தில்…
- ” பாபு என்றால் நாற்றமுடையவன் என்று அர்த்தம்”
- கால நதிக்கரையில்…… – அத்தியாயம் – 17
- காதல் நாற்பது – 32 நேசிப்பதாய் உறுதி அளித்தாய் !
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -2 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)
- யாமறிந்த உவமையிலே
- திண்ணை. காம்
- கடிதம்
- சில வரலாற்று நூல்கள் – 3 -மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)
- மலேசிய அரசுக்குப் பரிந்து வரவேண்டிய கட்டாயம் என்ன?
- அராஜக சட்டமும், தனி மனித உரிமையும்
- கூர் கலை, இலக்கியத் தொகுப்பு
- கடிதம்
- அலுமினியப்பறவைகள்
- கோவை ஞானி தந்த அங்கீகாரம்!
- திரைவெளி – சுப்ரபாரதிமணியனின் திரைப்படக் கட்டுரைகள்
- பிரமிளின் ‘காலவெளி’: ‘கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு’!
- சூட்டு யுகப் பிரளயம் ! ஓஸோன் வாயுவால் விளையும் தீங்குகள் -7
- புறாவின் அரசியல்
- கவிதை
- “அவர்கள் காதில் விழவில்லை!”
- வாவிகள் தற்கொலை செய்தன
- மன அதிர்வுகள்
- கைக்குமேல் புள்ளடி
- கௌசல்யா
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 21
- கை நழுவிய உலகம்