கேட்டதெல்லாம் நான் தருவேன்
சக்தி சக்திதாசன்
நினைவுகளைப் பஞ்சாக்கி
நெஞ்சமெனும் உறையினிலே
தலையாணி போலாக்கி
ஞாபகங்களைத் தூங்க வைத்தேன்
காலமென்னும் காற்றடிக்க
கலைந்து விட்ட ஞாபகங்கள்
அலைந்தோடும் மேகங்களாக
அசைபோட்டு நின்றதம்மா
கலைமகளின் துணைகொண்டு
கல்வி கற்ற பொழுதுகளின்
கதகதப்பான எண்ணங்கள்
கற்பனையை நனைத்தன
இன்பத்தையே வரவாக்கி
இன்பமாய் செலவு செய்து
இன்பத்தின் மடிதனிலே
இருந்த ஒரு காலமது
நட்பெனும் புனித உறவு
நெஞ்சத்தை நிறைத்திருந்த
நேசமழை பொழிந்திருந்த
நேரமந்த நேரமம்மா
கண்ணால் விதையன்று
கன்னியவள் வீசியெந்தன்
காளை மனதினில் வளர்த்தது
காதலென்னும் செடியன்று
ஜாதியில்லை மதமில்லை
ஜக்கியத்தின் ஆலயத்தில்
ஜம்பமாய் நண்பர் குழாம்
ஜயனித்த வேளையது
முதற் காதல் அரும்பியதும்
ஒருதலையாய் வளர்ந்ததும்
பார்வைகளால் பேசியதும்
பறந்ததந்தக் காலமம்மா
கேட்டதெல்லாம் நான் தருவேன்
கேட்காமல் கொடுப்பவனே நான்
கேட்பதெல்லாம் உன்னிடத்தில்
கொடுத்துவுடு திரும்ப அந்தக் காலமதை
- விடுதலையின் ஒத்திகை.
- நடுவழியில் ஒரு பயணம்!
- மடியில் நெருப்பு – 14
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 13
- மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்.
- அரபு பண்பாட்டு மார்க்சியம்
- நமது நாடுதான் நமக்கு!
- இல்லாத இடம் தேடும் …
- மாதவி ! ஜானகி ! மேனகி !
- பெரியபுராணம் – 114 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- கேட்டதெல்லாம் நான் தருவேன்
- தொலைதூர மகளோடு தொலைபேசியில்
- தலைமுறை இடைவெளி
- சிவலிங்கனாரின் – உலகக் கவிதைகள் மொழியாக்கம்
- கடித இலக்கியம் – 34
- இலை போட்டாச்சு 4 – பச்சை மோர்
- யோகம்
- கீதாஞ்சலி (101) பாடம் புகட்டும் கீதங்கள்!
- பிரம்மராஜன் – வேறொரு புதுக்கவிதை
- வஞ்சமகள்: ஒரு பின்நவீனப் பார்வை (வெளிரங்கராஜனின் இயக்கத்தில் கு.அழகிரிசாமியின் நாடகம்)
- குடும்ப வன்முறை பற்றிய கருத்தரங்கம்
- டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் – டிசம்பர் 6, 2006 புதன் கிழமை மாலை ஐந்து மணி
- சங்க இலக்கியப் படைப்பாக்கத்தில் திட்டமிட்ட புறக்கணிப்பு
- கில்காமெஷ் : மரணமின்மையின் இரகசியத்தை தேடிய இதிகாச வீரன் [2]
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:6) சீஸர் பட்டாபிசேக தினத்தின் காலை