மறதி
இளைய அப்துல்லாஹ்
மறதி எப்பொழுதும் மனிதனை
உற்சாகப் படுத்திக் கொண்டே இருக்கிறது
மறதிக்கு மருந்து தேடி
ஆலாய்ப்பறக்கிறார்கள்
அது ஞாபகப்படுத்தத் தொடங்கினால்
ஒவ்வொரு மனிதனும்
தினமும் உயிர் விட்டுக்கொண்டே
இருக்க வேண்டியிருக்கும்
மறதி
ஞாபங்களை தன்னுள்ளே
புதைத்து வைத்திருக்கும் வேதாந்தி
சில நேரம் எல்லாவற்றையும்
இடம் தொியாமல்
கிளறி விடும்
எதனை ஞாபகப்படுத்த வேண்டுமோ
அதனை அது மறக்கடித்துவிடும்
மறப்பதற்கு முன்னாலும்
ஞாபகம் கொள்ளுதற்கு முன்னாலும்
மறக்கச் சொல்பவர்களுக்கே
சிலவை கனவாக வந்து வாட்டி விடும்
பத்திாிகைக் காரனுக்கு மறதி வராதாம்
ஏனெனில் அவனது மறதிக் கலங்கள்
எப்பொழுதோ மாண்டு விடுமாம்.
எல்லாம் எப்பொழுதும்
மறக்கச் சொல்லி அடிக்கடி சொல்கிறார்கள்
மறக்காமல் விட்டால்
அடிக்கிறார்கள் – இருட்டில்
மறதி சிலருக்கு ஒரு வரப்பிரசாதம்
நிறத்தைக் கூட மறந்து விடுகிறார்கள்
சில வேளை இது தான் என்று
ஞாபகப் படுத்தினால் தவிர
சிலவற்றை மறந்து விடுவதென்பது இயலாது
எனக்கு முன்னும் பின்னும்
மறதியைக் கூட்டிக் கொண்டே நடக்கின்றேன்.
மறதி எப்பொழுதும் எனக்கு துணைவன் போல
இளைய அப்துல்லாஹ்
லண்டன்
—-
anasnawas@yahoo.com
- யூதர்களுக்காக ஏங்கும் இஸ்லாமியர்
- நமது பத்திரிகை உலகமும் அதில் எனது சொற்ப ஆயுளும்
- சிறு குறிப்புகள். (பன்றிவதை, e-pill, சுனாமி ஆராய்ச்சி நிலையம், டிசி, அமைச்சர் அன்புமணி)
- எல்லை
- வண்டிக் குதிரைகள்
- சிக்குவும் மழையும்….
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- அப்ப… பிரச்சனை… ? பெண்மனசு
- எடின்பரோ குறிப்புகள் – 3
- திண்ணை
- நான் உன் ரசிகன் அல்ல..
- பெரியபுராணம் – 69 – 33. நமிநந்தியடிகள் நாயனார் புராணம்
- கீதாஞ்சலி (53) நான் பாட குழந்தை ஆட! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- மறதி
- இரு கவிதைகள்
- கடிதம் கை சேரும் கணம்
- கவிதையோடு கரைதல்..!
- போல் வெர்லென் ((Paul Verlaine 1844-1896)
- The Elephants Rally-யா னை க ளி ன் ஊ ர் வ ல ம்
- அங்கே இப்ப என்ன நேரம் ? (கட்டுரைகள்) : அ.முத்துலிங்கம்
- கனவு மெய்ப்படுமா ?
- மொபைல் புராணம்
- சொன்னார்கள்
- விளக்கு தமிழிலக்கிய மேம்பாட்டு நிறுவனம் – ஞானக் கூத்தனுக்கு புதுமைப்பித்தன் இலக்கிய விருது
- பாரதியை தியானிப்போம்
- விமர்சனங்களும், வாழ்த்துரைகளும்….
- உண்மை நின்றிட வேண்டும்!
- அருவி அமைப்பு நடத்தும் சுடர் ஆய்வுப் பரிசு வழங்கும் விழா
- கடிதம்
- வாளி