கணினிக்குள் விழுந்துவிட்ட தத்தை
கவிஞர் புகாரி
சிறகடித்துப்
பறக்குது மின்அஞ்சல்
அதன்…
சிறகசைவில்
துடிக்கிறதென் நெஞ்சம்
கருமுகிலின்
கூடுகளில் இல்லை
நிலா….
கணினிக்குள்
கொதிக்கிறது என்முன்
விரலெடுத்து
நடனமாடும் யாகம்
அதில்…
விரிவதுவோ
காதலெனும் வானம்
இரவுபகல்
விலகாத தாகம்
என்…
இணையக் கிளி
எழுதுகிறாள் நாளும்
கனிப்பாவை
கணினிக்குள் இருந்து
என்…
கனவுகளைக்
கேட்பதுவோர் விருந்து
இனிப்பான
கவிதைகளாய் விரிந்து
தினம்…
என்மனதைச்
சொல்லுவதோ மருந்து
தடதடக்கும்
தட்டச்சுப் பலகை
அதன்….
தாளலயம்
வெல்லுமிந்த உலகை
படபடக்கும்
நெஞ்சங்கள் பேசும்
அந்தப்….
பரவசத்தில்
நரம்புகளும் கூசும்
தூதுசெல்லக்
கடிதமேந்தும் பறவை
பல…
தூரதேசம்
பறந்துபோவ தில்லை
சேதிசொல்ல
வானமேறும் போது
ஒரு….
வேடனுக்கு
விருந்தாகக் கூடும்
மின்னலுக்கு
முன்சென்று கொஞ்சும்
மின்….
மடலாடும்
மகிழ்வோ நீர் மஞ்சம்
இன்னமுதக்
கன்னியவள் மடியில்
நான்….
இருந்தாடும்
சுகங்கூடும் நொடியில்
முகம்மூடி
முகந்தந்தாள் முதலில்
அம்….
முதல்மடலே
மோதிரம் என் மனதில்
அகந்தானே
அஞ்சல்வழி பூக்கும்
அது….
அகலாத
உறவுகளின் ஆக்கம்
முகங்கண்டு
வருங்காதல் மயக்கம்
அது….
முடிந்துவிடும்
மூன்றுநாள் பழக்கம்
அகங்கண்டு
இணைகின்ற உள்ளம்
அது….
அண்டவெளி
ஈர்ப்பினையும் வெல்லும்
நானிங்கே
உலகிலொரு முனையில்
அவள்….
நாணமுடன்
சிலிர்ப்பது மறு முனையில்
வானந்தான்
எல்லையிந்த உறவில்
அவள்….
வாசனையோ
இணையப் பெரு வெளியில்
கூடுவிட்டு
கூடுபாயும் வித்தை
அவள்….
கணினிக்குள்
விழுந்துவிட்ட தத்தை
தேடுபொருள்
கிடைப்பதில்லை வாழ்வில்
என்….
தேவதையைத்
தந்த வலை வாழ்க
(சரணமென்றேன் – காதல் கவிதைத் தொகுப்பிலிருந்து)
buhari@gmail.com
- 4: 03
- பால்வீதி
- ஆயிரத்து முன்னூறு ரூபாய்
- தேசியப் பொருளாதாரம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து)
- என் புருஷன் எனக்கு மட்டும்
- தொழிற்றுறை விரிவும்,மனிதவதையும்!
- அமெரிக்க தகவல் மையத்திற்கு ஒரு ‘ஸி.ஐ.ஏ. ஏஜெண்ட் ‘(!) எழுதிய கடிதம்
- கண்காணிப்பு சமுதாயம்
- பெண்ணீயம் என்பது
- பூவக பூலோக வாழ்க்கை ! (Earth Life in Florida)
- கணினிக்குள் விழுந்துவிட்ட தத்தை
- ஒரு கடல் நீரூற்றி
- புத்தக அறிமுகம் – பெரும் திருட்டு: தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்தை மீட்டெடுத்தல்
- மழலைச்சொல் கேளாதவர்
- ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணைக் குழு
- தீயில் கரையத்தானே
- கீதாஞ்சலி (46) – வாசல் முன் நீ வந்தாய்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- தீயில் கரையத்தானே
- சாவி ? ? ?
- இதயம் முளைக்கும் ?
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க ஆலயங்கள் -4 (The Great Abu Simbel Temples of Egypt)
- சுவாசம் தரும் மராத்தியத் திரைப்பட உலகம்
- தெளிவு
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – II
- அறிவுஜீவிகளின் குஷ்பி(வி)சம்.
- கவிஞர். எஸ்.வைதீஸ்வரனின் 70வது வயது நிறைவை ஒட்டி சென்னையில் நடந்தேறிய சிறப்பு இலக்கியக் கூட்டம்….
- எழுத்தில் ஒளிரும் பெருஞ்சுடர்
- கேள்வி-பதில்
- திறந்திடு சீஸேம்!
- 24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005
- விம்பம் – குறும்படவிழா
- நண்பர் சுரா அவர்களுக்கு
- கற்புச் சொல்லும் ஆண்!
- பெரியபுராணம் – 62
- கைகளை நீட்டி வா!
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – I
- இதயம் முளைக்கும் ?
- புதுமையும்,பெண்ணியமும்!
- காலம்
- அலறியின் மூன்று கவிதைகள்
- இலையுதிர் காலம்
- கவிதைகள்