எனது எனச் சொல்லப்படுகின்ற….
சாரங்கா தயாநந்தன்
,Cambridge
எனது எனச் சொல்லப்படுகின்ற
உனது வாழ்வை வாழ
பயணப்படுகின்றேன்.
நேற்றென் தாயளைந்த
நீள்நெடுங் கூந்தல்
நானாடிய ஊஞ்சல்
என் நாவிலுலவிய மொழி
சேர்ந்தென்னோடு பாடிய குயில்
சிரிப்புக்கள் சிந்திய வெளி
சகலமும் துறந்து…
நீயென்னைப் பிடுங்கிய பின்னரும்
வேர்களில் ஒட்டியுள்ளது
என் தாய்மண்.
உலர்கையில் உதிருமோ ?
வண்ணத்துப் பூச்சி இறகுகளாய்
வழியெல்லாம் உதிர்கின்றன
என் தங்கக் கனவுகள்.
பாதையெங்கணும் பரம்பியுள்ள,
எவரும் கண்திருப்பாத
அக்கனவுகள் நல்கும் ஒளியுறு எழிலை
என் இதயப் பேழையில்
இரகசியமாய்ச் சேமித்துள்ளேன்
கால உளிச் செதுக்கலோசை
காதுகளை அறைவதில்
நியதியுற்ற பயணங்களை
நிகழ்த்தியாகவேண்டியுளது.
இதோ…உன் கால்தடம் பற்றி
படியும் என்பாதங்கள்
பயணத்தின் சுவடேயற்று….
nanthasaranga@gmail.com
- குளங்கள்
- ரோஜாப் பெண்
- அம்மா
- இசட் பிளஸ்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-2)
- சிறைவாசம்
- ஒரு கடிதம்
- திராவிட ‘நிற ‘ அரசியல்.
- நாளைய பெண்கள் சுயமாக வாழ, இன்றைய இளம்பெண்களே வழிகோலுங்கள்.
- திருவண்டம் – 3
- சூடான் – கற்பழிக்கும் கொள்கை
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 2
- 3 மதியழகன் சுப்பையா கவிதைகள்
- புகழ்
- அமிழ்து
- கபடி கபடி
- எனது எனச் சொல்லப்படுகின்ற….
- கீதாஞ்சலி (26) படகோட்டியின் தயக்கம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- பெரியபுராணம் – 43 திருக்குறிப்புத்தொண்டர் புராணத் தொடர்ச்சி
- வேர்களை வினவும் விழுது : அரசூர் வம்சம்
- ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) நீர் ஊர்தி விருத்தி செய்தல் [Development of Watercrafts Part-2]
- உங்கள் மூதாதையர் யார் ?
- காதலுக்கு மூட்டுவலி