தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
நெடுங்காலம் எடுக்கிறது,
என் பயணம்!
நீண்ட தூரம் போகிறது,
என் பாதை!
விண்கோள்கள், விண்மீன்களில் என்
தடம் பதித்து
முதல் ஒளிவீச்சில்
தேரிலிருந்து கீழிறங்கிப் பயணம்
தொடர்ந்தேன்,
நாடுகளின்
காடுகள், புதர்கள் வழியே!
பக்கத்தில் தெரியும்
பயணப் பாதை
உன்னை
நெடுந்தூரம் இழுத்துச் செல்வது!
எளிய முறையில் இசையை மீட்ட
செய்ய வேண்டி யுள்ளது,
சிரமப் பயிற்சி!
தன் சொந்த வீடு வந்தடைய
ஒவ்வோர்
அன்னியன் வீட்டுக் கதவையும்
பயணி
தட்ட வேண்டி யுள்ளது!
புனித கோயிலின் உள்ளே
உன்னரிய
சன்னதியை வந்தடைய
ஒருவன்
வெளி உலக மெல்லாம் சுற்றி
உலவ வேண்டி யுள்ளது!
இங்கும் அங்கும் உன்னைத்
தேடிப் போன என் கண்கள்,
மூடிப் போகும் முன்பு
மொழிந்தன,
‘இதோ! இங்கு இருக்கிறாய் ‘
என்று!
கண்ணீர் அருவிகள் ஆறுகளாய்ப்
பொங்கி
‘எங்கே ? எங்கே ? ‘ என்று
கேள்வியும் கூக்குரலும்
கேட்ட போது,
உலகை வெள்ளம் மூழ்கி யடித்து,
‘இங்கே நான் ‘ என்னும்
சங்க நாதம்,
எங்கும் உனை
உறுதிப் படுத்தும்!
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (April 11, 2005)]
- தொடர்ந்து ஒலிக்கும் குரல் – (வெங்கட் சாமிநாதனின் உரையாடல்கள் )
- பெரியபுராணம் – 36
- நினைவிருக்கிறதா ?
- உயிர்த்தேன்
- வடகிழக்கில் ஒரு புதிய குரங்கினம் -100 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு-
- மனிதகுலம்: உலகின் மிகக்கொடிய சுரண்டல் கும்பல்-குற்றஞ்சாட்டுகின்றனர் விஞ்ஞானிகள்
- பூகோள காந்த துருவங்கள் இடமாற்றம், துருவ முனையில் விண்ணிற ஒளித் தோரணங்கள் [Geomagnet Poles Reversal, Arctic Auroras] (8)
- மீண்டும் வரும் நாட்கள் :மு.புஷ்பராஜன் கவிதைகள்
- அதிர்ச்சியும் ஆற்றாமையும் (சுகுமாரனின் மொழிபெயர்ப்புக் கவிதைகள்)
- பார்த்திப ஆண்டு உதயம்
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-6
- கீதாஞ்சலி (18) உன்னைத் தேடும் போது … ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- என்ட வீடும் அப்புன்டேயும் கறுப்பு
- அவளால்…!
- பரிமளத்திற்குப் பதில்மடல்
- தமிழவன் கட்டுரை பற்றி…
- இனவாத ஈவெரா ?
- அன்புள்ள ஆசிரியருக்கு
- பால்வினைத் தொழில்
- ஹினா- மட்சுரி
- ஆட்காட்டிப் புற்கூண்டில் வசிக்கும் இதயம்
- கலைந்துபோன ‘திராவிடஸ்தான் ‘ கனவுகளும், கண்ணகியைப் பழித்த கருஞ்சட்டைத் தலைவரும்! – 1
- ஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது!
- இருந்ததனால்….
- பாம்புகள்
- சேதி வந்தது
- சீதாயணம் ஓரங்க நாடகத்தின் பின்னுரை
- பிம்ப உயிர்கள் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
- மழலைச்சொல் கேளாதவர் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
- Pope John Paul II
- தமிழில் பிறமொழி கலத்தலும் திரைப்படத் தலைப்பும்
- கண்கள்
- தமிழ் அறியாத தமிழர்கள்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – சுபாஷ் சந்திர போஸ்
- சிந்திக்க ஒரு நொடி – விட்டு விடுதலையாகி
- சிந்திக்க ஒரு நொடி – சாஸனம் பொய்த்ததா, மானுடம் பொய்த்ததா ?
- இதற்காக இருக்கலாம்!
- பயணம்
- முன்னேறு
- மகள்…
- உயிரினினும் இந்தப் பெண்மை இனிதோ ?