கீதாஞ்சலி (17) – ஏழைகளின் தோழன் நீ ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
இங்கே உள்ளது நீ
பாதங்களை ஓய்வாக வைக்கும்
உந்தன்
பஞ்சணைப் பீடம்!
ஏழை, எளியவர்,
எல்லாம் இழந்தவர்,
கீழே உள்ளவர் அனைவரும்
வாழும் குடித்தளம் அது!
குனிந்து
வணங்கி உன்னைக்
கும்பிட வரும் போது,
எனது
பணிவுக் கரங்கள் பற்றித்
தொட முடியாத
ஆழத்தில்,
ஏழை, எளியவர், எல்லாம் இழந்தவர்,
கீழே
தள்ளப்பட்டவர் அனைவரும்
வாழும் பாதாள
பள்ளத்தில் நின்றன்
பாதங்கள்
இளைப்பாறு கின்றன!
செருக்குடையோன் எவனும்
ஒருபோதும்
அருகில் நெருங்க முடியாது,
ஏழை, எளியவர்,
எல்லாம் இழந்தவர்,
தாழ்த்தப்பட்ட,
இனத்திடையே நீ,
எளிய ஆடை அணிந்து
உலவி வரும்
தளங்களை!
என்னிதயம் என்றைக்கும்
பாதை காண முடியாத
பகுதிகளில்
ஒதுங்கிவரும்
துணையற்ற எளியோரிடம்,
கீழே அமுக்கப்பட்ட மக்களிடம்,
ஏழை மாந்தரிடம்
என்றென்றும்
தோழமை
கொண்டுள்ளாய் நீ!
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (March 27, 2005)]
- கவிதை
- பாலை நிலத்து ஒட்டகம்
- வன்றொடர் குற்றியலுகரம்
- அம்மா பேசினாள்
- வானத்திலிருந்து வந்தவன் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் இரண்டாம் பரிசு)
- சர்தார் சிங்கின் நாய்குட்டி
- எதிர்காலம் என்று ஒன்று….! (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் இரண்டாம் பரிசு)
- து ை ண 9 – (இறுதிப் பகுதி)
- ஒரு மொழிபெயர்ப்பின் கதை
- மோடிக்கு விசா மறுக்கப்பட்டது நல்ல விஷயம்தான்
- மேலை நாடுகளின் பார்வையில் இஸ்லாம்
- பெரியபுராணம் – 35 (ஆனாய நாயனார் புராணம் தொடர்ச்சி)
- கீதாஞ்சலி (17) – ஏழைகளின் தோழன் நீ ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- தயிர்
- புதியஅலை தமிழ்ப்பற்றும் சிறு பத்திரிகைகளும்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – சே குவேரா
- போப் ஜான் பால் – II : மெளனமான சாதனைகளின் பாப்பரசர்
- பேரழிவில் உளவியல் சீரமைப்பு -அனுபவங்களின் தொகுப்பு
- சிந்திக்க ஒரு நொடி – ஒரு கோர சம்பவத்தின் நினைவூட்டல்
- படகு அல்லது ஜெயபால்
- கவிதை
- தேவகாந்தன் எழுதிய காலம் பதிப்பகத்தின் ‘கதா காலம் ‘ நாவல் வெளியீடு- ஏப்ரல் 17
- ஈவெரா பித்தம் தெளிய சோ என்ற மருந்தொன்றிருக்குது
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-5
- சமகாலப் பெண் எழுத்து – ஒரு கலந்துரையாடல்
- பண்டை காலத்து யானைகளின் பூர்வ வடிவக் கண்டுபிடிப்பு உளவுகள். பூகோள ஜனனியின் காந்த துருவங்கள் இடமாற்றம் [Pole Reversal in the Geod
- விதி
- எம்.எச்.ஏ. கரீமின் ஒரு கவிதை
- நேசி மலரை, மனசை
- கவிதைத் தோழி
- ஜெயகாந்தனும் எனது பாவனைகளும்
- அஸ்ரா நொமானியின் கூட்டுத் தொழுகை
- தொடர்வாயா….
- டார்ஃபர் – தொடரும் அவலம்
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி ஆறு
- கடிதம் ஏப்ரல் 8,2005
- கலைச்செல்வன் நினைவுக் கூடல்
- விஸ்வாமித்ரா வின் ஈ.வெ.ராவின் முரண்பாடுகள் பற்றி…
- பாரதி இலக்கிய சங்கம், சிவகாசி, ஏப்ரல் மாத இலக்கிய சந்திப்பு
- 2006ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் திகதி மூன்று நாடகங்கள்
- மலையக மக்கள் மன்றம் புதுவருட ஒன்று கூடல்
- வாக்குமூலம்