எச்ச மிகுதிகள்

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

ஸ்ரீ மங்கை


என்றும்போலவே
அன்றும்,
கடமைக் கனலில்
கனன்று சிவந்தபடி
மாலைக் கங்கில்
எரிந்ததைத் தேடியலுத்து
இருளில் புகைகிறேன்.

வினையெச்சத்துடன்
பெயரும் பிற எச்சங்களும் கூட்டி
நாளை விரிக்க
சுருட்டிப்பந்தாக்கி
மிடறு விழுங்கித் திணறுகிறேன்..
நினைவில் சேர்த்த
கனத்தில்
காற்றில் அழுந்தியபடி.

தோட்டத்து மூலையில்
மூடச் செடிகளோவெனில்
மூடிய மலர்களில் நம்பிக்கையைச்
சேர்த்துவைத்து வைக்கின்றன
வெறுமே நாளை விரியுமென அறிந்திருந்தும்.

பரிணாமத்தில் திரும்புதல்
சாத்தியமிருக்கிறதா ?
மலர்கள் குலுங்கும்
அம்மல்லிகைக் கொடியாகாவிட்டாலும்
நாய் கூட முகராத
பேர்தெரியாத அப்புதராக மாறினாலும்
போதும்.

kasturisudhakar@yahoo.com

Series Navigation

ஸ்ரீ மங்கை

ஸ்ரீ மங்கை