கீதாஞ்சலி (25) நெஞ்சில் மலரும் நறுமணம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
அல்லி மலர்கள் விரிந்து பொங்கிய
அன்றைய நாளில்,
அந்தோ!
எந்தன் மனம் ஏனோ
அலைமோதிக் கொண்டி ருந்தது
எனக்குப் புரியாத
நிலையில்!
முற்றிலும் காலியாய் இருந்தது
எனது பூக்கூடை!
நறுமண மலர்கள் கிடந்தன
பறிப்பா ரின்றி!
அன்றைய தினமும்
அடுத்த நாளும் சோகம் என்னை
கவ்விக் கொண்டது!
கனவுக் காட்சியை ஆரம்பிக்க
மனத்திரை திறந்தது
எனக்கு!
தென்திசை அடிக்கும் காற்றில்
விசித்திரமான
இனிய துளிகளாய் எங்கிருந்தோ
மணம் கமகமவென எழுவதை
உணர்ந்தேன்!
எதிரில் நுகர முடியும்
புதிரான அந்த
இனிய மணம் எனது இதயத்தில்
ஏக்க வலி உண்டாக்கும்!
அரிய மணத்தை ஆர்வமாய்ப்
பரப்பி விடும்,
வேனிற் பருவம் தேடி எனது
நெஞ்சை
நிரப்புவது தெரிந்தது!
அருகிலே
உருவான மணம்
என்னைச் சார்ந்த தென
தெரியாமல் போனது
அந்நேரம்!
பூரண இனிமைக் கிளர்ச்சி
நேராக எனக்குத்
தெரியாமல் இருந்தது,
எனது
இதய ஆழத்தில் மலர்ச்சி யுற்று
உதயம் ஆனதென்று!
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 29, 2005)]
- கோபி கிருஷ்ணனின் ‘முடியாத சமன் ‘ சிறுகதையின் நாடகமாக்கம். சனிக்கிழமை, ஜூன் 04, 2005 தக்கர் பாபா வித்யாலயா
- இரயில் பயணங்களில்…
- ராணி
- பெரியபுராணம்- 42 திருக்குறிப்புத்தொண்டர் நாயனார் புராணம்
- இந்திய நிறுவனங்களை ஒதுக்கிவிட்டு மாண்சாண்ட்டோ பன்னாட்டு விதை நிறுவனத்துக்கு மத்திய அரசு ஆதரவு தருகிறது
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 1
- பணம் தேடுவதில் உள்ள ஆர்வம் குடும்பப்பிணைப்பில் இல்லை!
- இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்வரும் சட்டமன்றத்தேர்தலிலும் பிரதிபலிக்குமா ?
- கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா! ?
- ஹாங்காங்கில் தமிழ்க் கல்வி
- அனைத்துலகத் தமிழிலக்கிய அடையாளமும் இப்போதைய விவாதங்களும்
- சிந்திக்க ஒரு நொடி -தமிழ் சாதி
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல் நான்காம் காட்சி பாகம்-1)
- கூண்டுகள்
- திருவண்டம் – 2
- அவனும் அவளும்
- கீதாஞ்சலி (25) நெஞ்சில் மலரும் நறுமணம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல் நான்காம் காட்சி பாகம்-1)
- அசையும் நிழல்கள்
- காற்றுப் பிரிந்த போது. .
- நட்போடு வாழ்தல்
- முயல்தலில் ஒளிர்தலானது….
- அபகரிப்பு
- The Day After Tomorrow கடல் நீரோட்டம் மெதுவாவதால், பிரிட்டானியா கடும் குளிரை எதிர்நோக்குகிறது
- ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) தொலைபேசி கண்டுபிடிப்பு -1
- கவிதைக் கோபுரத்தின் பொற்கலசங்கள்
- வேட்கை வேண்டும்
- அகவியின் நூல் வெளியீடும் விமர்சனமும் -அறிவிப்பு
- தமிழ் சினிமா எழுத்தாளர்களின் விபச்சாரச் சிந்தனை:
- ஒரு கடிதம்
- வாழும் தமிழ் – புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் யூன் 4, சனிக்கிழமை ஸ்காபரோ சிவிக் சென்டர்(ரொறன்டோ-கனடா)
- காலம் எழுதிய கவிதை – ஒன்று
- எங்கே என் அம்புலி ?
- தோழமையுடன்….