அழுகிறபோது எழுதமுடியுமா ?
பிச்சினிக்காடு இளங்கோ
அழுகிறபோது எழுதமுடியுமா ?
அழுத கண்ணீர்
அழிக்கிறது எழுத்தை!
எழுவது எப்போது ?
ஏங்கித் தவிக்கையில்
எழுதுவ தென்பது
இப்போதைக்கில்லை
அழுவது மட்டுமே
ஆறுதலானது
அழுவதொன்றே
அனவர்க்குமானது
கடற்கரை எல்லாம்
மயான மேடை
காற்றில் எல்லாம்
பிணங்களின் வாடை
கண்ணீரில் மிதக்கும்
மக்களின் கோலம்
காதுகள் கிழிக்கும்
உயிர்களின் ஓலம்
இதுதான் அங்கே
நிலவும் அவலம்
உறவுகள் இழந்து
உணர்வுகள் முறிந்து
கண்ணீர் வற்றி
காயும் வயிறுடன்
வாடும் உயிர்கள்
தேடுவது கவிதையா ?
கவிதையா இப்போது
கைகொடுக்கும் ?
இல்லை இல்லை
இல்லவே இல்லை
இதயம் வெடிக்கும் இந்தத் துயரில்
வாடும் மக்களுக்கு வாரி வழங்குவோம்
இருப்பதைக் கொடுத்து இதயத்தைக் காட்டுவோம்
இடிந்தவர் இதயம் இயங்க உதவுவோம்
மடிந்தவர் மண்ணில் மறுவாழ்வு நாட்டுவோம்
தீராக் கடல்பசி
தீர்ந்ததா ? இல்லையா ?
தெரிந்துகொள்ளாமல்
எப்படி எழுதுவது ?
கோர உயிர்ப்பலி
முடிந்ததா ? இல்லையா ?
முடிவு செய்யாமல்
எழுதுவது எப்படி ?
துயரத்தின் ஈரம்
உலர்ந்ததா ? இல்லையா ?
உலராமல் எப்படி
உணர்த்துவது கவிதையில் ?
எழுவது எப்போது ?
ஏங்கித் தவிக்கையில்
வாழ்வது இயலுமா ?
வாடி உதிர்கையில்
எழுதுவ தென்பது
இப்போதைக் கில்லை
அழுகிறபோது எழுதமுடியுமா ?
அழுத கண்ணீரே
அழிக்கிறது கவிதையை….
pichinikkaduelango@yahoo.com
- பெரானகன்
- வாரபலன் டிசம்பர் 30,2004 – தோழர் நிர்பன் , யசோதர – யமுனா, அரசாங்க விருந்து ,கொலைகள் அலைகள்
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 52
- இன்று புதிதாய்ப் பிறந்தோம்.. ?
- சூசன் சாண்டாக் – ஒரு வாசகனின் அஞ்சலி
- சமஸ்கிருதமயமாதலும் நடுக்காட்டு இசக்கி அம்மனும்
- கடல் கொந்தளிப்பைக் குறித்த எச்சரிக்கையில் குளறுபடி
- இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 2
- சுனாமி அழிவு :: உரிமையும் கடமையும்
- கடல்கோள் அழிவிற்கு உதவுவோர் கவனிக்க வேண்டியது!
- கடற்கோள்
- விலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது ட்சுனாமி
- பெரியபுராணம் – 24
- கவிக்கட்டு 42
- ஞானக்கோமாளி – கவிதாப் பிரசங்கம்
- அறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்
- தவறான திருப்பம் (ஆங்கில மூலம் : ஆகா ஷாஹித் அலி)
- கடற்கோள்
- இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலை மதில்கள்! (Earth Quake Giant Sea Waves Attack South Asian Countries 2004)
- கடலம்மா….
- அழுகிறபோது எழுதமுடியுமா ?
- தெற்காசிய இந்து/இஸ்லாமியப் பண்பாடுகள் – ஒரு மறுசிந்தனை -1
- சாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்
- ஓவியப் பக்கம் – பதினொன்று – ஜார்ஜ் கிராஸ்ச்- ஓவியமும் அரசியலும்
- மெய்மையின் மயக்கம்-32
- மக்கள் தெய்வங்களின் கதைகள் – 15. வன்னியன் கதை
- சங்கீதமும் வித்வான்களும்
- ரெஜி
- உடன் பயின்ற நண்பனுக்கு ஒரு மடல்!
- கடிதம் டிசம்பர் 30, 2004-எஸ். அரவிந்தன் நீல கண்டன்: அருள் செல்வன் கந்த சுவாமி: சலாஹுத்தீன்: ஜோதிர் லதா கிரிஜா
- திரு பத்மநாப ஐயருக்கு 2004 ஆம் ஆண்டிற்கான இயல் விருது
- கடிதம் டிசம்பர் 30,2004 – பத்திரிகைகளின் தவறான போக்கு!
- கடிதம் டிசம்பர் 30,2004
- துயருறும் இலங்கை மக்களின் நிவாரணத்திற்கு அவசர வேண்டுகோள்!
- சுனாமி
- கடிதம் டிசம்பர் 23,2004
- மார்க்ஸ், டார்வின் மற்றும் பிரச்சாரம்
- ஒரு வேண்டுகோள்
- சுனாமி
- பத்மநாபஐயர்
- சதாத் ஹசன் மண்டோ நூல் வெளியீடு
- ‘சும்மா வருவாளா சுகுமாரி ? ‘ – இசை விழா விமர்சனம் – II
- விடுபட்டவைகள்-3 -தீர்க்கம்
- Reporting from Chennai about the Relief efforts on the Tsunami hit areas.