கடற்கோள்
திருமாவளவன்
ஊமை அமுக்கம்
மிரள மிரள விழித்தபடி
பயந்தொடுங்கிய மிருகத்தின் விழிகளோடு
அடங்கியிருக்கிறது
கடல்
ஒரு பெரிய இரையை விழுங்கி
செரிக்கும் வரையில் காத்திருக்கும்
மலைப் பாம்பின் மெல்லிய உடலசைவு
கடலின் மேற்பரப்பில்
எத்தனை தடைவ விழுங்கிற்று
எம் இனிய குழந்தைகளை ?
0
கூடியிருந்த சிறு மகிழ்வு குலையும் – கடல் மிருகம்
குரலெழுப்பும் – பனைஉயர அலையெறியும் – கடலெழுந்து
நடக்கும் – ஊரெல்லாம் தலைதெறிக்க ஓடும் -திசைகள்
பதினாறும் சிதறி ஓடுகிற மனிதர்கள் கதறி வீழக்
காற்ரெல்லாம் ஒப்பாரிக் குரலெழும்பும் – எக்காளம் அடங்கும்
இரை விழுங்கிக்கடல் மீழும் – கடல் மீண்ட பின்னாலே மெல்லத்
துலங்கும்
ஊர் – மீள
0
சிறு நாய்குட்டியாகி
நாவால் நக்கி நனைத்து
சினேகித்து
வாலாட்டி மகிழ்கிறது
கடல்
கரையெல்லாம் நுரை பொங்க
நுரை கிள்ளி வேடிக்கை பார்க்கின்ற மனிதரிடை
ஒரு வித அச்சம்
ஒரு விதத் துயரம்
விரக்தி
கடல் மீது கொண்ட வெறுப்பு
இருக்கின்ற துளிப் பொழுதில் வாழ்வை சுகிக்கின்ற
துடிப்பு
சிறு மகிழ்வு
அவள்
சிக்குண்ட கூந்தல் காற்றெல்லாம் சிதைய
மனம் பிசகி அலைகிறாள்
கால்போன திசையில்
விழி ஏங்கத் தேடுகிறாள்
வெறி கொண்டு
சாபமிட்டு மண் அள்ளியெறிந்து திட்டி
காறி உமிழ்கிறாள்
கடல் மீது
யார் கவனிப்புமில்லை
உயரக் குரலெடுத்து ஒப்பாரி சொல்லி கதறுகிறாள்
அவள் ஒப்பாரிப் பாடலிலிருந்து
வழிகிறது
உலகத்தின் கண்டங்கள் ஏழிலும்
கடலுக்கு காவு கொடுத்த
தாய்மாரின்
கண்ணீரும் கதறலும்
இரை மீட்டுக் கிடக்கிறது
கடல்
—-
செப்டம்பர் 23, 2002.
சூழல் கருதி “அஃதே இரவு அஃதே பகல்” கவிதைத் திரட்டிலிருந்து
- பெரானகன்
- வாரபலன் டிசம்பர் 30,2004 – தோழர் நிர்பன் , யசோதர – யமுனா, அரசாங்க விருந்து ,கொலைகள் அலைகள்
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 52
- இன்று புதிதாய்ப் பிறந்தோம்.. ?
- சூசன் சாண்டாக் – ஒரு வாசகனின் அஞ்சலி
- சமஸ்கிருதமயமாதலும் நடுக்காட்டு இசக்கி அம்மனும்
- கடல் கொந்தளிப்பைக் குறித்த எச்சரிக்கையில் குளறுபடி
- இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 2
- சுனாமி அழிவு :: உரிமையும் கடமையும்
- கடல்கோள் அழிவிற்கு உதவுவோர் கவனிக்க வேண்டியது!
- கடற்கோள்
- விலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது ட்சுனாமி
- பெரியபுராணம் – 24
- கவிக்கட்டு 42
- ஞானக்கோமாளி – கவிதாப் பிரசங்கம்
- அறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்
- தவறான திருப்பம் (ஆங்கில மூலம் : ஆகா ஷாஹித் அலி)
- கடற்கோள்
- இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலை மதில்கள்! (Earth Quake Giant Sea Waves Attack South Asian Countries 2004)
- கடலம்மா….
- அழுகிறபோது எழுதமுடியுமா ?
- தெற்காசிய இந்து/இஸ்லாமியப் பண்பாடுகள் – ஒரு மறுசிந்தனை -1
- சாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்
- ஓவியப் பக்கம் – பதினொன்று – ஜார்ஜ் கிராஸ்ச்- ஓவியமும் அரசியலும்
- மெய்மையின் மயக்கம்-32
- மக்கள் தெய்வங்களின் கதைகள் – 15. வன்னியன் கதை
- சங்கீதமும் வித்வான்களும்
- ரெஜி
- உடன் பயின்ற நண்பனுக்கு ஒரு மடல்!
- கடிதம் டிசம்பர் 30, 2004-எஸ். அரவிந்தன் நீல கண்டன்: அருள் செல்வன் கந்த சுவாமி: சலாஹுத்தீன்: ஜோதிர் லதா கிரிஜா
- திரு பத்மநாப ஐயருக்கு 2004 ஆம் ஆண்டிற்கான இயல் விருது
- கடிதம் டிசம்பர் 30,2004 – பத்திரிகைகளின் தவறான போக்கு!
- கடிதம் டிசம்பர் 30,2004
- துயருறும் இலங்கை மக்களின் நிவாரணத்திற்கு அவசர வேண்டுகோள்!
- சுனாமி
- கடிதம் டிசம்பர் 23,2004
- மார்க்ஸ், டார்வின் மற்றும் பிரச்சாரம்
- ஒரு வேண்டுகோள்
- சுனாமி
- பத்மநாபஐயர்
- சதாத் ஹசன் மண்டோ நூல் வெளியீடு
- ‘சும்மா வருவாளா சுகுமாரி ? ‘ – இசை விழா விமர்சனம் – II
- விடுபட்டவைகள்-3 -தீர்க்கம்
- Reporting from Chennai about the Relief efforts on the Tsunami hit areas.