கருவறை சொர்க்கம்
சுஜாதா சோமசுந்தரம்
பத்துமாத இருட்டறை உலகம்
பலவித எண்ணங்கள்
எனக்கு அல்ல….
தன் உதிரத்தால்
உருக் கொடுத்து
உயிரையே பணயமாக வைத்து
உயிர் கொடுத்த
உன்னதமான தெய்வத்திற்கு….
பத்துமாதம் உனக்குள்
எந்தன் வளர்ச்சி
இதமான துன்பங்கள்
இருந்தும்….
எந்தன் சுகமான வசிப்பு
உந்தன் கருவறை மட்டுமே…
கண்களிலிருந்தும் குருடாக
வாயிருந்தும் ஊமையாக
காதிருந்தும் செவிடாக
மனமிருந்தும் மிருகமாக
நடிக்கும் பொல்லாத உலகில்
எனக்கு பிடித்தது
உந்தன் கருவறை உலகமே!
கருவறைக்குள் உடலை வளைத்தப்படி
கண்களை மூடிக்கொண்டு
உந்தன் சுவாசத்தில் எந்தன் சுவாசமும்
உந்தன் உயிரில் எந்தன் உயிரும்
உந்தன் எண்ணத்தில் எந்தன் எண்ணமும்
உந்தன் இன்பத்தில் எந்தன் இன்பமும்
உந்தன் துன்பத்தில் எந்தன் துன்பமுமாக
காலம் முழுவதும்
கருவறை சொர்க்கம்
சுகமென எண்ண்னேன்….
நீயோ..உந்தன்
பெண்மையை நிலைநாட்ட
அவசரமாக ஈன்று
அவசர உலகிற்கே
அர்ப்பணித்து விட்டாய்…
பாசத்தின் அருமையை
படைத்தவனே
உன்னிடம்தான்
பிச்சை கேட்க வரவேண்டும்.
உந்தன் கருவறை பாடம்
என்னை செதுக்கி செதுக்கி
சிற்பமாக்கியுள்ளது.
உந்தன் சிந்தனை ஒட்டத்தில்
ஒரு துளி என்னிடம்
இருப்பதால்தான்…
மிருகமாகாமல் இருக்கிறேன்.
நீ என்னை ஈன்றதற்காக
கர்வப்படலாம்…,
நான் உந்தன் கருவறையில்
காலம் முழுவதும்
இருந்திருந்தால் மட்டுமே
கர்வப்பட்டிருப்பேன்.
போதும் தாயே….! போதும்
வாழ்க்கையும் கற்று தந்தாய்,
வாழவும் கற்று தந்தாய்,
இந்த மண்ணில் பிறந்தற்காக….
—-
சுஜாதா சோமசுந்தரம் , சிங்கப்பூர்.
- தமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது – 2004
- நிஜங்களாக்கு….
- In a different league : ஹிண்டுவைப் பற்றிய ஒரு முன் எச்சரிக்கை
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் -11 : AIMSIndia இசைக் கச்சேரி
- காங்கிரஸின் இன்னொரு கரிபி ஹடாவ் பட்ஜெட்
- சீனா : கம்யூனிஸத்திலிருந்து பாஸிஸத்துக்கு
- வாரபலன் – ஜூலை 15 , 2004 : பொன்குன்னம் வர்க்கி , மரணத்திற்குப் பின்னும் மதம் விடாது , அடி உதவுமா , சிவகுமாரின் ‘கொங்குதேர் வாழ்
- குண்டுமணிமாலை
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -28
- நாகூர் ஹந்திரி
- உள் சாரல்
- எங்கள் தாயே
- தீருமா சென்னையின் தாகம் ?
- வெங்கடேஷின் ‘நேசமுடன் ‘- அறிவுப்பூர்வமான தளம்: அக்கறையான தேடல்.
- வெந்தயக் கோழிக்கறி
- பரிதியின் ஒளிக்கனலில் மின்சக்தி உற்பத்தி [Electrical Energy from Solar Power]
- கணவனைக் கொல்லும் காரிகை
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- காற்றுக்கிளி
- சாவோடு வாழ்தல்
- கருவறை சொர்க்கம்
- சத்தியின் கவிக்கட்டு 15
- கழுகுக்குத்தெரியுமா கற்பூர வாசனை ?
- பாஸ்டன்வாசியின் செல்லாத வோட்டு
- புரட்சி வருகுது – பாரன்ஹீட் 911
- கடிதம் ஜூலை 15,2004
- கடிதம் ஜூலை 15, 2004 -பாலைவன வெட்டுக்கிளிகள், வஹாபிசம், கிணற்றுத் தவளைகள்
- கடிதம் ஜூலை 15,2004
- உலகத் தமிழ் சிறுகதைப் போட்டி முடிவுகள்
- மனவெளி 11-வது வருட நாடக நடன விழா- ஜூலை 18 , 2004
- ஆட்டோகிராஃப் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ‘
- எத்தனை நூற்றாண்டு வந்தாலும்
- அரசியலும் ஆங்கில மொழியும்
- பாப்லோ நெருடா
- Capturing the Freidmans (2003)
- பாரென்ஹீட் 9/11
- சிம்ஃபனியில் திருவாசகம்
- கடிதம் ஜூலை 15, 2004
- மெய்மையின் மயக்கம்-8
- உணர்வு
- சமாதானமே!
- நிஜங்களாக்கு….
- அதே கனவு
- கழிவுகள்
- மழை வருது
- வேடத்தைக் கிழிப்போம் – 2
- விழிப்பு
- இந்தப் புத்தகத்தின் மீதென் காதல்
- கேள்விகளின் புத்தகத்திலிருந்து
- துணைநலம்