மருதாணி
புகாரி, கனடா
அடா மருதாணீ
என்
விரல் கன்னியர்
நாணிச் சிவக்க
அப்படி என்னதான்
ரகசியம் சொன்னாய்
என்
மன்மதன் அனுப்பியோ
இங்கு நீ
தூது வந்தாய்
நீ
முத்தமிட்டு
முத்தமிட்டா
என்
விரல் நுனிகள்
இப்படிச் சிவந்தன
O
மருதாணீ
நீ
யாருக்குப் பரிசம் போட
இங்கே
பச்சைக் கம்பளம்
விரித்தாயோ
அடியே…
நீ
வெற்றிலையைக் குதப்பி
என்
விரல்களிலா
துப்பிவிட்டுப் போகிறாய்
அன்றி…
உன்னை
நசுக்கி அரைத்து
இங்கே
அப்பிவிட்டுச் சென்றதற்கு
நீ சிந்தும்
இரத்தக் கண்ணீரோ
இது
அழாதேடி தோழீ
உன்
மரகத மொட்டுக்கள்
என்
சின்ன விரல் காம்புகளில்
செந்தூரப் பூக்களாய்ப்
பூத்ததாலேயே
நான் பூத்திருக்கிறேன்
என்
அவருக்காய்
காத்திருக்கிறேன்
அவர் வரட்டும்
உன்
காயங்களுக்கு
அவர் இதழ் எடுத்து
ஒத்தடம்
கொடுக்கச் சொல்லுகிறேன்.
*
buhari@rogers.com
- ஒரு பூட்டுக்குப் பின்னால்….
- அன்பே வெல்லும்
- ஜெனிபர் லோபஸ்:
- ஊர்க்கதை
- காமராஜர் 100
- முக்கோணக் கிளையில் ஆடும் மூன்று கிளிகள்![பெருங் கதை]
- மீண்டும் பிறவி வேண்டும்
- கடிதங்கள்
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 10
- வாரபலன் ஜூலை 17, 2003 (மாம்பல செய்தித்தாள், சுத்தம் பாக்கில், கவிமணி கீர்த்தனை, ஜெயகாந்தன்)
- குறிப்புகள் சில 17 ஜூலை 2003 (தாஜ்மஹால்-காங்கிரஸ்-இடஒதுக்கீடு-இரண்டு புத்தகங்கள் பற்றி ஒரு குறிப்பு)
- பெங்களூர் ரயில் நிலையத்தில் ஒரு அனுபவம்
- வரதட்சணை மீது வழக்குப்போர் தொடுத்த புரட்சிப் பெண் நிஷா ஷர்மா!
- உலக அரங்கில் தமிழ் இலக்கியம்
- விளாதிமீர் ஐவனோவிச் வெர்னாட்ஸ்கி
- கல்யாணப் பயணம்
- காதல் கடிதம்
- ஆதங்கம்!
- அரசு ஊழியர்கள் – ஏன் இந்த அவமானகரமான தோல்வி ?
- காலம்
- அழகு
- மழை
- இறுதிவரை….
- அறிவியல் மேதைகள் சர் ஜேம்ஸ் சாட்விக் (Sir James Chadwick)
- மனம்
- வேடிக்கை உலகம்
- விமரிசனம்
- பாரதத்தில் முதல் அணுசக்தி பரிமாறிய தாராப்பூர் கொதிநீர் அணுமின் நிலையத்தின் பிரச்சனைகள் [Problems in Tarapur Atomic Power Station
- ஸுகினி சட்னி (Zucchini chutney)
- சுஜாதாவும் இலக்கியமும்-புனைவுகளுக்கு அப்பால்-2
- அழகான ராட்சசி
- விலைகொடுத்துக் கற்கும் பாடம் (துாமகேதுவின் ‘போஸ்டாபீஸ் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 69)
- மானுட உறவின் புதிர்கள் ( திருகோணமலை க.அருள் சுப்பிரமணியனின் ‘அம்மாச்சி ‘ சிறுகதைத் தொகுதி-நூல் அறிமுகம்)
- இருதலைகள்…
- ‘அனைத்தும் அறிந்த ‘ ஒரு விமர்சகருக்கு ‘ஒன்றுமே அறியாத ‘ ஒரு வாசகனின் பதில்
- ஒண்டுக் குடித்தனம்
- திரிசங்கு
- எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை
- தமிழர் உணவு
- பசுமை – அறிவியல், அரசியல் மற்றும் மண் சார்ந்த மரபுகள்-1
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினைந்து
- விடியும்! நாவல் – (5)
- கற்பனை
- கோபத்துக்கும் கோபம் வரும்
- நீதித் தேவதையே நீ சற்று வருவாயா ?
- பிழைக்கத் தெரிய வேணும் கிளியே!
- உறைவிடம்
- மரக்கூடு
- சா. கந்தசாமியின் படைப்புகள்
- மருதாணி
- வருத்தம்
- ‘திரும்பிப் பார்க்கின்றேன் ‘
- இரண்டு கவிதைகள்
- Langston Hughes கவிதைகள்
- அஞ்சாதே! கெஞ்சாதே!
- விமர்சனத் தீ
- கால பூதம்…