வாக்குமுலம்

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

யாழி


*இந்த கவிதை மூலம் ஈராக் குழந்தைகளின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற என் எண்ணத்தை அனுப்பியுள்ளேன்.

எரிவது எண்ணை கிணறுகள்
மட்டுமல்ல!
எனது
வண்ணக்கனவுகளூம் தான்!

பிஞ்சுக் கரங்களில்
பேரீச்சம் பழங்களை உதிர்த்த
நான்
இன்று
உதிர்ந்த தலைகளிலிருந்து
எண்ணிக்கையை
கற்றுக்கொண்டிருக்கிறேன்!

அதிகாலை
சூரியன் விடிந்து
நான்
விழிப்பதில்லை.
வெடிகுண்டுகளின்
சப்தங்களிலிருந்துதான்!

விமானங்களின் இறைச்சலும்
பீரங்கி டாங்குகளும் தான்
எனது
பள்ளிக்கூடங்கள்!
படிக்கின்ற பாடங்களோ
பதுங்கி தப்பிக்கின்றது தான்!

அமெரிக்க வீரனின்
தோல் சராய்கள்
எனக்கு கிடைத்தால்
என் பாதங்களை
வெப்பச்சூட்டிலிருந்து
பாதுகாத்துக்கொள்ள முடியும்!
ஆனால்
கண்ணிவெடிகளிலிருந்து!

ஓரிரண்டு ரொட்டித்துண்டுகளும்
சிறிது தண்ணீணிரும்
இருந்தால் போதும்
இன்று
கழித்துவிடுவேன்!

ஒருவேளை நாளை
நான்
உயிருடன் இருந்தால்
எனக்கு
ரொட்டித்துண்டுகள்
கிடைக்காமலா போய்விடும்!

murali_dha@yahoo.com

Series Navigation

யாழி

யாழி