கவியோகி வேதம்
யின்னும் என்ன தூக்கம் என்றே ?- ‘டாமி ‘
…என்னைத் தட்டி எழுப்புது;-வெளியே
நின்று குரைத்த களைப்பு போக்க-அது
….நீள ‘வாக்கிங் ‘கிற் கழைக்குது!
‘காலை நடந்தால் உடம்புக்கு நல்லது ‘-அதி
…காலைச் சூரியன் சொல்லுது!
நீல வானம் சிவப்பாய் மாறும்-வித்தை
…நித்தம் எனக்குப் பிடிக்குது!
கடலின் கரையில் டாமி ஓட-என்
…கால்கள் நனைந்து சிலிர்க்குது!
கடலையைப் போல ‘நண்டுகள் ‘ உருண்டு-என்
….கவிதை- மனசைத் திறக்குது!
யிலையில் தூங்கும் பனியை விரட்டி-கதிர்
…எல்லாச் செடியையும் எழுப்புது!
வலையில் மாட்டும் மீன்கள் மட்டும் ?-அய்யோ
…மனசை ரொம்ப வாட்டுது!
(யோகியார்)
sakthia@eth.net
- இலையுதிர்க் காலம்.
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது -4( தொடர்கவிதை)
- வலி
- வாழ்வும் கலையும் (இறுதிப்பகுதி)
- ஆவலும் அப்பாவித்தனமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 36-வைக்கம் முகம்மது பஷீரின் ‘ஐஷூக்குட்டி ‘)
- ஊசியின் காதும் ஒடுங்கிய தெருவும் (கபீர் தாசாின் சிந்தனைகள் பற்றி சில குறிப்புகள்)
- செயற்கைக் கதிரியக்கம் ஆக்கிய ஐரீன் ஜோலியட் கியூரி [Irene Joliot Curie] (1897-1956)
- அறிவியல் மேதைகள் ரூதர் ஃபோர்ட் (Ruther Ford)
- பாட்டு படும் பாடு
- நீங்கள் இன்று…
- படிக்க மறந்த கவிதை
- நலமுள்ள நட்பு
- பால்
- கடற்கரை வாக்கிங்
- வட்டத்தின் வெளி
- வேங்கூவர் – கனடா
- வேகத் தடுப்புகள்
- வாழ்வும் கலையும் (இறுதிப்பகுதி)
- சிந்து சமவெளி நாகரிகம் : ஒரு மறு பார்வை
- எஸ் என் நாகராஜன் 75 ஆண்டு நிறைவு : மலர் வெளியீடு
- என் குர் ஆன் வாசிப்பு
- சுற்றம்
- அரிசிபால்தீ
- நாங்கள் பேசிக்கொள்கிறோம்