திலகபாமா, சிவகாசி
முல்லை மலர் வாசனையாய்
எனக்குள் விரியும் உலகம்
அதில் நான்
யாருக்கும் எதுவுமில்லை
தாய்க்கு மகளில்லை
தம்பிக்கு அக்காளில்லை
கணவருக்கு மனைவியில்லை
காதலனுக்கு காதலியில்லை
தோழனுக்கு தோழியுமில்லை
நான் சிருஸ்டித்த
எனக்கான உலகம் மட்டுமே
எனது குழந்தையாய்,நான் படைத்ததால்
தாயாய் , எனைத் தாங்கியதால்
காதலனாய் என்னோடே வாழ்ந்ததனால்
என் உலகத்தில்
பூக்களுக்கு மகரந்தகலில்லை
பூக்கள் அடையாளம் தொலைத்து
நிறம் மாறிய இலைகளாய்
சிரித்து திரியும்
கற்களில் பூக்கள் செய்யலாம்
பூக்கள் கல்லாக முடியாது
கனவுதானென்றாலும்
அடுத்தவர் கனவுகளின் நிஜமாயிராது
என் கனவுகளின் நிழல்
மணக்கும் கல்லாக முடியாத பூக்கள்
தொலைத்த மகரந்த உறவுகளோடு
உணர்வுகளை பேசித் திரியும்
மனிசியாய் நான் சிரித்து திரிய
யாருக்கும் நான் எதுவுமில்லாத
யாரும் புக முடியா என் புது உலகம்
mahend-2k@eth.net
- சொல்லுவதெல்லாம்
- என் கதை
- அழைப்பிதழ்
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது…(தொடர்கவிதை ெ3)
- யாருக்கும் நான் எதுவுமில்லை
- உதய கீதம்
- புதையல்
- வாழ்வும் கலையும்
- இனிப்பும் ஆபத்தும் (எனக்குப் பிடித்த கதைகள் – 35 -சார்வாகனின் ‘கனவுக்கதை ‘)
- அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம்
- உலகத்தின் மிகப்பெரிய தங்க புதையலின் ரகசியம்
- பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow1904-1968)
- அறிவியல் மேதைகள் சார்லஸ் டார்வின் (Charles Darwin)
- வளர்சிதை மாற்றம்
- குழந்தைகள் பற்றிய எட்டுக் கவிதைகள்
- விரதம்
- சொல்லியிருந்தால்…
- தீவுகள்
- அன்பைத் தேடி…
- தேடல்
- முதல் சினேகிதி
- தன்னாட்சி.. ?
- மதமாற்றத் தடைச் சட்டமும் தமிழ் நாட்டின் அரசியலும்
- மன அஜீரணத்துக்கு மருந்து.
- வாழ்வும் கலையும்
- வேதத்தின் கால நிர்ணயமும் ஆரிய படையெடுப்புக் கோட்பாடும் : ஒரு மறு பார்வை
- தமிழக ஆறுகளைச் சிதைக்கும் மணற் குவாரிகள்
- கணவன்
- சபா- தீபாவளி ஸ்பெஷல்