நீ.. நான்… அவன்…

This entry is part [part not set] of 27 in the series 20021001_Issue

சேவியர்


0

நின்று தொலையாத
துன்ப அலையிலும்,
ஆலயம் பற்றிக் கிடப்பவனே
ஆத்திகன்.

நாளை செத்துப் போவேனென்று
சேதி வந்தபின்னும்
நாத்திகனாகவே
இருப்பவன் தான்
நாத்திகன்.

எந்த நிலை நாளையானாலும்
இன்றின் பகுதியில்
மனிதாபிமானக் கரங்களை
உலரவிடாதவனே
முழு மனிதன்.

வாய்ப்பில்லா இடத்தில்
வாய்மூடிக் கிடப்பதல்ல தூய்மை.

தப்பிக்கும் வாய்ப்புகள்
சுற்றிலும் கிடந்தாலும்,
தப்பு செய்யாததே
ஒப்பில்லா உயர்ந்தது.

நேர்மையின் நிலத்தில் வேர்விடு,
இல்லையேல்
இருக்கும் வேர்களுக்கு
நீர் விடு.

0

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்