மரணத்தின் யோசனையில்…

This entry is part [part not set] of 29 in the series 20020324_Issue

எஸ். வைதேஹி.


இின்னும் இந்த வெளி சுருங்கவில்லை.
ரோட்டோரமாய் ஆன்மாவை யாரோ போட்டிருக்கிறார்கள்.
வெளவாலும் ஆந்தையும் வீறிட்டுக் கத்துகின்றன.
வெப்பமாய் திடாரென நான் விழித்தபோது
கனவில் என் மரணம் நிலையானது!

யோசனையும், தவிப்பும் தலைக்குள் மோதி செத்து
என்னை சிதறச் செய்யும்
வார்த்தைகள் பாவம் ஏற்கா
கணம் தேடும் மவுனம்
கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன் நான் எங்கிருக்கிறேன் என்று
அது அது அதுவே……………

* * * * * * * * * * * * * * *

Series Navigation

எஸ். வைதேஹி.

எஸ். வைதேஹி.