நிரந்தர நிழல்கள்

This entry is part [part not set] of 12 in the series 20010722_Issue

எட்வின் பிரிட்டோ


இருவாரங்களுக்கு முன் நாம் முகம் பார்த்த

நிலவு இன்று உருத்தொியாமல்…, அமாவாசையாம்.

இன்று செடியின்கீழ் சருகாய், நேற்று நீ அரை

மணி நேரம் கண்கொட்டாமல் ரசித்த செம்பருத்தி.

சாஹித்திய நேரங்களில் நொடியில் மனதுள்

ஜனித்து மாித்துப் போகும் கவிதைகள்

கை குலுக்கும்போதே விடைப்பெற்றுப்

போகும் புது அறிமுகங்கள்

தேவைகளின் போதுமட்டும்

தேடிவந்துப் போகும் நண்பர்கள்

இப்படி நிரந்தரமில்லா நிழல்களிடையில்

நிரந்தரமாய் நீயும், உன் நினைவுகளும் மட்டும்.

Series Navigation

எட்வின் பிரிட்டோ

எட்வின் பிரிட்டோ