ஜனநாயகமும் இஸ்லாமும்-ஒரு ஒப்பீடு பகுதி இரண்டு (2)

This entry is part [part not set] of 33 in the series 20110424_Issue

நல்லான்


முதற் பகுதியைத் தொடர்ந்து இப்பகுதியில் எழுதுவதற்கு முன், இஸ்லாமியத்தில் எனக்கு அறிமுக அறிவு எப்படிக் கிடைத்தது என்பது பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஏற்றுக்கொண்ட வேலைகளுக்கிடையே, ஓய்வு நேரங்களில் இஸ்லாமைப்பற்றி படிப்பது எனும் ஆரம்ப வழக்கத்திற்கு பதிலாக, போகப் போக மிக கவனத்துடன் ஆழ்ந்து படிக்கவும் தொடங்கினேன். ஆரம்பத்தில், முகம்மது சொன்னது செய்தது ஆகியவைகளை பாரபட்ச மின்றி படித்தபின், இவைகளில் உள்ளவைகளை, அப்படியே முழுதுமாக பயனற்றது என வீசியெறிந்து விடுவதா, அல்லது மறுப்பதா என மனக் குழப்பம் தான் முதலில் எதிவிளைவாக ஏற்பட்டது!

வெளி உலகத்தில்
• “இஸ்லாம் என்றால் அமைதி” என்று விளம்பரக் கவர்ச்சி வாசகங்களாகப் பறைசாற்றப் படுவதற்கும்,
• இஸ்லாமிய நூல்களில் உள்ளவைகளுக்கும், அதிலுள்ளவைகளில் உள்ளபடியே, முஸ்லிம்கள் எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும்படி உண்மையாக செயலில் மெய்ப்பித்துக் காட்டுவதற்கும்,
இவ்வளவு நேர்மாறான முரண்பாடுகளா? ஏன்? என வெளியில் யாரிடமாவது சொல்லிக் கொள்ள, இதைப்பற்றி விவாதம் செய்ய எனக்குள் மிக அச்சம்தான் முதலில் ஏற்பட்டது. சந்தேகங்களை யாரிடம் கேட்பது என தயக்கமும் அடுத்து உண்டானது. இஸ்லாமைப்பற்றி நான் படிக்கும் போதே இந்நூல்களில், எனக்கெழுந்த சந்தேகங்கள் எல்லாவற்றிற்கும் விடைகள் கருத்தியலாகக் கிடைத்தாலும் அது உண்மை நடைமுறையில் சரியா தவறா என இஸ்லாமிய நிபுணர் ஒருவர் பாகுபடுத்தி உறுதிபட நிலை நிறுத்திச் சொல்வதற்குக் கிடைக்காததால், என்ன செய்வதென தெரியாமல், விழித்திருந்தேன். நமக்கு நேரடியான சம்பந்தமில்லாத இஸ்லாமிய இயக்கத்தைப் பற்றி முழு விவரம், உண்மையான நடைமுறைகள், ஆகிய மற்ற விஷயங்கள் அனைத்தையும் அறியாமல், இஸ்லாமியத்தைப் பற்றி சித்தாந்த விமர்சனம் செய்வது மிகத் தவறல்லவா? ஆனால், என் மனதில் ஒன்று மட்டும் மிக உறுதியாகப் பதிவானது. அதாவது இஸ்லாமிய நூல்களில் உள்ளபடியே தான், உலகெங்கும் இஸ்லாமியர்கள் செயலில் காட்டும் நடவடிக்கைகள் உண்மையில் ஒத்திருக்கின்றன என கேட்டு, கண்டு, படித்த பிறகு, மனதில் என் செல்வழித் தடம் தவறல்ல என்பதை அப்போது உணர்ந்தேன்.
இணைய வசதி பற்றி அந்நாட்களில் அவ்வளவாக எனக்கு பழக்கத்தில் வைத்துக்கொள்ள ஏதேதோ காரணங்களுக்காக நேரவில்லை. முன் நாட்களில், இஸ்லாமியத்தைபற்றி, ஆங்கிலத்தில் மூல நூல் கிடைப்பதும் அரிதாக இருந்தது. அப்படிக் கிடைத்தாலும், அதிலுள்ள கவர்ச்சியற்ற உரைநடைகளை படித்து, அதன் உண்மைப் பொருளை அறிய முதலில் சற்று சிரமமாகவே இருந்தது. இதில் நமக்கு வழிகாட்டிகளாக இஸ்லாமிய நிபுணர்களான முல்லாக்களிடம் கேள்வி கேட்கும் போது நாமே தவறாக ஏதாவது ஏடாகூடமாக கேட்டு விடுவோமோ என உள்ளூர பயமாகவும் இருந்தது. இதன் விளைவு என்ன நேருமோ என மனதில் கலக்கம் சேர்ந்து உண்டானது. இதனால், என் சந்தேகங்களைக் களைய இஸ்லாமிய நிபுணர்களைக் கேட்கும் எண்ணத்தை முற்றிலும் தவிர்தேன். ஆனால், இன்று இஸ்லாமியத்தைப் பற்றி அறிவதற்குக் கிடைக்கும் மூல ஆவணங்கள், இணையத்தில் ஏராளம். குறைவொன்றுமில்லை.
இந்நாட்களில் மிக முக்கியமாக, இஸ்லாமிய செயல் பாடுகளில் உள்ளவைகளை, அவர்கள் நூல்களில் உள்ளது உள்ளபடி, அநேக கொள்கைகளை ஆங்கிலத்தில் விவரிக்கும் இஸ்லாமிய நிபுணர்களுடைய அபிப்பிராயங்கள் இன்று இணையங்களில் ஏராளமாகக் கொட்டிக் கிடைக்கின்றன. நான் கேட்க வேண்டிய பல கேள்விகளுக்கு முன்னரே பதில்களும் தயாராக இருந்தன. இவைகள் நான் எதிர்பார்த்தபடி, என் கருத்து சரியே என உறுதிபட நிலை நிறுத்தி சொல்வதற்குக் கிடைத்ததில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது. இஸ்லாமிய தமிழ் இணையங்கள் வாயிலாக தமிழ் ஒருங்குறியில், இன்று கிடைக்கும் குரான், ஹத்தீஸ்கள், முதலியவைகளும், ஆங்கிலத்தில் பல இஸ்லாமிய நிபுணர்களால் ஒப்புதலளிக்கப் பட்ட மொழிப்பெயர்ப்புகள், பல ஹத்தீஸ்கள், முதலியவைகளை படித்து ஒரு வழியாக முடிக்க, சில வருடங்கள் எடுத்துக் கொண்டேன். இதற்கும் மேலாக, என் மனதில் அவ்வப்போது இஸ்லாமியத்திற் கெதிராக எழும் சந்தேகங்களைக் களைய மின்னஞ்சல் மூலமாக நம்பிக்கைக்குகந்த, சில பிரசித்தி பெற்ற, இஸ்லாமிய நிபுணர்கள்-ஒத்த கருத்துடைய முன்னாள்-முஸ்லிம்கள், நிரந்தர உண்மை நண்பர்களாக எனக்குக் கிடைக்கும் பேறு பெற்றேன்.
ஆங்கில இணையங்களில் அவ்வப்போது கிடைக்கும் பலதரப்பட்ட கட்டுரைகளைப் படித்தவுடன் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக உறுதி, தெளிவு, தைரியம் ஏற்பட்டது. இவைகளோடு, உலகில் நடக்கும் இஸ்லாமிய நடவடிக்கைகளையும், நிறைவேற்றும் பாணிகளையும் டெலிவிஷனில் பார்த்து, படித்து, சிந்தித்து, அனுபவித்தவுடன் மனதில் ஒரு அசைக்க முடியாத உறுதி தன்னால் ஏற்பட்டும் விட்டது. இந்திய மண்ணில், அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில் எழுதப் படிக்க அறிந்தோர் பலருக்கு இஸ்லாமிய உண்மைகளைப் பற்றி ஒன்றும் தெரியாமல் இன்னும் இருக்கிறார்களே என்ற வருத்தம் தான் அதேசமயம் மனதில் ஓங்கியது. இஸ்லாமிய அபாயம் உலகை சூழ்ந்துள்ளது என நான் தமிழில் கட்டுரைகள், பற்பல தலைப்புகளில் (இஸ்லாமிய இந்திய அரேபிய சரித்திரம், இஸ்லாமிய வங்கி முறைகள் என) எழுதினாலும், அவைகளில் உள்ள உட்கருத்தை முற்றிலும் அறியாமல், ஏற்க மறுக்கப் பட்டது உண்டு. இருந்தும் என் முயற்சியைத் தளர விட்டுவிட என்றுமே நான் தயாராக இருந்ததில்லை. காரணம், எனது அபிப்பிராயங்கள் உண்மையின் அடிப்படையில் உள்ளது என எனக்குத் தெரியும். அந்த எண்ணமே இன்றும் இன்னும் உரமாக என்னை ஊக்குவித்தது.
இந்திய நாட்டில் தற்போது உயிருடன் இருப்பவர்களுக்குள் இஸ்லாமியரல்லாத-ஆனால், இஸ்லாமியத்தைப் பற்றி நன்கு கற்றறிந்த பெரியோர்கள், மிக மிகக் குறைவு. முந்நாட்களில், யோகி விவேகானந்தர், அரபிந்து மகரிஷி, சீதாராம் கோயல், ராம் ஸ்வரூப், போன்ற பெரியோர் இருந்தனர். அவர்கள் அன்று எழுதி விட்டுச்சென்றவைகள் இன்னும் உபயோகமாக உள்ளன. இன்று Dr. NS. ராஜாராம், அருண்ஷௌரி, டாக்டர் ராதேஷ்யாம் பிராம்மசாரி முதலியோர் வெளியீடுகளும் மிகவும் சிறந்தவை, மற்றும் ராபர்ட் ஸ்பென்சர், க்ரைக் வின், முன்னாள்-முஸ்லிம்களான, காலம் சென்ற பாகிஸ்தான் அன்வர் ஷேக் (பின்னர் அனிருத் ஞான் சீகா என பெயர் மாற்றம் செய்துகொண்டவர்), ஈரானைச் சேர்ந்த டாக்டர் அலி சினா, சிரியா நாட்டு வஃபா சுல்தான், டேனிஷ் நாட்டு கீர்ட் வில்டெர்ஸ், பங்களாதேஷ் அமில் இமானி, சையத் கம்ரான் மிர்ஸா, அபுல் காசம், ஆயீஷா அஹ்மத், இபின் வராஃக், எம். ஏ. கான், அஸ்கார் அலி இஞ்சினீயர், முகம்மது அஸ்கார், முதலியோர் எழுதியவை என்றும் படிக்கத்தக்கவை, மேலை நாட்டில் கிருத்தவர்களாகப் பிறந்தும் ஹிந்துவாக இருப்பவர்களான, ஸ்டீபன் நாப், டேவிட் பிஃராலி, கீன்ராட் எல்ஸ்ட், பிஃராங்காய் கௌடியர் போன்ற மேதைகள் எழுதியவைகளோடு பற்பல ஆங்கிலக் கட்டுரைகளை இணையத்திலிருந்து அவ்வப்போது தரவிறக்கம் செய்து, படித்து, சிந்தித்த பின், தன்னால் தெளிவுடன் மனதில் ஒரு புதிய சக்தி பிறந்தது. எல்லா விஷயங்களையும் ஆதாரத்துடன் தமிழில் உடனுக்குடன் எழுத மனம் துடித்தது. தங்களுக்கே விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகளைக் களைந்து, வெளி நாட்டு இணையங்கள் போல மனத் திண்மையுடன் வெளியிடும் தமிழ் இணையங்கள் இந்திய ஜன நாயக நாட்டில் கிடைக்க மாட்டார்களா எனவும் பலகாலம் ஏங்கியிருக்கிறேன். தினவடங்க வெளி நாட்டு ஆங்கில இணையங்களுக்கு எழுதி அவைகளும் முன்னாள் இஸ்லாமியர்- அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டு, பாராட்டுகளுடன் வெளியானால் மட்டும் மன நிறவு ஏற்பட்டு விடுமா? இக்கருத்துக்களை நம் தமிழ் இணையங்களும் வெளியிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். தமிழ் இணையங்கள், இத் தொண்டை எவ்வளவு சீக்கிரம் செய்யத் தொடங்குகிறார்களோ அது நம் தமிழ் மக்களுக்குச் செய்யும், மிகச்சிறந்த, அரிய தொண்டாகும். தக்க ஆதாரங்களுடன் எழுதப்பட்ட தமிழ்க் கட்டுரைகளைத் தயங்காது வெளியிட்டால், வருங்கால தமிழ் மக்கள் இவ்விணைய நிருவனர்களை மனதாற வாழ்த்து வார்கள். இது என் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கை. இப்போது கூட பெரும்பாலான தமிழ்மக்கள் இஸ்லாமியம் பற்றி திக்கு தெரியாத காட்டில் தான் உழல்கிறார்கள்.

இனி, இஸ்லாமிய வரையறைகளைப் பற்றி (definitions):

இஸ்லாமிய சட்டங்கள், அதாவது “ஷரியா” என்பது, குரானிலும், சுன்னாக்களிலும் கூறப்பட்டுள்ள விதிகளையே அடிப்படையாகக் கொண்டது. சுன்னாக்கள் என்பது, பல (ஸாஹீஹ்=நம்பக் கூடிய) ஹத்தீஸ்களாலும், “சிரா” எனும் முகம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இரு நூல்களின் கூட்டுத் தொகுப்பு. ஆக, இவ்விரண்டும் (ஹத்தீஸும், சிராவும்) சேர்ந்து தான் “சுன்னாக்கள்” எனப்படும். ஹத்தீஸ்கள் என்பது, முகம்மதுவின் வாழ்க்கையில் நடத்திக்காட்டிய பழக்க வழக்கங்கள்; நிகழ்ச்சிகள்; முகம்மது அந்தந்த சமயத்தில் பலரிடம் செய்யச் சொன்ன சடங்குகள் ஆகியவைகளில் தொகுப்பு (Mohammad”s 7th century exotic Traditions and Practices). ‘சிரா’வை, இப்னு இஷாஃக் (Ibn Ishaq) முகம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை (biography) எழுதிவைத்தவர். ஆக இந்த மூன்றையும் சேர்த்து, அதாவது

1. குரான்,
2. சுன்னாக்கள் (ஹத்தீஸ்கள்+சிரா) ஆகியவைகளை,

ஒன்றுக் கொன்றுடன் தொடர்புள்ள இஸ்லாமிய முத்தொகுப்புகள் (trilogy) என்ற பெயரும் உண்டு. இந்த முத்தொகுப்பு நூல்களில் உள்ளவைகள் அப்படியே அத்தனையும் ஷரியா சட்டங்கள் எனப்படும்.

இனி, முதற் பகுதியில் எழுதியதைத் தொடர்ந்து இப்பகுதியில் முக்கிய தலைப்புப் பொருள் பற்றி கவனிப்போம். 2004 ஜூன் 24இல், இரானிய தொலைக் காட்சியில், “அல்லாவின் கிருபையால், மக்களுக்கு அக்கிரமங்களை தொடர்ந்து அன்றாடம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அமெரிக்க, இஸ்ரைல் சமூகத்தினரை கூடிய சீக்கிரம் உலகிலிருந்து அகற்றிவிடுவோம்” அதற்கேற்ற திட்டம் முன்னரேயே தீட்டியாகிவிட்டது.” என தொலைக் காட்சி நிகழ்ச்சியில் அறிவித்துக் கொண்டிருந்தனர். பார்த்தவுடன் மிகவும் வருந்தினேன். மற்றோரு சமீபத்திய செய்தி: “”பல பெருங்கேடுகளை பயக்கக் கூடிய விஞ்ஞானிகளால், அணு ஆயுத அடிப்படையில், புதிதாக கண்டுபிடித்து பெருமளவில் தயாரிக்கப்பட்ட மிகக் செயல்திறமிக்க வெடிகுண்டுகளை (dirty radioactive IEDs) அல்-குவைதா தங்கள் வசம் தயாராக குவித்து வைத்துள்ளனர்”” என நம்பத்தகுந்த அரசியல் செயலாட்சிக்குறிய ஆவணங்கள் வழியாக தெரியவருகிறது”” . குறிப்பு:
http://www.vancouversun.com/news/Qaida+brink+using+nuclear+bomb/4205104/story.html கீழ்த்தரமான இந்த வெடிகுண்டு வெடிக்கப்பட்டால் இதனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்பிரதேசங்களில் புல் பூண்டுகளிலும் கூட நச்சைப் பரப்பி, ஒன்றையும் வளர விடாமல் தரிசு நிலங்களாக, மாசு படிய வைத்துவிடும். இதற்கும் மேலாக, மிக சமீப செய்தி. ஈரான் தன்னிடம் அணுகுண்டுகள் தயார் நிலையில் உள்ளன என பிரகடனப்படுத்தும், ஒரு தொலைக்காட்சி செய்தியை இச்சங்கிலியில் காணவும்: http://www.iraniumthemovie.com/ அணுகுண்டு வெடிப்பினால் உலகமே ஒரு தூசுகள் நிறைந்த மிகப் பெரும் பீப்பாயாக ஆகிவிடும் அபாயமும் உள்ளது.
டெனிஷ் நாட்டில் மிகப் பெரிய சமூகமாக வசிக்கும் முஸ்லிம்களுக்கு, அந்நாட்டு முஸ்லிமல்லாத பொது (டேனிஷ்) மக்கள் வெளியிட்ட விசித்திர மன்னிப்புக் கடிதம் கீழே தமிழாக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது:

“”கீழ்க்கண்ட எங்கள் குற்றங்களை தயவு செய்து மன்னித்துவிடவும்:

• இஸ்லாமிய நாட்டிலிருந்து இந்நாட்டுக்கு புதிதாக குடியேறிய முஸ்லிம்களாக இருப்பினும் நீங்களே அங்கிருந்து துரத்தியடிக்கப் பட்டவுடன், மற்ற நாட்டவர்கள் முஸ்லிம்களே ‘வேண்டாம்’ என்று உங்களை விரும்பாமல் ஒதுக்கிய போது, மனித நேய அடிப்படையில், எங்கள் அரசாங்கம் தான் உங்களுக்கு இருக்க இடமளித்தது, உணவளித்தது, உடையளித்தது, நல்ல படிப்பறிவுத் தந்தது, அதற்காக எங்கள் டேனிஷ் அரசாங்க சார்பாக மக்களாகிய நாங்கள் உங்களிடம் இன்று மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.
• உங்கள் மனைவிகள், மக்கள் உங்கள் நாட்டிலிருந்து உங்களை வந்தடையாதபோது, அவர்களையும் பாதுகாப்பாக டேனிஷ் நாட்டில் உங்களுக்காக வரவழைக்க ஏற்பாடு செய்து, அனைத்து செலவையும் டேனிஷ் அரசாங்கமே ஏற்று, இவர்களையும் உங்களுடன் நிரந்தரமாகத் தங்க வைக்க, எங்கள் அரசாங்கம் ஏற்பாடு செய்ததற்காக இன்று மிக வருந்து கிறோம்.
• நன்றி உணர்ச்சி என உங்களிடம் எதிர்பார்ப்பது தவறு என இப்போது எங்களுக்கு நன்றாகப் புரிகிறது! எங்களுக்காக இல்லாவிட்டாலும் இந்நாட்டுக்காகவாவது விசுவாச குடிமக்களாக உங்களால் இருக்கமுடியவில்லை. நீங்கள் இந்த நாட்டுக்குள் வந்ததிலிருந்து தான் எங்கும் சண்டை, சச்சரவு, அநாவசியக் கொலைகள், கொள்ளைகள் என ஏராளம் தினமும் நடக்கிறது. [[இதற்கு ஆதாரம்: ‘நிகோலாய் சென்னெல்ஸ்” (Nicholai Sennels) எனும் பிரசித்த உளநூல் வல்லுனர் உங்களைப்பற்றிக் கூறியவைகள்: (இதன் விவரங்கள் பின்வரும் பகுதியில் முழுதுமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
http://islammonitor.org/index.php?option=com_content&view=article&id=3934:muslims-and-westerners-the- psychological-differences&catid=180&Itemid=18 )]]
• நீங்கள் வேலை செய்யாதிருக்கும் போது கூட எங்கள் அரசாங்கம்தான் மாதாமாதம் உங்களுக்குப் பண உதவியையும் செய்தது. ஆனால், வேலை செய்யாது வீட்டிலிருக்கும் 24 மணி நேரத்தையும், உங்கள் பல மனைவியருடன் உல்லாசமாக இனப் பெருக்கத்தில் நீங்கள் ஈடுபட்டதன் விளைவாக உண்டான முஸ்லிம் குழந்தைகள் பெருக்கத்தையும் டேனிஷ் நாட்டுக்கு இன்றைய சுமையாக ஏற்படுத்தினீர்கள். இதற்கும் டேனிஷ் அரசாங்கமே இலவசமாக பிரசவ செலவையும் செய்தது; அதற்காக இன்று வருந்துகிறோம்.
• உங்களுக்கு இவ்வாறு எல்லா வசதிகளையும் ஏற்பாடு செய்ததால் அரசாங்கத்திற்கு உண்டான, நஷ்டங்களான, குடைக்கூலி, தொலைபேசிச் செலவு, இணயம், வாகனம், முதலியன இருப்பினும், எல்லாவற்றிக்கும் மேலாக உங்கள் மனைவி ஒவ்வொருவருக்கும் குறைந்தது எட்டு குழந்தைகளென சராசரியாக பெற்றுத் தள்ளினீர்கள். (ஆக, உங்கள் நான்கு மனைவி களுக்கும் ஒட்டுமொத்தமாக ஒரு முஸ்லிம் குடும்பத்திற்கு 32 குழந்தைகளாகிறது).

[[ஒரு தமிழ் வசனம் சொல்வார்கள், “வரவு செலவு எதிர்வீட்டுக்காரன் செய்யும்போது நெய்யிலேயே செய் பணியாரத்தை” என கணவன் தன் மனைவியிடம் சொல்வானாம்!]].
இவர்களுக்கு ஆகும் பள்ளிச் செலவு ஆகியவைகளையும் மற்ற இஸ்லாமியரல்லாத மக்கள் அளித்த வரிப் பணத்திலிருந்து தான் எங்கள் அரசாங்கம் செலவு செய்தது. இருப்பினும் நீங்கள் எங்களுடைய டேனிஷ் மொழி கற்க மறுத்து விட்டீர்கள். அதற்காக இன்று வருந்துகிறோம்; எங்களை மன்னித்து விடவும்.
• நீங்கள் விரும்பிய வண்ணமே உங்கள் இஸ்லாமிய நடவடிக்கைக்காக, ஒரு மசூதி கட்டும் செலவையும் எங்கள் அரசாங்கம் தான் உங்கள் இயல்பு தெரியாது ஏற்றுக்கொண்டது. அதனால், இதுவரை இருந்த அமைதியான சூழ்நிலையைக் கடந்து ஏதேதோ குரலில் ‘ஆதான்’ ஐ (நமாஸுக்குக் கூப்பிடும் குரல்) மசூதி ஸ்தூபியிலிருந்து (மனோராவிலிருந்து) ஒலிபெருக்கியின் மூலம் விபரீத எதிரொலியுடன் தொழுகைக்கு நீங்கள் ஒவ்வொரு நாளும் ஐந்து முறை விளித்ததையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டோம்; அதற்காக வருந்தி, மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.
• மசூதிதான் உங்கள் ‘ஜிஹாத்’ கொள்கையைப்பறப்ப, உணர்ச்சி வெள்ளத்தை உருவாக உபயோகிக்கிறீர்கள் என எங்க்களுக்கும் தெரியும்.
ஆகிய இவையனைத்தையும் உங்களுக்கு ஏற்பாடு செய்த எங்களைத் தான் இன்று நொந்து கொள்கிறோம்.
என மனம் நொந்து ஒரு மன்னிப்புக்கடிதத்தை ஒரு ‘திம்மி சங்கம்’ தெரிவித்துள்ளது. எப்படி இருக்கிறது?

ஜெட் பாபின், (Jed Babbin – இவர் முன்னாள் United States Deputy Undersecretary of Defense, during the first Bush administration) இவர் எழுதிய புத்தகத்தில், In the Words of Our Enemies, “” ஹிட்லர் ஏற்படுத்திய நாஸிகள் போல, தீவிர இஸ்லாமியர்களும், எப்போதுமே தங்கள் கலாச்சாரத்தால் உண்டான தாழ்வு மனப்பான்மை உண்மையை உணராமல், அதை மறைக்க, தங்களுக்குப் பிறரால் தான் மிகவும் அநீதி இழைக்கப்பட்டதாகவும், தாங்கள் மிகக் கொடுமையாகத் நடத்தப்பட்டதாகக் கண்ணீர் வடிப்பது வழக்கம். அதையே, தங்கள் சீடர்களுக்கும் உபதேசித்து, தங்களுடைய எல்லா பிரச்சனைகளுக்கும், உலகத்திலுள்ள மற்றவர்களே, மிக முக்கியமாக, அமெரிக்கா, இஸ்ரைல் நாட்டு யூதர்களும் தான் காரணம் என எப்போதுமே கண்ணீர் விட்டுப் புலம்புவார்கள்””. இதற்கெல்லாம், இவர்களுக்கு வழிகாட்டி இஸ்லாமிய இயக்க நூல்களில் உள்ளவைகளே மூல காரணம்.

அதே சமயத்தில், தற்போது தாங்கள் வெகு நாட்களாக நிகழ்த்திக் கொண்டிருக்கும், ஆப்பிரிக்க யதார்த்தத்தை மறைப்பதும் இவர்களுக்கு மற்றொரு வழக்கம்: அதாவது, இவர்கள் கூட்டாளிகளான மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அரேபியர்களால், தொன்று தொட்டு வட ஆப்பிரிக்க தேசங்களில் செயலாற்றும் இஸ்லாமியத்தால் மட்டுமே, அங்கு முடிவில்லாத குழப்பம், கிளர்ச்சி, அசாத்திய வன்முறை, ஒழுங்கின்மை முதலியவை நிலவுகின்றன என்பது பற்றி வாயைத் திறக்க மாட்டார்கள்! சுமார் பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் (1400 வருடங்களுக்குப் பிறகும்), மத்திய கிழக்கு அரேபிய நாடுகளிலிருந்து ஆப்பிரிக்கர்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, அங்கு ஊட்டப் பட்ட இஸ்லாமியம் தான் அந்நாடுகளில் எவ்வித முன்னேற்றமும் அடையாதிருப்பதற்குக் காரணம். இதன் விவரம் முழுதுமாக தமிழில் வெளியிடப்பட்டால், மனசாட்சியுள்ள எந்த மானிடரையும் உலுக்கிக் கலக்கிவிடும். உலகிலுள்ளொருக்கு இது தெரியாதென இவர்களுடைய அபிப்பிராயம். இதில், இவர்கள் பாலைவன-நெருப்புக்கோழி போன்று, இருப்பார்கள். ‘தன் கண்ணை மூடிக்கொண்டு விட்டால், உலகம் முழுதுமே ஒரே இருட்டென’ நெருப்புக்கோழி சொல்லுமாம். அங்குள்ள மக்களுக்கு இன்றும் மிக முக்கிய வழிகாட்டும் இயக்கம் இஸ்லாம் தான். அன்றிலிருந்து இன்றுவரை இதுதான் ஆப்பிரிக்க இஸ்லாமின் யதார்த்தம்.

உலகம் முழுதும் ஒரு ரணபூமியாக நிரந்தரமாக இருக்க, 7வது நூற்றாண்டில் முகம்மதுவால் துவக்கி வைக்கப் பட்டு, அன்றிலிருந்து இந்நாட்கள் வரை தொடர்ந்து ஒவ்வொரு இடத்திலும் நடத்திவரும் ‘ஜிஹாத்”தான், இக்கேடுகளுக்கு அடிப்படை முழுமுதற்காரணம். சற்று யோசித்துப் பாருங்கள். முஸ்லிம்கள் ‘ஜிஹாத்’ நடத்தாத இடம் உலகில் மிச்சமீதி எங்காவது உண்டா? இவர்கள் எது செய்தாலும் அதற்கு மக்கள் மறு பேச்சு பேசக்கூடாது. இதை மீறினால், சண்டை சச்சரவு ஏற்படுகிறது. அங்கேதான் குழப்பமும், கிளர்ச்சியும், அசாத்திய வன்முறை, ஒழுங்கின்மை முடிவில் அமைதி இன்மை முதலியன தவறாது நடைபெறுகின்றன. இவைகளை இவ்வாறு நடந்து கொள்ள வைப்பது எது? உதாரணமாக ஒரு எடுத்துக்காட்டை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். 11-செப்டம்பர்-2001 லிருந்து 20-ஏப்ரல்-2011 வரை பயங்கர ஜிஹாத் வன்முறைகள் நடந்த மொத்தம்: 17086.
ஆனால், இந்த 20வது நூற்றாண்டிலும், இஸ்லாமிய ‘முல்லா சையத் குதுப்’ தீர்மானமாகக் கூறுகிறார்: “உலகை மனிதர்கள் ஆளவில்லை, அரசியல் முறைகளைச் சேர்த்து, ஆள்வது ‘அல்லா’ ஒருவர் தான்”. அல்லா ஒருவர்தான் உலகத்தின் உரிமையாளர். ஆகவே, அல்லா இயற்றிய இஸ்லாமிய புனித நூல்களில் உள்ள ஒழுங்குமுறைகளே, மற்ற சட்டங்களைக் காட்டிலும் மிகச் சிறந்தது. இந்நூல்களில் தயாராக உள்ளவைகளை அப்படியே வழிகாட்டியாக பின்பற்றி விடலாமே! இதில் சுதந்திரம் தேவையா? எதற்கு? ஆகவே ஆய்வுரை ஏன்? ஆகையால் “‘அல்லா” இயற்றிய (ஷரியா) சட்டப்படி, உலக சமூகத்தை ஆளவேண்டுமே தவிர, அழியக் கூடிய வெறும் மனிதளால் இயற்றப்பட்ட சட்டங்களாலல்ல.” என்று திட்டவட்டமாக உலகுக்கு அறிவிக்கிறார்! இஸ்லாமிய ஒழுங்குமுறை, ‘அல்லா’ மட்டுமே அதன் தலைவர், மற்றவர் அல்லவே அல்ல என அக்கடவுளாட்சி நம்பிக்கை கொண்டவர்களால், உறுதியான நிலைப்பாடு கொண்டது. ஆக, இஸ்லாமியப் புனித நூல்களில் உள்ளபடி, அல்லாவின் சட்டங்களை, முல்லாக்கள் அடங்கிய பேரவை எவ்வாறு விளக்கிப் பொருள் கூறுகிறார்களோ, அவைகளைத் தான் மக்கள் ஏற்க வேண்டுமே தவிர, வேறொருவரும் விளக்கிச் சொல்லவோ, திருத்தவோ, மாற்றிப் பொருள் கூறவும் கூடாது. எல்லா மக்களையும் சரிநிகர் சமானம் எனக் கருதும், மதம் சாரா அரசியல் ஒழுங்குமுறை சட்டங்களை அல்லாவின் சட்டங்கள் என்றுமே ஏற்காது, என செயல் முறைக் கொள்கைகளாகக் கொண்டது. அப்படி மீறி ஒருவர் செயல் பட்டால், அது அல்லா நிந்தனை (blasphemy) எனப் பிரகடனப் படுத்தப்பட்டு அதற்குறிய மரண தண்டனையை உடனுக்குடன் யாருக்காக இருந்தாலும் நிறைவேற்றப்படும். இதைப் போல, இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிராக நடப்பவர்களுக்கு ஷரியா நீதிபதியே, ஷரியா சட்டப்படி, தண்டனையை ஒரு பஃத்வா மூலம் எதிர்த்து வாதாட இடமின்றி, தீர்ப்பாக அளித்தும் விடுவார். இது தான் இஸ்லாமின் செயல் முறை. இதைத்தான் ஒரு அறிஞர் அழகாக, “இஸ்லாம் ஒரு ஒற்றையடிப்பாதை ”என்றார்.
7வது நூற்றாண்டில் நாடோடியாக வாழ்ந்து, எழுத்தறிவில்லாத முகம்மது (குரான்: 07.157) என்றவரால், தன்னைச் சேர்ந்த “குரைஷ்” இன படிப்பறிவில்லா அக்கால நாடோடிகளையும் (bedouin), மற்ற எளிதில் நம்பவைக்க, தன் இஸ்லாமிய இயக்கத்திற்கு ஆள்சேர்க்கவும் பல உத்திகளைக் கையாண்டார்.
[7:157] எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ – அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; ……………….
அதில் ஒன்று, மனிதத் தலை, குதிரை உடல், பறக்க இரு ராட்சத இறக்கைகளுடன் உள்ள “புர்ராஃக்” (Buraq – human faced, horse bodied with flying wings of a giant eagle) எனும் பறக்கும் வாகனத்தில் உட்காந்து, அல்லாவிடமிருந்து செய்தி கொண்டு செல்லும் பணியாளன் (courier), ‘காப்ரீல்’ வாயிலாக முகம்மதுக்காக, பிரத்யேகமாக அனுப்பப்பட்ட “”வாஹி” எனும் இறைச் செய்தி என சொல்லி, ‘இபின் சாரா’எனும் சீடனைக் கொண்டு எழுதவைத்தைத் தான் ‘குரான்’ எனப் பெயரிட்டு உருவாக்கினார். இஸ்லாமில் உள்ள மாசுகளைப்பற்றி, அப்படியே உள்ளபடி சொல்ல இஸ்லாமிய நூல்களே போதுமானவை. வேறெந்த ஆவணமோ அல்லது மிகைப்படக் கூட்டி எழுதவோ, தேவை இல்லை. ‘’இபின் சாரா’’வும், இப்படி செய்த குரானில் முகம்மது சொல்லச் சொல்ல தான் எழுதிய திரட்டை ஒரு ஆவணமாக ஆக்கி தன்னையும் இந்த கைங்கரியத்தில் ஒரு கருவியாக்கி விட்டதால், மிகவும் மனம் நொந்து மனசாட்சிக்குப் பயந்து, முகம்மதுவை விட்டு கடைசி காலத்தில் ‘மதீனா’விலிருந்து “மெக்கா”வுக்கே ஓடிவிட்டான். இவனையும் முதற்காரியமாக, ஆட்களை ஏவி, கைதியாக்கி, தன் ‘குட்டு வெளிப்படாதிருக்க’, “இபின் சாரா”வைத் தேடி கொன்று விட ஆட்களை முகம்மது அனுப்பினார். ஆனால், முகம்மது சார்ந்த அதே குஃரைஷ் இனத்தைச் சேர்ந்த பெரியவர் ஓத்மான், பெருமுயற்சியால், அக்கொடூரச் செயல் நிறுத்தப் பட்டது. (இப்னு இஷாஃக் சிராத் – p.550)
முகம்மதுவின் பழக்க வழக்கங்கள், என சொன்னவைகளை ‘ஹத்தீஸ்கள்’ ஒன்றும் முகம்மது வாழ்ந்தபோது எழுதப்படவில்லை. முகம்மது இறந்து சுமார் 200 வருடங்களுக்கும் மேலாக கர்ணபரம்பரை என அக்கால படிப்பறிவில்லாத நாடோடி மக்கள் (Bedouin) சொன்னதாக சொல்லப்படுகிறது. இவைகளுக்கு “நம்பகமானவைகள்” அதாவது “ஸாஹீஹ்” என்ற பெயரும் சூட்டப் பட்டுள்ளது. இந்நூல்களில் அல்லாவுக்காக, இஸ்லாமை வளர்க்க, பரப்பச் சொன்னவைகளை புனிதமென (தக்கியா), அல்லாவுக்கு உவப்பளிக்கச் செய்யவேண்டியவை, அதாவது “ஹலால்” என பகிரங்கமாக எழுத்தில் எழுதிவைத்து, இஸ்லாமிய ஹரியா சட்டங்களாகி விட்டது. முஸ்லிம்கள் இப்புனித நூல்களின் எழுத்துக்களில் கண்டபடி, இஸ்லாமியத்தையே உலகம் முழுதும் நீக்கமற கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.
இஸ்லாமைப்பற்றி யோசிக்க, பேச, எழுத. நல்லானுக்கு என்ன தகுதி இருக்கிறது என எந்த முஸ்லிம் நண்பரும் நினைக்கலாம், கேட்கலாம். ஆமாம்!! எனக்கும் தகுதி உள்ளது. ஏனெனெல், இஸ்லாமிய ஷரியா, என்னையும் என் பரம்பரையையுமே பாதிக்கவல்லதாயிற்றே! நான் இவைகளைப்பற்றி யோசிக்காமல், பேசாமல், எழுதாமல் யார் எழுதுவார்கள்? எப்படி எழுதாமல் இருக்க முடியும்? இது ஒன்றும், ““நரி வலமாகப் போனால் என்ன, இடமாகப் போனால் என்ன, மேலே விழுந்து பிடுங்காமல் போனால் சரி”” என்ற மாதிரி விட்டு விடும் விஷயமல்லவே! முஸ்லிமல்லாத பொது மக்கள் விஷயமாயிற்றே!! நானும் இவ்வினத்தைச் சேர்ந்தவனாயிற்றே! இது போனால் போகிறது, என எப்படி விட்டுவிட முடியும்?
மேலாக, இஸ்லாம் எனும் சொல்லுக்கு அமைதி, சாந்தம் என்ற அறிவிப்பும் சேர்ந்தது. இதைப்பற்றி விளக்கமாக இக்கட்டுரையில் ஆய்வுரை உள்ளது.

ஆனால் குரான் [8:39] இல் கூறியபடி, ””(முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் உலக முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் – நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்””.
இந்நூல்களில் உள்ள மற்றவைகளை சற்று உள்நோக்கினால், பொதுவாக அமைதியை போதிக்கும், மதங்களால் எதிர்பார்க்கப்படும் எல்லாவித சமயக் கோட்பாடு கருத்துகளுக்கு நேர் எதிர்மாறாக, பண்பு நலம் மிக்க உலகம் ஒப்பாத பல நடத்தைகளால் நிறந்ததோடு, முன் சொன்னவைகளை மறுத்துப் பின்னர் மாற்றி எழுதப்பட்ட வசனங்கள் ஏராளமாக (inconsistencies & abrogations) உள்ளன. குரானை முகம்மதுவுக்கு அனுப்பிய கடவுள் என்ற “அல்லா”வால் சொல்லப்பட்டதானால், கடவுள்கூட முன் சொன்னவைகளுக்கு புறம்பாக மாற்றி மாற்றி வசனங்களை சொல்ல முடியுமா? பின் விளைவுகளைப்பற்றி சிந்திக்க வில்லையா? இதனால் நமக்குத் தெரியவருவது என்ன? …………………… இவைகளை கேலிச்சித்திரங்களாக ஜன நாயக ரீதியில் விமர்சித்து சித்தரித்தால் கூட தவறா?

இதற்கெல்லாம் சிகரமாக, இந்த இஸ்லாமிய முத்தொகுப்பு நூல்களைத் திருத்தவோ அல்லது மாற்றியமைக்கவோ முடியாதது என முஸ்லிம் முல்லாக்கள் மேலும் உறுதிப்படுத்து கிறார்கள். முஸ்லிம்கள் உலகத்தில், முஸ்லிமாக இல்லாதவர்களுக்கு கிஞ்சிதும் இடமில்லை. ஆனால், இவர்களும் முஸ்லிம்களாகி விட்டால், இவர்கள் வரவேற்கப் பட்டு, இஸ்லாமில், உடன் இடமுண்டு.

அல்லாவின் சட்ட அமைப்பு, முழு நிறைவானதாகவும், எக்குறைபாடில்லாததாக அவர்கள் கருதுவதால், அச்சட்டங்களுக்கு பதிலாக வேறெந்த சட்டத்தையும் உபயோகப் படுத்த எவரும் நினைத்துப் பார்க்கவும் கூடவே கூடாது. ஆனால், உண்மையில் அல்லாவின் சட்டங்கள் யாவுமே ஒட்டுமொத்தமாக, உலகிலுள்ள மற்ற சமயங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களடங் கியவை. கீழே ஓரிரு உதாரணங்களை சற்று படித்துப் பாருங்கள்!

• ஒரு நீதி மன்றத்தில் சாட்சியாக பிரமாண வாக்கு மூலம் கொடுக்கும் இடங்களில், ஆண்கள் இருவர் வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்ற இடங்களில், ஷரியாபடி, நான்கு பெண்களுடைய வாக்கு மூலம் கட்டாயம் தேவை. அதாவது, ஒரு ஆணின் வாக்குமூலத்தில் ஒரு பெண்ணின் வாக்குமூலம் பாதியாகத்தான் மதிப்பிட முடியும்.
• யூதர்களும், கிருஸ்தவர்களும், இஸ்லாமியர்களுக்கு எந்த நாளிலும் சரி சமானமாக ஆக முடியாது. இந்தப் பட்டியலில் ஷரியாபடி இஸ்லாமில் சேராதவர்கள் (formally), (உலகிலுள்ள மற்ற எல்லோரும்) அடங்கும்.
• முஸ்லிம்களை மேலாண்மை செய்ய மற்ற எந்த மதத்தவரையும் அனுமதிக்க இயலாது, ஆனால், முஸ்லிம்கள் மற்ற எல்லா மதங்களின் மீது ஆதிக்கம் செலுத்தலாம்!! இதற்கு உடன் படாவிட்டால், மற்ற மதத்தவர்களை, உலகினின்று நீக்கிவிட வேண்டும். முஸ்லிம்களே இந்நீக்கலைச் செய்தால், ஷரியா சட்டப்படி குற்றமாகாது. இக்குற்றத்திற்கு இவர்களுக்கு தண்டனை கிடையாது. கீழே கொடுத்திருக்கும் ஒரு சின்னஞ்சிறு பட்டியலை தக்க மேற்கோள் ஆதாரங்களுடன் உதாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் : ”ஷரியா”க்கள். முஸ்லிம்கள் இவ்வாறு செய்யவேண்டு மென முகம்மதுவே சொல்லியிருக்கிறார். இவைகளை கடைபிடித்தால் இஸ்லாமிய ‘ஜன்னத்’ – சுவர்க்கம் புக எளிதில் வழி உண்டாகும். கீழே மிகச் சில உதாரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன:
உதாரணமாக, volume- தொகுப்பு. 2; Book- புத்தகம். 22; Number-எண் 296 என்றால். தொகுப்புக்கு தொ; புத்தகம் – பு; எண் – எ) எனவே இனி, சொல்வோம். ஹத்தீஸ் புகாரியிலிருந்து மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளதால். (Sahih Al-Bukhari) ஹத்தீஸ் புகாரி- என திரும்பத் திரும்ப கூறவில்லை. ஆனால், மற்ற ஹத்திஸ்களிலிருந்து கீழே கொடுத்திருந்தால், அவைகளை அந்தந்த ஹத்தீஸ் பெயர்கள் எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.
• முஸ்லிமான நீயே நாயை ஒரு செல்லப் பிராணியாக வளர்க்காதே! கண்டால் கொன்றுவிடு. அப்படி நீயே வளர்த்தால், உனது நற் செயல்களில் ஒவ்வொன்றாக (குரைத்) பிரதி தினமும் அல்லாவால் குறைக்கப்பட்டு விடும். ஆக நாயை உலகிலிருந்து அகற்றிவிடு. புகாரி –தொ: 4; பு.54; எ. 539; 540; 541; புகாரி –தொ: 7; பு:67; எ: 389-391
• தங்கத்தாலோ அல்லது வெள்ளியிலோ, ஆன உயர்ந்த அணிகலங்கள் அல்லது பட்டு நூலால் செய்த ஆடைகள் எதையும் உபயோகிக்காதே! — புகாரி தொ.7; பு. 69; 537; [[பிறகு அரேபியா, இந்தியா முழுதும், முஸ்லிம்கள் நிறுவிய கடைகள், ஏன் எங்குமே தங்கம், வெள்ளி, பட்டு நூல் (புடவை முதலிய) கடைகள் இவ்வளவு உள்ளன?]]
• சதுரங்கம் எந்நாளிலும் விளையாடாதே! – முஸ்லிம் – பு. 028, எ. 5612.
• பெண்கள் தான் கையைத் தட்டலாம். ஆண்கள் “ சுபா-ன்-அல்லா” என்று தான் சொல்ல வேண்டும். அதாவது ஆண்கள் கை தட்டக் கூடாது. – புகாரி தொ. 2; பு; 22; எ. 296
• பச்சைகுத்திக்கொள்ளாதே! அது தவறு! புகாரி – தொ. 7; பு:72; எ: 845
• நின்றுகொண்டு தண்ணீர் குடிக்காதே! முஸ்லிம் – பு:023; எ: 5022
• வாயிலிருந்து துப்பினால், வலதுபக்கமோ அல்லது எதிரில் துப்பாதே! அதை இடதுபுறமோ அல்லது உன் பாதங்களிலோ, துப்பிக்கொள். புகாரி – தொ1, பு:8; எ: 404
• தொழுகை செய்யக் குனியும் போது அங்குள்ளவர்களில் எவராவது அபானத்துவார காற்று (Hadath) விட்டால், உடன் தொழுகையை நிறுத்தி விடு: புகாரி – தொ.1; பு. 4; எ. 139
• “”தய்யமும்” – இந்த சடங்கு தண்ணீர் கிடைக்காத இடங்களில் மட்டுமே ‘வசூ’ (wazu) செய்யும் போது, புழுதியில் கையிரண்டையும் இட்டு, அப்புழுதிக் கையினால், முகத்தைத் தடவிக் கொள். புகாரி- தொ.1; பு.7; எ. 335;
• மலங்கழித்தவுடன் உங்கள் உறுப்புகளை ஒற்றைப்படை கற்களால் துடைத்துக் கொள் இரட்டைப்பட கற்களாலல்ல.– புகாரி – தொ.1; பு. 4; எ. 163;
• பேரீச்சம் பழத்தில் புழு, பூச்சி இருந்தால், அதை வீசி எறிந்துவிடாதே! வேண்டுமானால் ஒரு தட்டு தட்டிவிட்டு, உண். ஒரு நல்ல பொருளை ஏன் வீணாக்குகிறாய்? – தாவூத் – பு. 27; எ. 3823
• நச்சுப் பொருளை உட்கொண்டிருந்தால் அதன் விளைவு முறிந்து அற்றுப்போக அஜ்வா பேரீச்சம்பழம் ஏழு சாப்பிட்டால் போதுமானது: புகாரி – தொ. 7; பு. 071; எ. 664;
இஸ்லாமில் இனி மற்றொரு சுவாரசியமான பகுதி:
இஸ்லாம் எனும் சொல்: ஒரு அரேபிய மூலச் சொல்லான “ சலாமா” (salaama) என்றால், அமைதி, புனிதம், கீழ்ப்படிதல் ஆகியவைகளின் எனப் பொருள்படும். ஆகவே, “”அஸ் ஸலாம்’ அலை-கும்”” என்றால் “உங்களுக்கு அமைதி இருக்கட்டும் / உண்டாகட்டும்” என, எப்போதும் ஒரு முஸ்லிம் மற்றொருவரை கண்ணுற்று வாழ்த்து சொல்லும் மரபுச் சொல்லாகும். [As-Salaum ‘alai-kum “The peace be on you,” the common salutation amongst Muslims]. இதைப்படிக்குமுன், குரான் வசனம்: 9.05 ஒரு முறை படித்து விடவும்: [9:05] (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் (=முஸ்லிமல்லாதவர்களைக்) கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் – ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து ஜகாத்தும் முறைப்படிக் கொடுத்து வருவார் களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப் போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ஒரு குரான் வசனம்:
[8:12] – (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி; “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை (=முஸ்லிம்களை) உறுதிப்படுத்துஙகள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.

ஒருவேளை, இந்த வசனத்தில் உள்ளது உள்ளபடி, காஃபிர்களை கொன்று தீர்த்த பின்னர், பின்னர் ஏற்படும். மயான அமைதியைத் தான் இஸ்லாமியர்கள் ஒரு சாடைக் குறிப்பால், (சமிக்கை ) “”அஸ் ஸலாம்’ அலை-கும்”” என்றால் “உங்களுக்கு அமைதி உண்டாகட்டும்” என உபயோகிக்கிறார்களா?

கீழே “ஜிஹாத் – “இஸ்லாமிய இயக்கத் தாக்கியல் = “kinetic Islam” பற்றி குரானிலேயே 164 இடங்களில் தெளிவாக உள்ளன. ‘ஜிஹாத்’ என்றால் அல்லாவுக்காக, இஸ்லாமைப் உலக முழுதும் பரப்ப குரான் [8:39] இல் கூறியபடி,”” (முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் உலக முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் – நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்””.

குரானில் 164 இடங்கள் ஜிஹாதை பற்றி உள்ளன:

002:178-179, 190-191, 193-194, 216-218, 244;
003:121-126, 140-143, 146, 152-158, 165-167,169, 172-173, 195;
004:071-072, 074-077, 084, 089-091, 094-095,100-104;
005:033, 035, 082;
008:001, 005, 007, 009-010, 012, 015-017, 039-048,057-060, 065-075;
009:005, 012-014, 016, 019-020, 024-026, 029,036, 038-039, 041, 044, 052, 073, 081,083,086, 088, 092, 111, 120, 122-123;
016:110;
022:039, 058, 078;
024:053, 055;
025:052;
029:006, 069;
033:015, 018, 020, 023, 025-027, 050;
042:039;
047:004, 020, 035;
048:015-024;
049:015;
059:002, 005-008, 014;
060:009;
061:004, 011- 013;
063:004;
064:014; 066:009; 073:020; 076:008
குறைந்தது, அடிக் கோடிட்ட எண்கள் கொண்ட குரான் வசனங்களை இந்த சங்கிலியில் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். ஒரு சில குரான் வசனங்களை அப்படியே மேற்கோள் காட்ட இருக்கிறேன்.
[2:216] – போர் செய்தல் – அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் – (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;. ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.
[8:38] – நிராகரிப்போருக்கு (நபியே!) நீர் கூறும்; இனியேனும் அவர்கள் (விஷமங்களை) விட்டும் விலகிக் கொள்வார்களானால், (அவர்கள்) முன்பு செய்த (குற்றங்கள்) அவர்களுக்கு மன்னிக்கப்படும். (ஆனால் அவர்கள் முன்போலவே விஷமங்கள் செய்ய) மீண்டும் முற்படுவார்களானால், முன்சென்றவர்களுக்குச் செய்தது நிச்சயமாக நடந்தேரி இருக்கிறது. (அதுவே இவர்களுக்கும்.)
[9:29] – வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
[9:123] – நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் (தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் – நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடன் இருக்கிறன். என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மூல நூலிருந்து படிக்க வேண்டுமென்றால்,

தமிழில் இங்கே:
http://www.altafsir.com/ViewTranslations.asp?Display=yes&SoraNo=1&Ayah=0&Language=23&LanguageID=2&TranslationBook=0
ஆங்கிலத்தில் இங்கே: (search இல், எந்த ஹத்தீஸ் தொகுப்புக்காக volume எனவும்; புத்தகத்திற்காக Book எனவும்; எண்ணுக்காக Number எனவும் என கொடுத்துச் சொடுக்கி விட்டால் அந்தந்த ஹத்தீஸும் ஆங்கே தயாராகக் காணக் கிடைக்கும்.
http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/search.html

இதில் ஹத்தீஸ் சேர்க்கவில்லை. எழுத்தில் இங்கு கொடுத்தும் மாளாது. ஆனால் பொறுக்கி எடுத்த சில ஹத்தீஸ் தலைப்பை தரப்பட்டுள்ளது: இதெலாமே மிக முக்கியமாகக் கருதப்படும், ஸாஹீஹ் (நம்பத்தகுந்த) அல்-புகாரி ஹத்தீஸிலிருந்து கொடுக்கப்பட்டவை:

தொ. 4, பு. 52, எ. 46: & தொ. 4, பு. 53, எ.53: மற்றொன்று, அதே தொகுப்பைச்சார்ந்த 48 & 50; 42; 63 & 64 யும் பார்த்துக் கொள்ளவும்

இஸ்லாமின் பொருள், ‘அமைதி’ என்று அடிக்கடி மக்கள் மத்தியில், விளம்பரத் திற்காகச் சொல்வதிலிருந்து தான் ’இஸ்லாமியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புனித ஏமாற்றலான ’தக்கியா’ ஆரம்பமாகிறதா?

இதற்காக, இஸ்லாமெனும் மதப் பெயரிலேயே தக்கியா’ எனும் இஸ்லாமிய ‘ஏமாற்றுதல்’ என்பது ஆரம்பித்து விடுகிறது. இதை அறியாத மக்கள், முஸ்லிம்கள், முஸ்லிமல்லாத பெரும்பான்மை மக்களை ஏமாற்றி அடி முட்டாள்களாக ஆக்குவதற்கென்றே செப்பப் பட்டும் பசப்பு வாய்வீச்சு. ’அமைதி’ என வெறும் பெயரை பெயரளவில் சூட்டிக்கொண்டு விட்டால் மட்டுமே, இம்மதத்தை அமைதியான சமயம் என ஒப்புக் கொண்டுவிட முடியுமா? மேற்கூறிய குரான் வசனங்களாலும், அவைகளை முஸ்லிம்கள் வாஸ்தவத்தில் நிரூபித்துக் காட்டும் நடைமுறைச் செயல்களாலும், ’இஸ்லாம்’ என்பதற்கு ‘அமைதி’ எனப் பொருள் கூறுவது மலையும் மடுவும் ஒன்றே ஒன்று தான் என சொல்வது போல உள்ளதே! இதற்கும் மேலாக,”Salamu alakum” (peace to you)”உனக்கு அமைதி உண்டாகட்டும்” என வாய் குளிர வாழ்த்தி, (நிறைய வெறும் வார்த்தையாகச் சொல்லி), ஒரேகாலத்தில் நீங்கள் பயணம் செய்யும் ரயில் வண்டியிலோ, அல்லது பேருந்திலோ, அல்லது தீபாவளி சந்தையில் பல காஃபிர்கள் குழுமி உள்ள வணிகக் களங்களில் வெடிகுண்டு வைக்கலாமா? வாய்ச் சொல்லை வாழ்க்கைச் செயலிலும் கடைபிடிக்க வேண்டாமா? ’

கீழே இஸ்லாமியர்களால் “ஜிஹாத்” என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட அனேக நிழற்படங்களைப் பார்த்துக்கொள்ளவும்: முதலில் இந்தியாவில், பின் வெளி நாடுகளில் நடந்தவைகளைப் பார்க்கவும்.

DelhiDeepavali Market ‘Jihad’ MAHIM –MUMBAI railways station after Jihadi attack

வெளுத்ததெல்லாம் பால் அல்ல’ என்பதற்கு,”Salamu alakum” என்பதும் மற்றொரு உதாரணமா? இனி “சலாமு அலேகும்” என எந்த முஸ்லிம் உங்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தால், — இவைகளை ஞாபகப்படுத்திக்கொள்ளவும்.

கல்லால் அடித்துத் தண்டனை உயிருடன் புதைத்தல்
இஸ்லாமிய புனித நூல்களில் உள்ளது உள்ளபடியே தான் இன்றும் முஸ்லிம்களும் தங்கள் அரசியல் நடவடிக்கைகளில், நடத்திக்கொள்கிறார்கள். அதேசமயம், இஸ்லாம், எனும் சொல்லுக்குத் தக்கவாறு அமைதி விரும்பும் இயக்கமாக (விளம்பரத்திற்காகவும்) சித்தரிப்பதுண்டு! இந்த படங்கள் தான் இஸ்லாம் என்றால் அமைதி என பொருளை காஃபிர்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்! ஜாக்கிரதை!

இக்கருத்தை முற்றிலும் ஐயமற அறிந்து கொள்ள “திம்மி” என்ற சொல்லின் கருத்தையும், திம்மிகளுடைய சமுதாயப் படி நிலையைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமியத்தில் “திம்மி”கள் எனும் பெயர் யூதர்களுக்கும், கிருஸ்தவர்களுக்கும், இஸ்லாமிய ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத வேற்று மதத்தவர் எவராக இருப்பினும் அவர்களுகே பிரத்யேகமாக படைத்துருவாக்கப் பட்டது, அவ்வாறே திம்மிகளை முஸ்லிம்கள் விளிக்கவும் செய்கிறார்கள். இவர்களையே, வேறொரு இடத்தில், ‘காஃபிர்’ எனவும் சொல்வார்கள். காஃபிர் எனும் சொல், முஸ்லிமல்லாத எல்லா மக்களையும் தான் குறிக்கும்.
குரான் சுரா [9:29]இல் உள்ளபடி, “”குரான் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் (முகம்மது) ஹராம் (விலக்கக் கூடியது) ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை (இஸ்லாமை) ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (காஃபிர்கள்) கையால் கீழ்ப்படிதலுடன் ‘ஜிஸ்யா’ (என்னும் சுங்கவரிக் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்””. [இதையும் தவிர, தனியாக ‘கரஜ் எனும் சொத்து வரியும் உண்டு].
அதாவது, மற்ற மதத்தவர்களுக்கு மூன்று விருப்பத் தேர்வைச் (option) செய்யலாம்:

• முஸ்லிம்களாக மாற்ற வேண்டும் அல்லது பல காரணங்களால், மாற்ற முடியாத இடங்களில், அவர்களிடம்,
• “ஜசியா” என்னும் பிரத்யேக சுங்கவரியாக (பாதுகாப்பு வரியென) வசூலிக்கப்பட வேண்டும். மேற்கூறிய இரண்டில் ஒன்றுக்கும் ஒப்பாவிட்டால்
• காஃபிர்களை உலகினின்று நீக்கிவிட வேண்டும்

குரான்: [9:39] – “”நீங்கள் (அவ்வாறு ஜிஹாதுக்கு புறப்பட்டுச்) செல்லவில்லையானால், (அல்லாஹ்) உங்களுக்கு நோவினை மிக்க வேதனை கொடுப்பான்; நீங்கள் அல்லாத வேறு சமூகத்தை மாற்றி (உங்களிடத்தில் அமைத்து) விடுவான். நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது – அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையோனாக இருக்கின்றான்””.

‘திம்மி’ களுக்கு கீழ்க்காணும் மற்ற கட்டுப்பாடுகளும் உண்டு “”.

• இதுவரை முஸ்லிம்கள் எங்கெங்கு ஆட்சி செலுத்தினார்களோ ஆங்கே திம்மிகள் ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்பதே வழக்கத்தில் இருந்தது.
• நீதி மன்றங்களில் ‘திம்மி’கள் வாக்கு மூலம் ஏற்றுக் கொள்ளப் படாது.
• ‘திம்மி’ கள் பரம்பரை உரிமை எனும் “கொடுக்கல், வாங்கல்”களில் முஸ்லிம்களிடம் ஈடுபடக் கூடாது அஃதே போன்று முஸ்லிம்களும் ‘திம்மி’களிடம் “கொடுக்கல், வாங்கல்”களில் ஈடுபடக் கூடாது.
நாட்டு சட்டங்களும், நிலைமையும் இவ்வாறு இருப்பதால், இஸ்லாமிய ஆட்சியாளர்களும், மற்ற முஸ்லிம் குடிமக்களும் முஸ்லிமல்லாதவர்களுக்கு எல்லாவிதத்திலும் ஊறு விளைவிக்க ஏற்ற இடமளித்தது. உண்மையில் எப்போதுமே முஸ்லிம்கள் எல்லா ஹிந்துக்களுக்கும் இத்தூண்டுதலால் இந்தியாவெங்கும் முகலாயர்கள், தீங்கு விளைவித்துக் கொண்டிருந்தனர். இப்படியே, இந்தியாவிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக ஆகிவிட்டால், நாளை இம்மாதிரி ஒரு சூழ் நிலை இந்தியாவெங்கும் உருவாகலாம்.

பொதுவாகவே, திம்மிகள் பரம்பரை உரிமை எனும் கொடுக்கல், வாங்கல்களில் முஸ்லிம்களிடம் ஈடுபடக் கூடாது அஃதே போன்று முஸ்லிம்களும் ‘திம்மி’களிடமிருந்து ஈடுபடக் கூடாது என இருந்தால், எகிப்தில் ஒரு இஸ்லாமிய ஷரியா நீதிமன்ற தீர்ப்பாணையால் (பஃத்வா) இவ்வாறு ஒரு முஸ்லிம் மனைவிக்கு சாதகமாகவே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது: (Ref:- (Fatawa shar`iyya 2:233ம்-234ம்)–இத் தீர்ப்பு எகிப்திய முல்லா முகம்மது ஹசன்யான் முக்லுஃப்- http://www.muslimpersonallaw.co.za/inheritancedocs/Non%20Muslim%20Childrens%20Inheritance.pdf ) இந்த தீர்ப்பாணையின் (பஃத்வா) உள்ளடக்கம் இவ்வாறு இருந்தது.

“”ஒரு கிருஸ்தவ ஆண் மற்றொரு கிருஸ்தப் பெண்ணை மணந்தான். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. பிறகு அக்கிருஸ்தவ ஆண், அடுத்து முஸ்லிமாக மதம் மாற்றிக் கொண்டு, மற்றொரு முஸ்லிம் நங்கையை மணந்தான். அவனும் கிருஸ்தவ மனைவியை மணவிலக்கு செய்யவில்லை. கொஞ்ச நாட்களுக்குப் பின் இறந்தான். இருப்பினும் அவன் முந்தைய கிருஸ்தவ மனைவியை மணவிலக்கு செய்யாததால், இவர்களுக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளும் கிருஸ்தவராகவே நிலைத்து இருந்தனர். தீர்ப்புக்காக: கிருஸ்தவக் குழந்தைகளுக்கும் இறந்தவர் சொத்து பரம்பரை உரிமையாகுமா?”” இது ஷரியா நீதிமன்றத்தில் வழக்காடப் பட்டது.

தீர்ப்பு: “”””இஸ்லாமிய மரபுரிமையாக முஸ்லிமாக இறந்தவன் சொத்து முழுதும், முஸ்லிம் மனைவிக்கே கொடுத்திட வேண்டும். ஷரியா சட்டப்படி, ஒரு முஸ்லிமின் சொத்து, முஸ்லிமல்லாதவர்களுக்கு வாரிசாகக் கூட அடையமுடியாது, ஏனெனில், பழைய மனைவியும் அவள் ஐந்து குழந்தைகளும் முஸ்லிமாக மதம் மாற்றிக்கொள்ளவில்லை. மதங்களுக்குள் இருக்கும் வித்தியாசத்தால், இஸ்லாமிய ஷரியா சட்ட ஆய்வுத் துறை இவ்வாறு நிர்ப்பந்திக்கிறது. மேலும் அல்லா எல்லாவற்றையும் மிக நன்கு அறிவார்”””. தீர்ப்பு இவ்வாறு இருந்தது:

கேள்வி: தந்தையின் சொத்தின் மரபுரிமையாக இவன் பெற்ற ஐந்து திக்கற்ற குழந்தைகளுக்கு சொத்தில் பங்கு கொடுக்க ஷரியா சட்டங்கள் ஏன் இடங்கொடுக்கவில்லை? இதிலிருந்து தெரிவது: இஸ்லாமிய நாட்டில், இஸ்லாம் ஷரியா மற்ற எல்லா மத மரபுகளுக்கும் அல்லது பொதுவான நியாயங்களுக்கும், நியமங்களுக்கும் எதிரானது. அங்கு ஷரியாவை வலிந்து செயல்படுத்துகிறது. பழைய மதத்தை முஸ்லிமல்லாதவர்கள் இறுக்கப் பிடித்திருந்தால், அவர்களுக்கு இஸ்லாமிய சமூகத்தில் இடமில்லை. ஆனால் இஸ்லாமிய சமூகம் ஒரு ஜன நாயக நாட்டில் இருந்தால், இவர்கள் தங்களுக்கும் எல்லா ஜனநாயக உரிமைகளும் இயல்பாகவே உண்டு எனவும், ஆனால், ஷரியா சட்டம் அமலாக்கப்பட வேண்டுமெனவும் ஆர்பரிப்பார்கள். ஒரே முனைப்பாக இவர்களுக்கோர் நீதி மற்றோருக்கு வேறு நீதி என்று பச்சையாக வாதாடிச் செயல்படுவார்கள். இஸ்லாமிய நாடுகளில், எல்லாமே ஜன நாயக சட்டங்களுக்கு எதிரானது. மேலும் மற்ற மதத்தவர்களை அவமதிப்பதாகும்.

இதனால், ‘திம்மி’க்களும் தங்கள் மத சடங்குகளை முஸ்லிம்களுக்குத் தெளிவாகத் தெரிகிறவாறு நிறைவேறிக் கொள்வதில்லை. இதனால், இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம் அல்லாத மக்கள் தங்கள் மதங்களைப் பற்றி வன்முறைகளுக்கு எவரிடமும் பேச அஞ்சுவார்கள். இதன் விளைவு, எந்த ஹிந்து வீடுகளிலும், குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் பூஜை மணியோசை கேட்பதில்லை; அதேசமயம் ஜன நாயக நாட்டில் மாத்திரம், இஸ்லாமியர்கள் தொழும் மசூதிகளில், இவர்கள் ஓதும் ‘ஆதான்’ அழைப்புக்கு, வானம் முட்டுமளவுக்கு ஒலிபெருக்கி மூலம் விசித்திரக் குரலில் ஓதுவார்கள். ஜன நாயக நாடுகளில் இவர்களுக்கு எல்லா உரிமை களும் உண்டு, ஆனால், தங்கள் இஸ்லாமிய நாடுகளில், மனித நேய அடிப்படையில் மிகச் சாதாரணமான உரிமைகூட கிடையாது. ஏன் இந்த இன்னல்கள் எனக் கேட்டால், உடன் கழுத்து “ஹலால்” முறையில் பையப்பைய (மெல்ல) அறுக்கப் பட்டு விடும். [[“ஜட்கா” முறை ‘ஹராம்” இது இஸ்லாமால் ஏற்கப்படாதது. இது ஒரு வெட்டு துண்டு இரண்டு என்ற முறை]] இது இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் இன்றைய யதார்த்தம். கிருஸ்தவ மதத்திலும் இஸ்லாமுக்கு இணையாக பல இடையூறுகள் மற்றோருக்கும் உண்டு. கிருஸ்தவர், கிருஸ்தரில்லா தவர்களிடம் தங்கள் மத தகவல்களைப் பற்றியோ அல்லது கிருஸ்தவ சரித்திரத்தைப் பற்றியோ பகிர்ந்து கொள்வது, இவர்களுக்குள்ள சர்ச் முறைகளுக்கு மாறானது. கிருஸ்தவர்கள் மற்ற மதத்தவர்களை மத மாற்றம் செய்ய விழைவார்கள், ஆனால், இவர்களிடத்தில் இந்த சௌகரியங்களை மற்ற மதத்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. கிருஸ்தவர்களும், முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் இவ்விஷயத்தில் சளைத்தவர்களல்ல.

முஸ்லிம் அரசாட்சி சரித்திரத்தில், தொடக்கத்திலிருந்து முடிவு வரை, நடைபெற்ற உண்மை நடைமுறைகள்:

• முஸ்லிமல்லாதவர்கள் மத அடையாளங்களான ஹிந்துக்களுக்கு -ஸ்வஸ்திக், ஓம், சுதர்சன சக்ரம்; கிருஸ்தவர்களுக்கு சிலுவை, முதலிய சின்னங்களை எவ்விதத்திலும் காட்சிக்குரியதாக தங்கள் கட்டங்களிலோ, அல்லது உடுக்கும் உடுப்பிலோ, கழுத்தில் ஒரு சங்கிலி எனவோ வெளியில் காண்பித்துக்கொள்ள தடையுத்தரவு அதிகார பூர்வமாக மக்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மற்ற மதத்தவர் தங்கள் மதச் சின்னங்களை உள் உடுப்புக்கு அடியில் மறைத்துக் கொள்வார்கள். குறிப்பாக, ‘திம்மி’கள் பகிரங்கமாக, அவர்களுக்கே உரிய தனி வித மஞ்சள் நிற உடுப்பைத் தான் உடுத்த வேண்டும், அதன் மேல் ‘சுனார்” (zunar=wide belt) எனும் அகல (பட்டையான) இடுப்புக் கச்சை அணிய வேண்டும். இப்படி தனிப்பட்டவர்களுக்கே உரிய சீருடை நிறத்தால், இவர்கள் “திம்மிகள்” என காட்டிவிடும். ஆக இச்சீருடையைக் கண்டவுடன், முஸ்லிம்களுடைய நடத்தையில் விசேஷ வேறுபாடு தன்னாலேயே வெளிப்பட்டு விடும்.
• முதலில், திம்மிகளுடைய மதத் தலைவர் கூட, முஸ்லிம் அதிகாரிகளின் ஒப்புதல் பெற்ற பின் தான், சீடர்களுக்கு தங்கள் மதத் தலைவர் யார் யார் என தெரிந்துகொள்ள இயலும். ‘திம்மி’கள் மதத் தலைவர்களே முடிவு செய்து கொள்ளும் உரிமைகூட அவர்களுக்குக் கிடையாது. காரணம், மதத்தலைவர்கள் தங்கள் சீடர்களைக் கொண்டு முஸ்லிம் அரசியலுக்கு எதிராக நிலையில்லாமையை உருவாக்கத் தூண்டி விட்டு விடுவார்களோ என உள்ளூர பயம்!
• முஸ்லிமல்லாதவர்கள் தங்கள் மத சம்பந்த இலக்கிய நூல்களை வெளியிடவோ, அல்லது விற்கவோ தடை செய்யப்பட்டிருந்தது. இதனால்தான், சில இடங்களில், பலகாலம் மிகுந்த பிரயாசை யுடன் சேர்த்து வைத்திருந்த நூலகங்கள் முஸ்லிம்களால் தீக்கிறையாக்கப் பட்டன. அடுத்து,
• குரானில் உள்ளவைகளை திம்மிகள் எவரும் படிக்கவும் கூடாது, முதலில் திம்மிகள் முஸ்லிம் களாகிவிட வேண்டும். பின் குரானைப் படிக்கலாம். ஏனெனில், இந்நாளில், வெவ்வேறு இணைய தளங்கள் உதவி கொண்டு, (இதில் முஸ்லிம் இணைய தளங்கள் உள்பட) எத்தனையோ திம்மிகள் (காஃபிர்கள்) படித்துத் தெளிந்து இஸ்லாமில் குற்றங்களைக் கண்டு பல கட்டுரைகளை எழுதித் தள்ளுவது போல, ஆகிவிடக் கூடாதென எதிர்பார்த்து, தடையுத்தரவு பிறப்பித்திருந்தனர். இன்று இஸ்லாமிய அரசாங்கங்களே, இஸ்லாமிய கருத்துக்கு உடன்படாத பல இணைய தளங்களை மேயக் (browse) கூடாதென அந்நேரத்தில் தடையுத்தரவு உண்டு. இத் தடையுத்தரவு பாகிஸ்தானில், ஈரானில், இன்னும் பல முஸ்லிம் நாடுகளிலும் அமலில் உள்ளது. இன்னொரு சுமை திம்மிகள் தலையில் சுமத்தப்படும்,
• ஜசியா எனும் திம்மிகளுக்கென்றே பிரத்யேகமாக விதிக்கப்படும் தனி நபர் சுங்கவரி (அதாவது இஸ்லாமிய ஆட்சியில் காபிஃர்களாக உயிருடன் வாழ அனுமதி வரி) விதிக்கப்படும். அடுத்து,
• ‘கர்ஜ்’ எனும் காபிஃர்கள் சொத்துமீது வரியும் கூடுதலாக வசூலிக்கப்படும்.

இவ்வாறு வரி வசூலிப்பு / சுமை, என திம்மிகளுக்கு மிக இன்னல் உண்டாக்கி, வேறு வழியில்லாமல், இஸ்லாமை ஒப்புக்கொள்ள வைத்தது. இதைத் தான் முஸ்லிம்களுக்கும் விரும்பினர். மேற்கூறிய நிர்பந்தங்களை முஸ்லிம்கள் ஏறபடுத்தியதற்குக் காரணமே, திம்மிகளை திம்மிகளாக தொடர்ந்து வாழ விடாமல், எடுத்த எடுப்பில் கொலையில் இறங்கி இதனால், பெரும்பான்மையுள்ள திம்மிகள் உள்ள நாட்டில், ஒருவேளை, இஸ்லாமியர் ஆட்சிக்கெதிராக பெருந்திரளில், வன்முறையால் ஆட்சியைக் கைப்பற்றிக் கவிழ்க்க கிளர்ச்சியில் ஈடுபடாமல் இருக்க இவ்வரிச் சங்கடங்களைக் கொடுத்து மெதுவாக, திம்மிகள் முஸ்லிம்களாக தாங்களாகவே மாற்றிக் கொள்ளும் வரை தொடர்ந்து மறைமுகமாக மானசீகத் தாக்குதல்களாக இன்னல்களை அளித்து வந்தனர். இப்படி முஸ்லிமாக மாறிய ஹிந்துக்களின் சந்ததியர் தான் இன்றும் மிக அதிகமாக இந்தியாவில் இருக்கிறார்கள். ஒரு தடவை முஸ்லிமாக மதம் மாறிவிட்டால், மீண்டும் தன் தாய் மதத்திற்குச் செல்ல முடியாது. அவர்கள் “அபோஸ்டேட்’ (apostate) என கருதப்பட்டு இஸ்லாமிய துரோகிகளென உடனுக்குடன் கொலை செய்யப்படுவார்கள். ஏனெனில், குரான் வசனம்: [3:85]: “”இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து (அல்லாவிடமிருந்து) ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ (த்தகைய) வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பர்””.

ஒரு தடவை முஸ்லிமாக மாறிவிட்டால், அவர்கள் உளநிலையே சுத்தமாக மொத்தத்தில் மாறிவிடுகிறது. இதற்கு அனேக உதாரணங்களை அளிக்கலாம். ‘தக்கியா’ உதவி கொண்டு காந்தாரப் பேரரசர்களான, ஷாஹியாக்கள் (இன்றைய ஆஃப்கானிஸ்தான் = பழைய காந்தாரம்) ஒருவர் பின் ஒருவராக இஸ்லாமியரால் வீழ்த்தப்பட்டனர். அச்சமயத்தில் ஷாஹியாக்களுக்கு பேருதவி செய்த ‘கௌரி’ எனப்படும் ஹிந்து காந்தார வீரர்கள், தலைவர்கள் அற்றுப் போய், காட்டுக்குள் ஓடி மறைந்தனர். பின்னர் மலைப்பிரதேசங்களில் மாடு மேய்த்துப் பிழைத்துக் வந்தனர். போகப் போக இவர்களும் ஓரிரு தலை முறைகளுக்குப் பின்னர், இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு, தங்கள் குடும்பப் பெயரையும் ‘‘கௌரி’யிலிருந்து ‘கோரி”என மாற்றிக்கொண்டு, இந்தியாவில் வன்முறையில் படையெடுப்புகளில் இறங்கினர். அக்காலத்தில் இந்தியாவிலுள்ள பழைய ஹிந்துக்கள் அன்று முஸ்லிம்களாக மதம் (எப்படியோ) மாறியதால், இன்று இவர்கள் மரபினர் நடத்தை எவ்வாறு மாறி உள்ளது என ஒப்பீடு செய்து பாருங்கள், நன்கு புரியும். (“கௌ” என்றால் சமஸ்கிருதத்தில் பசு எனப் பொருள்)

[[[பின்னர் ப்ருதிராஜ் சௌஹான் காலத்திலும் அதே நேர்ந்தது. ராஜஸ்தானில், பலர் இன்று தீவிர முஸ்லிம்களாக இருப்பவர்களுடைய முன்னோர்கள் ஹிந்துக்களாக இருந்து முஸ்லிமாக கட்டாயமாக மதம் மாற்றப்பட்டவர்கள் தான். ஆனால் இம்முஸ்லிம்கள் இன்று படு பயங்கர தீவிரவாதிகள்]]].

எந்த நீதி மன்றத்திலும், ஷரியா சட்டங்கள் அமலில் இருக்கும் போது, ஆங்கே ஒரு முஸ்லிமுக்கும் ஒரு திம்மிக்கும் இடையே வழக்கு ஏதாவதொரு தீர்ப்புக்கு வருமானால், திம்மியின் சாட்சியங்களைவிட முஸ்லிம் சாட்சி வாக்கு மூலத்திற்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்படும். ஹனாஃபி சட்ட நிபுணர்கள் கூட ஷரியா சட்டப்பிரகாரம், விளக்கும் போது திம்மிகள் வாக்கு மூலமோ அல்லது சத்தியப் பிரமாணமோ முஸ்லிம்களுக்கெதிராக சரியென சட்டப்படி நிரூபிக்க முடியாதது அல்லது திம்மிகள் வாக்கு மூலம் வழுவற்றது என எடுத்துக் கொள்வதில்லை. திம்மிகளை ஒரு உளதாம் பொருளெனக் கூட (entity) எண்ணிக் கூடப் பார்ப்பதில்லை. அவர்களை மிக ஈனப்பிறவிகளாகவே முஸ்லிம்கள் கணிப்பார்கள். இதற்கு நேர் மாறாக, முஸ்லிம்கள் நீதி மன்றத்தில் திம்மிக்கெதிராக சான்றளிக்க முடியும். இந்த சட்டத் தகுதி இன்மை திம்மிகளை மிக இக்கட்டான சமுதாயப் படி நிலையில் வைத்துவிட்டது; ஏனெனில், திம்மிகள் தங்களை சட்ட ரீதியில் முஸ்லிம்களிடமிருந்து, அவர்கள் சாட்டும் அநியாய குற்றச்சாட்டுகளுக் கெதிராக தற்காத்துக் கொள்ள முடிவதில்லை. இந்நிலை மேன்மேலும் இரு சமூகத்தினிடையே எப்போதுமே சண்டை சச்சரவு, மனஸ்தாபம் ஆகியவைகளில் ஏற்படுத்திக் கொண்டு இருந்தது. திம்மிகளுக்கு தங்களை தற்காத்துக்கொள்ளக் கூட முடியவில்லை என்றால் எங்ஙனம் எதிர்கொள்வது? எப்படி இருப்பினும் பலவீனமுள்ள திம்மிகள் தான் முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுக்க நேர்ந்துவிடும். இல்லாவிடில், திம்மிகள் நிலை இன்னமும் மிக மோசமாகிவிடும்.

திம்மிகள் குதிரையிலோ அல்லது ஒட்டகத்திலோ ஏறி சவாரி செய்யக் கூடாது; ஆனால், ஒரு அவமதிப்பாக, கழுதைகள் மீதேறி, சவாரி செய்யலாம் என காலிப் ஓமர் காலத்திலிருந்து ஒரு சட்டம் அமலில் இருந்து வருகிறது. இதை, 18வது நூற்றாண்டில் தமன்ஹூரி எனும் அல்-அசர் கலாசாலை முதல்வர், இஸ்லாமிய சட்ட நிபுணர்களுடைய ஏகோபித்த ஷரியா தீர்ப்புகளின் முடிவுச் சுருக்கத்தை: “”திம்மிகள் குதிரையிலோ அல்லது ஒட்டகத்திலோ ஏறி சவாரி செய்யக் கூடாது; ஆனால், ஒரு அவமதிப்பாக, கழுதைகள் மீதேறி, பெண்கள் குதிரையில் ஒருபக்கத்தில் இரு கால்களையும் தொங்கப் போட்டுக்கொண்டு சவாரி செய்வது போல சவாரி செய்யலாம்”” என இவ்வாறு வழிமொழிந்தார்“. இன்னும் இரண்டு நிபந்தனைகள்: முதலில், முஸ்லிம்கள் கூடவே இணையாக (astride) திம்மிகள் கழுதையிலும் சவாரி செய்யக் கூடாது; இரண்டாவதாக நகர்புறத்தில் (cities) கழுதையிலும் கூட சவாரி செய்யவே கூடாது; எங்கும் வெற்றுக் காலுடன்தான் நடந்தே செல்ல வேண்டும். காலுக்கு செருப்பு அணியக் கூடாது. இந்த வழக்கம், ‘’பிரமிட்’’ (Pyramid) கட்டும் நாளில் பழக்கத்தில் அடிமைகளுக்காக இவ்வழக்கம் அமலில் இருந்தது. ஒரு முஸ்லிம்கள் நாட்டில், இதற்கு அப்புறம் மற்ற மத ஆலயங்களுக்கு ஒப்புதல் எப்படிக் கிடைக்கும்? இங்கு சகிப்புத்தன்மை எங்கு போயிற்று? எங்கு மரியாதை விடை பெற்றுக்கொண்டது? இவ்விரண்டைப் பற்றியும் முஸ்லிம்களைக் கேட்டால், ஒவ்வொரு திம்மிக்கும், வெவ்வேறு பதில்களை சமயோசிதம்போல ‘தக்கியா’செய்வது, (பொய்சொல்லி) மழுப்புவது வழக்கம்.

இதைத்தான் இன்றைய எகிப்திய கிருஸ்தவர்களுக்கு இஸ்லாமிய முல்லாக்கள் செய்கிறார்கள். இவைகளை எதிர்த்துத் தான் எகிப்தில் தற்போது உள் நாட்டுப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ‘கிருஸ்தவ சர்ச்’சுக்களில், (Churches) அல்-குஃவைதா (al-Qaeda) எனும் பயங்கர வன்முறைக் கும்பல், தற்கொலை-வெடிகுண்டுகளால் (suicide bombers) தாக்கி அனேக கிருஸ்தவர்களை சர்ச்சிலேயே கொன்று தீர்த்தார்கள். உதாரணமாக,
Graphic video of 1000s Christians slaughtered by Muslims in Ivory Coast:
http://www.youtube.com/watch?v=ZoZKwQUB6QU&feature=player_embedded&oref=http%3A%2F%2Fbarenakedislam.wordpress.com%2F2011%2F04%2F13%2Fivory-coast-graphic-video-of-the-recent-muslim-slaughter-of-1000-christians%2F&has_verified=1&skipcontrinter=1
இனி அங்கு, அடுத்து வரும் ஆட்சி, ஜன நாயக அரசாங்கமாக இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் எதையும் ஒரு முடிவாக, இன்றைய சூழ்நிலையில் சொல்வதற்கில்லை. இங்கு இப்போது நடக்கும் பொங்குக் கிளர்ச்சிகள் 1978-’79 இல் ஈரானில், “பஹல்வி” அரசாட்சிக்கெதிரான எழுச்சியை நினைவுப் படுத்துகிறது. இதேபோல, ஈரானில் நடந்து முடிந்த மூன்று நாட்களுக்குள், ‘டுனீசியா’விலும் கிளச்சி உண்டாகி, அந்நாட்டிலும் இஸ்லாமியரே ஆட்சிக்கு வந்தனர். எகிப்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் உள் நாட்டுப் போராட்ட முடிவு முஸ்லிம்களுக்கு சாதகமாக அமைந்தும் விட்டால், மத்திய, மேற்காசிய நாடுகளில் உள்ள அரசியல் ஸ்திரத்துவ-அமைதி இயல்பை இன்னும் கெடுக்கும். இஸ்லாமியர் அல்லாத மற்ற வகுப்பினர் கூறுவதெல்லாம், அவர்கள் தாய் மததை விட்டுவிடச் கட்டாயப்படுத்திச் சொல்லும் போதுதான் இஸ்லாமிய வன்முறைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறார்கள். (“faith is not by force, we want to remain Christians and very simply, we do not wish to become Muslims at all. That’s all”என்கிறார்கள்). ஆனால், இன்று இஸ்லாமியரல்லாத நாடுகளில் இருக்கும் முஸ்லிம்களால், ஷரியா சட்டங்களை அமலுக்குக் கொண்டுவர வேண்டுமென பேரிரிரைச்சல், புகார், விடப்பிடியாக கட்டாயப் படுத்துவதென்பது, அதே குழப்பத்தைத்தை எங்கும் விளைவிக்கும். எந்த மானிடருக்கும் எதையும், எதிலும் கட்டாயப் படுத்துவது பிடிப்பதில்லை. இது குழப்பத்தில் விளைகிறது. ஆக, குழப்பங்களுக் கெல்லாம் ஷரியா சட்டங்களே அடிப்படை காரணம். இஸ்லாமிய ஷரியா சட்டங்கள் எங்கெங்கு உள்ளதோ, ஆங்கே, குழப்பம், சச்சரவு, சண்டை, போர், பயங்கர வன்முறை இருந்தாக வேண்டும் என தலைவிதியாகி விட்டது. இதற்கெல்லாம் அடிப்படை காரணம், இஸ்லாமியத்தை கட்டாயப் படுத்தும் நிலைப்பாடே தான். மற்றொரு உதாரணம்,
1947 இல், 27% விழுக்காடு இருந்த ஹிந்து ஜனத்தொகை, இன்று 1%க்கும் கீழ் பாகிஸ்தானில் வந்துள்ளது. காரணம், ஷரியா சட்டங்களினால் நிகழும் நிர்பந்தம். அனேகர், இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர், பலர் கொல்லப்பட்டனர், பலர் முஸ்லிம்களாயினர், மிஞ்சியவர்களும் மிகுந்த இன்னலுக்கிடையில் ஒரு ஜட-வாழ்வு வாழ்கிறார்கள். 27%லிருந்து 1% என கீழ்வரும் போது, படிப்பவர்கள் என்னென்ன அங்கே நடந்திருக்குமென நன்றாக ஊகித்துக் கொள்ள இயலும்.

கீழ்கூறியவைகள், கற்பனையானாலும் இன்னும் சிலருக்கு (வெளி நாட்டில் வசித்தவர்களுக்கு மாகச் சேர்த்து தான்) சில நேரங்களில் நேரில் அனுபவித்த பட்டறிவுகூட இருக்கலாம்: அல்லது ஒரு வாதத்திற்காக உண்மை என வைத்துக் கொள்வோம்.

• நீங்கள் வசிக்கும் நாட்டில் இஸ்லாமிய ஷரியா சட்டகளே அமலில் உள்ளது என்ற நிலையும்; பக்கத்திலுள்ள இஸ்லாமிய பள்ளிவாசல் ஸ்தூபியிலிருந்து (மசூதி மனோராவிலிருந்து) தினமும் ஐந்து கால தொழுகைக்கு முஸ்லிம்களை அழைக்கும் குரல் கேட்கும் இடத்திற்கு அருகில் உங்கள் குடியிறுப்பு அமைந்து இருப்பது போலவும்;
• தமிழ் மலராக ஒரு தினசரி, தங்கள் பத்திரிக்கையில் ஒரு நாளில், முஸ்லிம்கள் நடத்தியதை நடந்தவாறே எழுதிவிட்டு, அதற்காக, முஸ்லிம்கள் அந்த தினசரி அலுவலகத்தில் ஜபர்தஸ்தியில் நுழைந்து, அங்கிருக்கும், சிப்பந்திகளை அடித்துத் துன்புறுத்தி, மேலும் அங்கிருக்கும், தட்டுமுட்டு சாமாங்கள், கணினிகள், தொலை பேசிகளைத் துவசம் செய்து, அப்பத்திரிக்கை ஆசிரியரை பயமுறுத்தி, அவரிடன் மன்னிப்புக்கடிதத்தை அடைந்த கூச்சல், அருகிலிருக்கும் உங்கள் வீட்டுவரை எட்டுவது போலவும், அல்லது
• நாட்டில், பெண்களைக் கல்லால் அடித்தே கொன்றுவிடல், அல்லது முஸ்லிமாக இருப்பவர், இஸ்லாமை விட்டு விட்டால், அதற்குத்தக்க ‘ஹலால்’ முறையில் தண்டனை வழங்கப்படும் இடம், உங்கள் வீட்டுக்கு அருகாமையில் அமைந்துவிட்டதெனவும் ;
• மேலும், தப்பித் தவறி, உங்களைச் சேர்ந்த ஒருவர் யதார்த்தமாக ஏதாவது சொல்லப் போக, அதற்கு அல்லாவின் மீது தெய்வ நிந்தனை என முஸ்லிம்களால் அர்த்தம் கறிபிக்கப்பட்டு (BLASPHEMY) அதற்கேற்ற தண்டனை வழங்கப்படும் இடமும் உங்கள் இடத்திற்கு அருகாமையில் அமிந்துவிட்டது போலவும்;
• இதனால், ஏற்பட்ட மனக்குழப்பத்தால், உங்கள் உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவாக வீக்கம், இழமை போன்றவைகளை ஏற்படுத்தும் சுற்றுப்புற சூழ் நிலை (Allergic environment);
• இஸ்லாமுக்கு முன் தோன்றிய மதத்தைச் சேர்ந்தவராக நீங்கள் இருப்பதால் மட்டுமே, உங்கள் கூட வசிக்கும் முஸ்லிம்கள் எவ்வித சகிப்புத்தன்மையும் இன்றி, அடிக்கடி உங்களைத் தொந்திரவு செய்தலும்;
• தற்கொலைப் படையினர் அடிக்கடி அனேக நிரபராதிகளான மக்களை வெடிகுண்டு வைத்துத் தீர்த்துக் கட்டும் நாட்டில் நீங்களும் வசிப்பது போலவும்
• மற்ற மதத்தவர் தினம் தொழுகை நடக்கும் இருந்த அதே இடத்தில், மசூதி கட்டும் நிகழ்ச்சிகள் நடக்கும் உங்கள் நாடு எனவும்;
• உங்கள் நாட்டில் பெண்டிரை ஒரு நிலச் சொத்தென, ஆண்களால் நடைமுறையில் நடத்தும் முறை உள்ளது எனவும்;
• உங்கள் நாட்டில், முஸ்லிம் பெண், வேற்று மத ஆணை மணந்தால், அவளை ஏதேதோ சாக்குபோக்கு சொல்லி தந்தை வீட்டிற்கு அழைத்து வந்து, அவர்கள் குடும்ப மானம் காக்க இந்த முஸ்லிம் பெண்ணை வெட்டிக் கொலை செய்தலும்; (Honour Killing for dishonouring the family);
• ஒசாமா பின் லேடனின் மிக நெருங்கிய சகா, அய்மான்-அல்-ஸவஹிரி சொன்னதை அடிக்கடி ஒலிபரப்பி, அதாவது: “”அமெரிக்கர்களுடன் சம நிலையை நாம் அடைந்தவர் களாக நம்மை ஆக்கிக் கொள்ளக் கூட நமக்கு விரும்பவில்லை, அல்லது அமெரிக்கர்களை நமக்கு சமமாக ஆக்கிவிடவும் நமக்கு விருப்ப மில்லை. ஏனெனில் முஸ்லிம்கள் எல்லா விஷயங்களிலும் முஸ்லிம் அல்லாதவர்களைக் காட்டிலும் மிக உயர்ந்தவர்கள். அகில உலகமே அல்லாவைச் சேர்ந்தது. இவ்வுலகம், சுவர்க்கம் ஆகியவைகளுக்கு அல்லாவே முழு சொந்தக்காரர். முஸ்லிம்களும் அல்லாவுக்கே சொந்தம். ஆகவே அமெரிக்காவிலுள்ள முஸ்லிமல்லாத மக்களை நிரந்தரமாக நீக்கிவிட முஸ்லிம்களுக்குக் கடமையாகிறது. ஆக, இவைகளைச் செய்ய முஸ்லிம்களுக்கு சகல உரிமையுண்டு; ஆங்கே பாதிபேர் பெண்டிர், குழந்தை களானாலும் சரி, முஸ்லிம்களாகிய நமக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. அப்படி எங்கள் செய்கை அமெரிக்கர்களுக்குப் பிடிக்க வில்லை யானால், அமெரிக்க நாட்டை விட்டே எங்காவது குடி பெயர்ந்து ஓடி ஒழியட்டுமே!!; அவர்களுடன் கூட நொண்டி முடமானவர்களையும் கூடவே அழைத்துச் செல்லட்டும்”” இதற்கும் மேலாக“” முஸ்லிமலாத தேசங்களில், உயிர்-நூலைச்சார்ந்த (biological) கொல்லும் ரசாயன (anthrax) ஆயுதங்களையும் (weapons), உபயோகித்து அவர்களுக்கு என்றென்றும் வேதனையை விளைவிக்கும் கோளாறு, அல்லது கொடிய நோயால் அவஸ்தைப்படுதல் (splenic fever) அல்லது மரணம் உண்டாக்கும் ஆயுதத்தால் எங்கள் இஷ்டப்படி நாங்கள் தாக்குவோம்””; ஜாக்கிரதை! என அறிவிக்கும் தொ(ல்)லைக்காட்சியைக் காணும் பேறு (?) உள்ளது போலவும்,

மேற்கூறியவாறு நடக்கும் ஒரு நாட்டில் நீங்களும் வசிக்கிறீர்கள் என சற்று கற்பனை செய்து பாருங்கள். எப்படி இருக்கிறது!!. மேலே கொடுத்தவயனைத்தும் சில சாம்பிள் தான். இதற்கு மேல், பயங்கர வருணனை செய்ய இங்கு விரும்பவில்லை.

மேற்கூறிய விவரங்கள் ஏதும் அறியாமல். திராவிடக் கழகங்களும், முஸ்லிம்களுடன் சேர்ந்து கூட்டிசைக்கிறார்கள். வருங்காலத்தில் இதே, கழகக் கண்மணிகளுக்கு இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டி வரும். இல்லாவிடில் அவர்களது கொலையில் தான் வந்து நிகழ்ந்துவிடும். அப்போது தெரியும், முஸ்லிம்களின் இயல்பான பண்பாடு. (Then it will be too late)

• கழக ரத்தத்தின் ரத்தங்களும், முஸ்லிம்களாக ஆகி தைரியமாக ‘இஃப்தார்’ கஞ்சிக் குடிக்கலாம்.
• காஃபிர் /திம்மி என கருதப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். பகுத்தறிவுக்கு உதை பட்டால் தன்னால் தெரியும்; புரியும். கூடிய சீக்கிரம் அக்காலமும் வரும். கழக ஆண்களுக்கு சுன்னத்தும், அவர்கள் தம் பெண்டிருக்கு ஹுஃபாத் அல்லது மக்ருமாஹ் செய்தால் அப்போது புரியும். இது நான் சொல்லவில்லை. சரித்திரம் பேசுகிறது. தான் ஏறிவந்த ஏணியை உதைத்துவிட்டு தான் இஸ்லாம் எப்போதும் நிலை நாட்டிக் கொள்ள விரும்பும். இதன் இயல்பு தெரிந்தோ அல்லது தெரியாமலோ கழகங்கள், வருங்கால எதிரியுடன் ஒரே படுக்கையில் புரள்கின்றன. (presently Bedding with future enemy unknowingly). பார்க்கலாம்!

மேலும் முகம்மது நாட்களில் உண்மையில் நடந்த சில சரித்திர நிகழ்ச்சிகள் அடுத்த பகுதியில் விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இஸ்லாமியத்துக்கும், மற்ற மதங்களுக்கும் இருந்த உறவு எத்தகையது எனத் தெரியும்.

(தொடரும்)

Series Navigation

அம்பா சரண் வஸிஷ்ட் - தமிழாக்கம்: நல்லான்

அம்பா சரண் வஸிஷ்ட் - தமிழாக்கம்: நல்லான்