இருந்ததனால்….
சாரங்கா தயாநந்தன்
மெல்லச் சிரித்தேன். அவன் சிரித்தது போல் இருந்ததனால். சில வாரங்கள் தொடர் காத்திருப்பு அவனுக்கு ,எனது வருகைக்காக. என்சிரிப்பு அல்லது மென்னகை ஒரு அன்பை ஏற்படுத்தும் முன்னேற்பாடாய் இருந்திருக்கலாம். அவனது முகம் பளீரிட்டதாயும் விழிகள் ஒளி கொண்டது போலவும் இருந்தது. பஸ் நகர்ந்து விட்டது.
மறுநாள். அதே இடம். என் விழிகளின் தேடல். நிச்சயமாய் அவனுக்காகத்தான். என் மனம் என்னைக் கேலித்தது. புரிந்தும் ஒதுக்கினேன். வீதியோரத்தே பஸ் கண்ணாடித் துண்டங்களை ஊடறுக்கும் பார்வையுடனான அவன். என்னைத்தான் தேடியது போல் இருந்ததனால் விழி கலந்தேன். விழிகளில் ஒரு மென்மையான சினேகம். அது உயிர்ப் பாக இருந்ததனால் கையசைத்தேன். நயனபாஷை. அனுபவித்தவர்கள் மட்டும் புரியத்தக்க சுகம். விலகினோம்.
ஒரு மாத விலகல். அதே இடம். உடையலங்காரத்தில் இருவரதும் அக்கறை. எனக்குப் பிடித்தமான மென்னீலத்தில் ஷேர்ட்டும் கருப்பில் ஜீன்ஸும் அணிந்த அவன். அவனுக்கும் பிடித்தமாக இருக்கக்கூடிய கரும் பச்சையில் சட்டை அணிந்த நான். சில விஷயம் கதைக்க வேண்டுமாய்ச் சொன்னான். அவன் கண்களில் ஆழ்ந்த அன்பு இருந்ததனால் ‘சரி ‘த்தேன். ‘இப்போதெல்லாம் எனக்குப் பிடித்ததே தனதும் ‘ என்றான். ஒருவர் இன்னொருவர் போலேயே ஆகமுடியுமா ? வியந்தேன்.
முதற்பார்வையிலேயே ‘தனக்காய் நிச்சயிக்கப்பட்ட உறவு ‘ போல இருந்ததனால் ‘முயற்சித்ததாய்ச் ‘ சொன்னான். சொர்க்கத்திலாம். நான் கூட சிறகில்லாத தேவதையாம். மெய் புளகித்தேன். குடும்பம்,கல்வி,அந்தஸ்து,கெளரவம்,சாதி அனைத்தும் சொன்னான். பதிலினேன். கவனிக்காத அலட்சியத்தோடு கவனித்தேன். ‘தோம் ‘ ஆகவும் இருக்கலாம்.
பெற்றோரோடு வீடு வருவதாகச் சொன்னான். அன்பின் சேர்வில் தாமதம் கூடாதென்றான். அது நியாயம் போல் இருந்ததனால் ஆமோதித்தேன்..
என்வீடு. அவனும் இல்லை…. அவரும் கூடவே பெற்றவரும். ஒற்றை மகன் .வேண்டியது மறுத்ததில்லை. இப்போது வேண்டுவது உங்கள் பெண் என்றார்கள். என்னில் விஷேஷமில்லை. ஒரு பொம்மையானேன். எங்கோ நெருடிற்று. நிலத்தை அடிக்கடி பார்க்காது அவர்கள் முகம் பார்த்தேன். புன்னகைத்தேன். புன்னகை உண்மையில் தேனாகும். இனித்தது. சந்தோஷித்தோம்.
என் பெற்றவரதும் சம்மதம், நல்ல இடம் போல இருந்ததனால். இனிய உணவுகளையும் தெரிந்த பதில்களையுடைய கேள்விகளையும் பரிமாறினோம். விலகினார்கள், கெளவிக் கொண்ட எம்மிருவர் கண்கள் இழுபட. தொடர்ச்சி வழமையே, வாழ்வுப் பாதையாக இருந்ததனால்.
வேகமாய் உதிர்ந்த ஐந்து வருட இதழ்கள். பஸ்ஸில் இவரும் நானும். அருகருகே. இரு குழந்தைகள். அதே இடம். முன்பொருநாள் எம் சந்திப்பு நிகழ்ந்த பஸ் தரிப்பு. உற்சாகமானேன். எனதே அவரதும் உணர்வு. இல்லையா ? முகம் பார்த்தேன். மலர்வற்ற சாதாரணம். இப்போது புரிகிறது,அப்போது புரியப்படாமலும் சில இருந்ததென. முரண். சகித்தேன். எமது நாட்டில் விட்டுக்கொடுக்கும் பண்பு பெண்களுக்கே உரியதாய் இருந்ததனால்.
பார்வை வலயத்துள் அருகருகே இருவர். பெண் சிரித்தது போல் இருந்தது. நம் கதை தொடருமோ ? இவர் என்னைப் பார்த்தார். சிரித்தார். விஷயம் பகிரும் அர்த்த்ச்சிரிப்பு. காதல் போல் இருப்பதாய்ச் சொன்னார். பிள்ளை மடியிலிருந்து வழுக்கினான். தூக்கிச் சரிப்படுத்திய பொழுதில் என்னுள் கேள்வி. எமது ஆரம்பமும் காதல் தானா ? அல்லது காதல் போல் இருந்ததா ? கேட்கவில்லை. வாழ்க்கை அன்பு நிறைந்த சந்தோஷம் போல் இருந்ததனால்.
****
nanthasaranga@gmail.com
- ஆட்காட்டிப் புற்கூண்டில் வசிக்கும் இதயம்
- தமிழில் பிறமொழி கலத்தலும் திரைப்படத் தலைப்பும்
- மழலைச்சொல் கேளாதவர் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
- பிம்ப உயிர்கள் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
- சீதாயணம் ஓரங்க நாடகத்தின் பின்னுரை
- சேதி வந்தது
- பாம்புகள்
- இருந்ததனால்….
- ஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது!
- கலைந்துபோன ‘திராவிடஸ்தான் ‘ கனவுகளும், கண்ணகியைப் பழித்த கருஞ்சட்டைத் தலைவரும்! – 1
- உயிரினினும் இந்தப் பெண்மை இனிதோ ?
- மகள்…
- முன்னேறு
- பயணம்
- இதற்காக இருக்கலாம்!
- சிந்திக்க ஒரு நொடி – சாஸனம் பொய்த்ததா, மானுடம் பொய்த்ததா ?
- சிந்திக்க ஒரு நொடி – விட்டு விடுதலையாகி
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – சுபாஷ் சந்திர போஸ்
- தமிழ் அறியாத தமிழர்கள்
- Pope John Paul II
- கீதாஞ்சலி (18) உன்னைத் தேடும் போது … ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பார்த்திப ஆண்டு உதயம்
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-6
- அதிர்ச்சியும் ஆற்றாமையும் (சுகுமாரனின் மொழிபெயர்ப்புக் கவிதைகள்)
- மீண்டும் வரும் நாட்கள் :மு.புஷ்பராஜன் கவிதைகள்
- பூகோள காந்த துருவங்கள் இடமாற்றம், துருவ முனையில் விண்ணிற ஒளித் தோரணங்கள் [Geomagnet Poles Reversal, Arctic Auroras] (8)
- மனிதகுலம்: உலகின் மிகக்கொடிய சுரண்டல் கும்பல்-குற்றஞ்சாட்டுகின்றனர் விஞ்ஞானிகள்
- வடகிழக்கில் ஒரு புதிய குரங்கினம் -100 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு-
- உயிர்த்தேன்
- நினைவிருக்கிறதா ?
- தொடர்ந்து ஒலிக்கும் குரல் – (வெங்கட் சாமிநாதனின் உரையாடல்கள் )
- பெரியபுராணம் – 36
- ஹினா- மட்சுரி
- பால்வினைத் தொழில்
- அன்புள்ள ஆசிரியருக்கு
- இனவாத ஈவெரா ?
- தமிழவன் கட்டுரை பற்றி…
- பரிமளத்திற்குப் பதில்மடல்
- அவளால்…!
- என்ட வீடும் அப்புன்டேயும் கறுப்பு
- கண்கள்