எஸ்ஸார்சி
எம்மை எதிர்ப்போன்
தச்யுவோ
ஆரியனோ
தேவப்பகைவனோ
யாராகில் என்ன
இந்திரன்
எமக்கு வெற்றியே அருள்வான் ( ரிக் 10/38)
அசுவினிகள் வருக
சத்தியம் பேசும் எமது
மொழியை உற்சாகப்படுத்தும்
நாசத்தியர்களே
குடும்பப்பெண்களுக்குச்
செல்வமாயிருங்கள்
இல்லாதோர்க்கு எளியோர்க்கு
கண்களில்லாதோர்க்கு இன்னும்
வீழ்ந்துவிட்டோர்க்குப்
பக்கமிருந்து ஆதரியுங்கள் ( ரிக் 10/39)
அக்கினி முதலில்
அருணனாய் வந்தான்
எம் நடுவேஅவன்
வேள்வியில் எழுந்தான்
மக்கள் இடையோ
அவன் தண்ணீர் ஆகினான்
தெரிந்தோர் அவனை இவண்
தீயாய்க்கும்பிடுவர் (ரிக்10/45)
உணவொடு பசு
குதிரை செடிகொடி
விருட்சம் மலை
தண்ணீர் மண்ணொடு
விண் எழு கதிரோன்
தந்தது
தேவரின் கொடை மனம்
ஆரிய விரதம் காக்கும்
குணமுடைத்தேவர்கள்
எங்கும் இருக்கிறார்கள். ( ரிக் 10/65)
அறிஞர்கள் மாவு சலிக்கும்
சல்லடையாய்
மனத்தைச்சலிக்க
மொழி வளம் பெற்றது
முனிவர்கள் உள்ளம் உறைந்தமொழி
கற்றவர் வசமானது
ஏழு பறவைகள்
.இசைந்தே நாத சுரம் நல்கின
மொழியை ஒருவன் காண்கிறான்
ஆனால் காணாதவனாய் ஆகிறான்
மொழியை ஒருவன் கேட்கிறான்
ஆனால் கேளாதவனாய் ஆகிறான்
எப்படியோ மொழி
என்னும் ஒரு பெண்ணாள்
அழகு ஆடை அணிந்த
மனையாள் தன் கணவனுக்கு
தன் திரேகம் காட்டிவிடுவதுபோலே
அறிஞர்கட்கு அவள் தானே தெரிகிறாள்
மொழியிடை நட்பு
நிலைத்த ஒன்று
புலவர் குழாம்
அரவணைக்கக்காரணமாவது
மொழியின் சாரம் அறியா
மூடனே
மலட்டுப்பசுபோலே
மலரும் கனியும் ஈனா
மரம்போலே மொழிபாரம் சுமக்கிரான்
நட்பை அறிந்தோனை
விட்டு விலகுவோன் பேசுமொழி
நீசமானது
செவி யிருந்தும் கேளாச்செவியே அவனது
நல்லது செய்தல் அரியாதவனவன்
கண்களும் காதுகளும்
எல்லோர்க்கும் பார்க்கச்சமமே
வலிமையும் கூர்மையும் வேறுவேறு
கிணற்று நீர் குடிக்க
குட்டை நீர் கால் நனைக்க
ஏரி நீரோ உடல் கழுவ
அப்படித்தான் மனிதர் இடையேயும் ( ரிக் 10/71)
சிந்து நதியே
நீயே பசி நீக்கும் சோறு
நீயே அரசன்
நீயே கர்ச்சிக்கும் காளை
எல்லா நதிகட்கும் நீயோர்
மாமுலை
அழகுப்புரவி நீ
செளந்தரவல்லி
ஆடை அன்னம்
பொன்னொடு மயிராடை
செடிகொடி
மது சிந்து மலர்களென
அள்ளி அள்ளித்தருபவள் ( ரிக் 10/75)
———————————————-
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! பூர்வீக விண்மீன்கள், அபூர்வக் கரு விண்மீன்கள்(Earlier Stars & Dark Stars)!(கட்டுரை:66
- நிரப்புதல்…
- இராக்காலங்களில் அவர்களின் வருகைக்காய் காத்திருக்கலாம்
- அமீரக தமிழ் மன்றம் இன்பச்சுற்றுலா
- ஜனவரி 2010 முதல் மும்மாத இதழாக வருகிறது நேர்காணல்
- சந்திரவதனாவின்-‘மனஓசை’
- வயநாட்டு சிங்கத்தின் தணியாத சுதந்திர தாகம்
- நட.சிவகுமாரின் எதிர் கவிதையும் எதிர் அழகியலும்
- அழியாப் புகழ் பெறும் இடங்கள்
- ‘யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை’ – விமர்சனக் கட்டுரைகள்
- கவிதைகள் எழுதவில்லையெனில் ஒருவேளை தற்கொலைகூட செய்திருப்பேன் – கவிஞர் அய்யப்பமாதவனுடன் ஒரு கவிதை சந்திப்பு
- வேத வனம் விருட்சம் -61
- காத்திருந்தேன்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << புன்னகையும், கண்ணீரும் >> கவிதை -20
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -1 தடம் காண முடியாச் சுவடு
- புத்திசாலி
- பாரதியாரிடம் ஒரு வேண்டுகோள்
- கனவுகளின் நீட்சி
- பனிவிழும் அதிகாலையொன்றில்
- உதிரும் வண்ணம்
- புனிதமோசடி — உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுதல் 1
- தொலைதூர வெளிச்சங்கள்
- விளம்பரம் தரும் வாழ்வு
- தத்ரூப வியாபாரிகள்
- ‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-2
- வில்கின்ஸ் கண்ட நவீன இந்துமதம்
- முள்பாதை 7 (தெலுங்கு தொடர்கதை)
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -9
- முடிவுறாத பயணம்