பி.கே. சிவகுமார்
அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,
“வளவள, பள பள பத்திரிகைகளின் தேவைக்கு ஏற்ப ஸ்ரீதேவியைப் பேட்டிக் கண்டு சுவாரசியமான கட்டுரை எழுத முற்பட்ட வாஸந்தி அதில்தான் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். மாறாகச் சிவசேனை சம்பந்தப்பட்ட மும்பை அரசியலையும் தொட்டுத் தனது முற்போக்கு மதச் சார்பற்ற நிலைப்பாட்டை நிறுவ அவர் முற்படுவதால்” என்று திண்ணை பத்திரிகையின் “நாட்டாமை” போல (ஒருவேளை மலர்மன்னன் உண்மையிலேயே திண்ணைக்கு நாட்டாமைதானா என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க இயலவில்லை.) மலர்மன்னன் எழுதிய கட்டுரையைப் படித்தேன். யார் யாரைப் பற்றி எழுதுவது எழுதக்கூடாது என்று சொல்ல ஆரம்பிக்கிற பத்வா வேலையை மலர்மன்னன் போன்ற இந்துத்துவ அடிப்படைவாதிகளும் ஆரம்பித்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. வளவள பளபள பத்திரிகைகள் தேவைக்கு ஏற்ப எழுதச் சொன்னால் மலர்மன்னன் போன்றவர்கள் ஓடோ டிப் போய் எழுத மாட்டார்களா என்ன? அப்படி யாரும் இவர்களைப் போன்றவர்களைச் சீண்டாததால்தானே திண்ணையிலும் தமிழ் சிஃபியிலும் உட்கார்ந்து இலவச உபதேசங்களை அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். மலர்மன்னன் இப்படி இலவச உபதேசங்களை அள்ளி விடுவது பற்றியோ, அதற்குத் திண்ணை இடம்தருவது பற்றியோ எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், இப்படித்தான் திண்ணைக்கு எழுத வருகிற எழுத்தாளர்களை இவர் தன்னுடைய நாட்டாமையால் துரத்திவிடுகிறாரோ என்பதை எண்ணும்போதுதான் எனக்கு வருத்தம் வருகிறது. உதாரணமாக, கொஞ்ச காலம் முன்பு இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தொடர்ந்து திண்ணையில் எழுதிக் கொண்டிருந்தார். அவரை மலர்மன்னன் வம்புக்கிழுத்து இப்போது வாஸந்தியை எழுதியதுபோல எழுத ஆரம்பிக்க, அவர் திண்ணைக்கு எழுதுவதை நிறுத்திவிட்டாரோ என்ற சம்சயம் எனக்கு உண்டு. இதுகுறித்த திட்டவட்டமான தகவல்கள் எனக்குத் தெரியும் என்றாலும் அவற்றைப் பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லை. இப்போது அதே மலர்மன்னன் வாஸந்தி எப்படி இதைப் பற்றி எழுத ஆரம்பிக்கலாம் என்று திண்ணையின் நாட்டாமைபோலக் கேள்வி கேட்க, நீங்களும் அதை உங்கள் பத்திரிகா சுதந்திரப்படி அப்படியே பிரசுரித்துள்ளீர்கள். மலர்மன்னன் போன்றவர்கள் லெவலுக்கு இறங்கிச் சண்டை போடவோ விவாதம் செய்யவோ விருப்பம் இல்லாது இருந்தால் வாஸந்தியும் திண்ணையில் எழுதுவதை நிறுத்திவிடப் போகிறார் என்று வாசகனாக எனக்குப் பயமாக இருக்கிறது. யார் எதை எழுதுவது என்பதைச் சொல்ல மலர்மன்னன் யார்? மலர்மன்னன் யாரைப் பற்றியெல்லாம் எழுதுகிறாரோ அவர்களின் வீட்டுச் சமையலறை வரை சென்று பழகிவிட்டுத்தான் – அதாவது நன்றாகத் தெரிந்து கொண்டபின்புதான் எழுதுகிறாரா? மகாத்மா காந்தியைப் பற்றிப் பல கட்டுரைகள் எழுதிய மலர்மன்னன் என்ன, மகாத்மாவின் காரியதரிசியாகப் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் அவற்றை எழுதினாரா? இப்போது வாஸந்தியைக் கேட்க வந்துவிட்டார். மலர்மன்னன் போன்றவர்கள் எழுதுவதையெல்லாம் பிரசுரிப்பதற்கு முன், மலர்மன்னனைத் தவிர மற்றவர்களைப் படிக்க விரும்பும் திண்ணை வாசகர்களுக்கு ஏற்படக் கூடிய இழப்புகளைப் பற்றித் திண்ணை ஆசிரியர் குழு சிந்திக்க வேண்டும். நேரடியாகவும் பிற பெயர்களில் ஒளிந்து கொண்டும், உற்பத்தி செய்யப்பட்டு, இந்தக் கடிதத்தை எதிர்த்து வரப்போகும் கடிதங்களை திண்ணை அப்படியே பிரசுரிக்கும் என்று அறிவேன். ஆனால், திண்ணை இப்படித் தொடர்ந்து எழுத்தாளர்களை இழந்து கொண்டிருக்கும் நிலை இனியும் ஏற்படுமானால், பேசாமல் அதை பா.ஜ.க.வின் பிரசாரப் பீரங்கி என்று அறிவித்து விடலாம். என்னைப் போன்றவர்களுக்கு இப்படிக் கடிதம் எழுதுகிற வேலையாவது மிச்சமாகும்.
அன்புடன்,
பி.கே. சிவகுமார்
pksivakumar@yahoo.com
(திண்ணைக்கு யாரும் நாட்டாமையோ அலல்து திண்ணை யாருக்கும் பிரசார பீரங்கியோ அல்ல. இ பா இனி திண்ணைக்கு எழுத மாட்டேன் என்று திண்ணைக்குத் தெரிவித்ததில்லை. மலர் மன்னன் அல்லது வேறு யாருடைய விமர்சனத்துக்கும் அஞ்சி எந்த எழுத்தாளரும் எழுதுவதை நிறுத்தி விடமாட்டார்கள். கடிதங்கள், கட்டுரைகள் எழுதப்பட்ட பொருள் பற்றி மட்டுமல்லாமல் எழுதியவரைப் பற்றியதும் கூட என்பதை திண்ணை வாசகர்கள் நிச்சயம் சீர்தூக்கி உணர முடியும் என்பதால் தான் சில கடுமையான எழுத்துக்களையும் திண்ணையில் வெளியிடுகிறோம். புரிந்து கொள்ளுங்கள். நன்றி- திண்ணை குழு)
- Toronto International Film Festival 2007
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 12(அத்தியாயம் 18)
- I, BOSE presented by AGNI KOOTTHU (THEATRE OF FIRE)
- வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி ஜெயராமன் எழுதிய கடிதம்
- மலர்மன்னன் உண்மையிலேயே திண்ணைக்கு நாட்டாமைதானா ?
- மை கவிதைத் தொகுப்பு
- தாகூரின் கீதங்கள் -1 புவியில் வாழ விரும்புகிறேன் !
- நேற்று இன்றல்ல நாளை : ஆசிரியர் : எஸ் சங்கரநாராயணன்
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தால் இந்தியாவிற் தொடர்ந்து, நடத்தப்படும் பத்தாவது பெண்கள் சிறு கதைப்போட்டி
- மறுமலர்ச்சிக்கவிஞர் புதுவைச்சிவம்(23.10.1908-31.08.1989)
- 26 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 1
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர் விந்தைகள் பிரபஞ்சத்தின் வயதென்ன ? (கட்டுரை: 1)
- “மாறிப் போன தடங்கள்”
- பூ ஒன்று (இரண்டு) புயலானது
- 1/4 என்னும் சிற்றிதழில் பிரஞ்சுப் பண்பாட்டுத் தாக்கம் பெற்ற தமிழர் பற்றிய காரை சிபியின் அரிய கருத்துகள்
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 30 (நாவல் – நிறைவுப் பகுதி)
- படித்ததும் புரிந்ததும் – (8) அந்நியன் – அஞ்சா நெஞ்சன் – வலைப் பூக்கள் – இலக்கணக் குறிப்பு
- தண்ணீர்
- பெஞ்சமின் லெபோ, சர்சல் (பிரான்சு) அவர்களின் ‘பாரதியார் வரைந்த பாஞ்சாலி யார்?’ கட்டுரை
- கடிதம் – தவிர்க்க முடியாத இருளின் குறிப்புகள்
- லா.ச.ரா. குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் – முதல்வர் தகவல்
- திரைப்படம் : ஆப்ரிக்காவின் துண்டு வளையல்கள்
- குள்ளநரி
- அந்த நாள் ஞாபகம் : அதோ அந்தப் பறவை போல….
- கதைகளுக்குள் நர்த்தனமாடும் கதைகளும் கதையாசிரியர்களும்
- லா.ச.ரா. (92) சொற்களின் சூத்ரதாரி
- வழக்கம் போல் இருப்பதில்லைதான் வழக்கமான மழை
- லா.ச.ரா என்கிற கைவினைஞர்
- கவிதைகள்
- கவிதைகள்
- ஏன் இந்தத் தலைக்குனிவு
- புத்தனுக்கு போதி மரம்………..
- ஊர்விலக்கு கண்டனத்திற்குரியது
- மெல்லச் சுருங்கும் மேற்கத்திய உலகம்
- தமிழ்படித்தோரைக் காப்போம்
- தமிழ்வாணன் – மூ ட் டா த அ டு ப் பை மூ ட் டி ய வ ர்
- “ததிங்கிணதோம்”
- தண்ணீரைப் போன்றது வெளிச்சம்
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 34