ஜெயமோகனின் பத்து நூல்கள்
தமிழிலக்கிய வரலாற்றில் முதல்முறையாக ஒரு பதிப்பகம் ஓர் எழுத்தாளரின் பத்து நூல்களை ஒரேசமயம் வெளியிடுகிறது! ஜெயமோகனின் பத்து நூல்கள் தமிழினி வெளியீடாக வரவுள்ளன
1] காடு [நாவல்] பக்கம் 450
மனித வாழ்வில் இளவெயிலின் மென்மையுடனும் ஒளியுடனும் வந்து பார்த்திருக்கவே கரைந்து கண்ணீராகவும் கனவுகளாகவும் தங்கிவிடும் குறிஞ்சிப்பருவம் குறித்த நாவல்
2] வடக்கு முகம் [நாடகங்கள்] பக்கம் 120
மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட பதுமை, வடக்குமுகம் என்னும் இரு நாடகங்கள். மனித உணர்வுகளின் கவித்துவம் உச்சத்தில் வெளிப்படும் கவியுலகம்
3] நிழல் சென்ற பாதை – தமிழ் நவீனத்துவத்தின் தடங்கள் [கட்டுரைகள் ] பக்கம் 250
மெளனி, புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, நகுலன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், அசோகமித்திரன், ஆ.மாதவன், பூமணி, கலாப்பிரியா, ஆகியோரைப்பற்றிய விரிவான விமரிசன ஆய்வுக் கட்டுரைகள். தமிழ் சூழலில் விரிவான விவாதங்களை உருவாக்கிய முன்னோடி ஆய்வுகள் இவை
4]நிழல் தொடா மரங்கள் – தமிழ் நவீனத்தின் விலகல்களும் மீறல்களும் [கட்டுரைகள் ] பக்கம் 250
ப.சிங்காரம், மு.தளையசிங்கம், அ.முத்துலிங்கம், எம் எஸ் கல்யாணசுந்தரம் ஆகியோரைப்பற்றிய விமரிசன ஆய்வுக்கட்டுரைகள்
5] தருக்கத்தின் தடத்தில் – தத்துவம் வரலாறு அரசியல் [கட்டுரைகள் ] பக்கம் 200
6] ரசனையின் தடத்தில் – இலக்கிய எதிர்வினைகள் [ கட்டுரைகள்] பக்கம் 200
சுஜாதா, நாஞ்சில்நாடன், பிரமிள் , சுந்தர ராமசாமி போன்றவர்கள்மீதான மதிப்புரைகள், பல்வேறு எதிர்வினைகள், மற்றும் தனிக்கட்டுரைகள்.
7] நேர்முகங்கள் [பேட்டிகள் ] பக்கம் 250
ஜெயமோகன் எடுத்த பேட்டிகள் புகழ்பெற்றவை. கடந்த காலத் தமிழ்ச்சூழலில் பெரிய விவாதங்களை உருவாக்கியவை. பின் நவீனத்துவ சிந்தனைகளை தமிழ் சூழல் உள் வாங்கிக் கொள்ள உதவியவை. இசையியல் செவ்விலக்கியம் போன்ற பல தளங்களை தமிழ் வாசகர்கள் அறிய உதவியவை. டி.ஆர்.நாகராஜ், கெ.சச்சிதானந்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், இசை ஆய்வாளர் நா.மம்முது, பேராசிரியர் ஜேசுதாசன், சுந்தர ராமசாமி, நீல பத்மநாபன், அ.முத்துலிங்கம், எம்.யுவன், பாவண்ணன் ஆகியோரின் பேட்டிகள்.
8]தமிழில் மொழிபெயர்ப்புநாவல்கள் [கட்டுரைகள் ] பக்கம் 100
தமிழில் வெளிவந்த முக்கியமான மொழிபெயர்ப்பு ஊல்கள் பற்றிய அறிமுகமும் விமரிசனமும் அடங்கிய நூல் இது
9] உரையாடல்கள் [விவாதம்] பக்கம் 100
சொல்புதிது சார்பில் நடத்தப்பட்ட நான்கு இலக்கியக் கூட்டங்களைப்பற்றிய விரிவான விவாதப்பதிவுகள் . முற்றிலும் மாறுபட தரப்புகள் கருத்து ரீதியாக மோதிக் கொள்வத நாடகீய சித்தரங்கள். தமிழில் செயல்படும் கருத்துத் தரப்புகளைதறிய உதவும் நூல்
10] இலக்கிய குறிப்புகள்: டி எஸ் எலியட் [மொழிபெயர்ப்பு] பக்கம் 120
தமிழினி பதிப்பகம்
அவ்வை சண்முகம் சாலை
கோபாலபுரம்
சென்னை
போன் 044 – 28110759
மின்னஞ்சல் tamilini@rediffmail.com
jeyamohanb@rediffmail.com
- முகவரி மறந்தேன்…
- மூன்று கவிதைகள்
- சீதாயணம்!
- ‘தான் ‘ எனும் எண்ணம் நீங்கி வாழ்வெனும் ஓவியம் உயிர் பெற….
- மெளனியின் படைப்புக்களின் இலக்கிய இடம்
- காலச்சக்கரமும் ஒளிவட்டமும் – தாந்திாீக பெளத்தத்தின் தோற்றம் பற்றி
- தயக்கங்களும் தந்திரங்களும் ( சி. ஆர்.ரவீந்திரனின் ‘சராசரிகள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 68)
- தமிழினி வெளியீடாக
- ரவி சீனிவாஸின் இலக்கிய உலகங்கள்
- என் கவிதையும் நானும்
- பிரிட்டன் புளுடோனிய உற்பத்தி அணு உலையில் பெரும் தீ விபத்து [Britain ‘s Windscale Plutonium Production Reactor Fire Accident]
- பனிமனிதன் – குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் – திறனாய்வு)
- நேற்றான நீ
- சொல் தேடி பயணம்…
- செந்தாமரையே
- மூன்று கவிதைகள்
- அல்லி-மல்லி அலசல்- பாகம்3
- மூன்று கவிதைகள்
- மறக்கமுடியவில்லை
- என்னுள் நீயானாய் சக்தி ஓம்
- பணமே உன் விலை என்ன ?
- நந்தன் கதை – மு ராமசுவாமியின் இயக்கத்தில்
- குறிப்புகள் சில-10 ஜூலை 2003 (திராவிட இயக்கம்-ஹேபர்மாஸ்,தெரிதா-சூசன் சொண்டாக்-பசுமையாகும் பிரான்சின் அரசியல் சட்டம் ?)
- மனத்தின் ஆழத்திலிருந்து ஒரு குரல் ( தமிழ் நாடகச் சூழல் – ஒரு பார்வை – வெளி ரங்கராஜனுடைய நூல் அறிமுகம்)
- வாரபலன் ஜூலை 4, 2003 (ஆயிஷா, கநாசு, மலையாள இலக்கிய உலகு, வரம்புகளுக்கு அப்பால்)
- கடிதங்கள்
- வீட்டுக் குறிப்புகள் சில
- உலக நடை மாறும்
- விடியும்! நாவல – (4)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினான்கு
- மூன்றாவது தோல்வி
- அம்மா எனக்கொரு சிநேகிதி.