வாக்களிக்கும் முன் நினையுங்கள்..!
ஆடியிலே பெருக்கெடுத்து
ஆடிவரும் காவிரி என்று
ஆடி மகிழ்ந்த எம் பெண்கள்…!!!
கோவிலும் தேரும் தாண்டி
கல்லணைக் கட்டிய
எங்கள் மன்னன் கரிகாலன்..!!!
காலம் பல ஆனாலும்
பட்டிமன்றத்திலும் பரிசலிலும்
காவியமான பூம்புகார் வரலாறு…!
கொலுசு சத்தம் சந்தமாக
பாத்தியில் தாவி வரும் கால்கள்-
தலைகளோ சுமந்து வரும் கதிர்மணிக் கட்டுகள்-
குலுங்கும் அதிர்வில்
சிந்தும் நெல்மணிள்-
உணவாகும் பல கிராமத்திற்கு..
சோழநாடு சோறுடைத்து – என்ற
பெருமை…!!
எல்லாம் பொய்யாய் பழங்கதையாய்
ஆனதடா…
கரைபுரண்டு ஓடும்
காவிரி எழிலில்
கவிதை வாழ்வு வாழ்ந்த
நம் தமிழன் –
இதோ
எலிக்கறித் தின்று கொண்டு…!!!
காவிரிக் கரையோரம் நிழல் தரும் மரங்கள்
நம் பாட்டன் காலத்தில்
அம்பு கொண்டு மீன் பிடித்த காலம் சொல்லும்..!!
வளைந்து நெளிந்து ஓடி
வரப்பு மறைய நெல் தந்த
காவிரித் தண்ணீர்-
இன்று… ?
வானம் பொய்த்ததா.. ?
வையகம் வறண்டதா.. ?
என்றே கேட்டால்…
காவிரி அன்னை
முன்னை தோன்றிய இடத்தில்-
புதிதாய் முளைத்த
வரம்பு மீறிய அணைத் தடைகளால்-
சிறைப் பட்டு..
வற்றிய வயிறும்
பதறும் நெஞ்சுமாய்-
கரை புரண்டு ஓடிய காவிரிக்கரையில்
கண்ணீர் ததும்பும் மனமுடன்..!
வரப்புகளில் நடக்கும் கால்கள் – நடுக்கமுடன்..!!
கரும்பு வெட்ட மூன்றாவது கையான அரிவாள்
மூலையில் –
தளராதே.. அரிவாளை
உற்றுப் பார்..!
பேசுவது கேட்கும்-
‘மூடனே..!
எத்தனை நாள் இந்த ஈனப் பிறப்பு… ?
வருடம் ஐம்பது ஆனாலும்
வறண்டு போன நாட்கள் தான் கூடுகிறது..
உரிமைக்கு யாசகமா.. ?
நீயும் நானும் ஒன்றேயெனச் சொல்பவர்கள்
காவிரி எனும் ஒன்றை மட்டும் ஏன் மறந்தார்கள்.. ‘
நீயோ அழுது கொண்டு
அவனோ அணைகளைத் தொடர்ந்து
கட்டிக் கொண்டு..!!
இதோ
தேர்தலில் வாக்கு கேட்டு வார்த்தைச் சித்தர்கள் வருகிறார்கள்
அவர்களிடம்-
– நீ இத்தாலியா என்று கேட்காதே…!
காவிரி இந்தியாவிலா ஆரம்பிக்கிறது எனக் கேள்..!
– இந்தியா ஒளிர்கிறதா என்று கேட்காதே…!
ஐயா.. ? காவிரிக்கு என்ன ஐ.நா செல்லனுமா எனக் கேள்..!
– பீச்சாண்டே காணமல் போன கண்ணகி பற்றி கேட்காதே..!
பீச் மணலாய் காவிரி ஆனக் காரணம் கேள்…!
– துபாயாக மாற்றுவேன் என்று சொல்வது
தண்ணீரில்லாமல் பாலைவனமாகவா.. ? எனக் கேள்..!
இன்று
காவிரி நீர் கேட்டால்
கங்கை காவிரி இணைப்பு என்பர்..!
நாளை
கங்கை காவிரி இணைப்பு முன்-
கங்கை அமேசான் இணைப்பு என்பர்…!
வீட்டைப் பற்றி
தெருவைப் பற்றி
நகரைப் பற்றி-
பேச்சு ஏதுமில்லை அவர்களிடம் –
ஆனால் வாயோ
ஒட்டு மொத்தமாய்
இந்தியா உயரும் என்ற பொய்மை மட்டும்…!
உரத்த குரல் கொண்டு கேள்..!!
-காவிரிக்கு என்ன தீர்வு என்று..!
இல்லையேல்
கரும்பு வெட்டிய அரிவாளுக்குத் தெரியும்
அறுப்பு என்னவென்று….!!!
இன்னும் எத்தனை நாளடா
எம் தமிழர் ஏமாந்த நிலையில்.. ?
நேற்று நம் முன்னோர் கண்களில்
இன்று நம் கண்களில்-
தொடர வேண்டுமா கண்ணீர் – நாளை
நம் செல்லப் பிள்ளைகள் கண்களிலும்… ?
மணலான காவிரி தழுவிச்
சூடான காற்று-
உன்னைச் சுட்டு சொல்லும்
மொழி புரியவில்லையா.. ?
அழுது சிவந்த
நம் கண்கள் இனி
அராஜகத்தின் தன்மை கண்டு
கோவைப் பழமாகட்டும்..!
ஐயா… என்று
ஏந்திய கைகள்
ஓங்கினால் தான் – நீசர்கள்
‘ஐயோ ‘ என்று ஓடுவார்கள்..!
கைகள் கூடி இணைந்தால்
விலங்கான அணைகள்
உடையும் தானாக..!
உடையும் அணைகளில்
ஒன்றாகும் தேசம் மேலாக..
இல்லையேல்-
ஆகும் துண்டு துண்டாக..!!
உடைந்த அணையின்
ஊடே புகுந்து
மீண்டு(ம்) வருவாள்
காவிரிச் சிலிர்ப்பாக…!!!
ஆகா என்று ஒரு நாள் எழும் பார்,
காவிரிப் புரட்சி..!!!!
அதற்கு ஆரம்பமாக
இருக்கட்டும் நீ கேட்கும் கேள்வி…!!!
கோச்சா @ கோவிந்
gocha2004@yahoo.com
- சொல்லால் செத்த புறாக்கள்
- மெளனம்
- நழுவும் …
- ஆதிமுதல்….
- கோமதி கிருஷ்ணன் கவிதைகள்
- வேடதாரிகள்
- கே.கோவிந்தன் கவிதைகள்
- ஓவியம்
- முடிவுக்காலமே வைட்டமின்
- நொடிகள் கழிவுப் பொருள்களாய்
- வருகல் ஆறு
- கி. சீராளன் கவிதைகள்
- இப்போது உனக்காக…
- அன்புடன் இதயம் – 13 – நிலம்
- எனக்குள் எரியும் நெருப்பு.
- பால் கடன்
- இன்று புதிதாய்ப் பிறந்த நாவல்: இரா. முருகனின் “மூன்று விரல்” -விமர்சனம்:
- ப்ரான் கறி
- மீன் கட்லெட்டுகள்
- கடிதங்கள் ஏப்ரல் 1, 2004
- எழுத்தாளர்களின் பண்பாடு என்ன ?
- A Bharata Natyam Dance Drama on Bharathi ‘s Works
- நவீனப்பெண்ணியமும் சின்னக்கருப்பனின் டைனோசார் (இந்துமதமும்) இந்துத்துவமும் (மீண்டும் திரும்பும் குதிரை அரசியல்)
- Three exhillarting dance programs
- சாமியேய். ..
- ஹிண்டுவிற்கு தினந்தோறும் முட்டாள்கள் தினம்
- லென்னி புரூஸ் பொன்மொழிகள்
- கர்ப்பத்தடையும் கத்தோலிக்கரும்
- தீக்குள் விரலை வைத்தால்.
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 18
- ‘டென்ஸ் நே ப்யார் கியா! ‘
- பனியில் விழுந்த மனிதர்கள்
- நோயுற்ற ஆசிரியர் (கதை — 02)
- ‘பச்சை ‘ மணிக்கிளியே!
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு (நிறைவடைந்தது)
- புழுத் துளைகள் – 2
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 13
- களிமேடு காளியம்மாள்
- இருபது/இருபது (தொடர்ச்சி…)
- வாரபலன் ஏப்ரல் 1, 2004, கேரளக்கூட்டு, கன்னடக்களி, கானமேளா, மம்முட்டி, அனந்தமூர்த்தி
- சூடானில் கறுப்பினத்தவருக்கு எதிரான தொடரும் இனப்படுகொலை
- பொறியியல் அற்புதச் சாதனையான அமெரிக்காவின் பொன்வாயில் ஊஞ்சல் பாலம்
(San Francisco Golden Gate Suspension Bridge)
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 3
- சென்ற வாரங்களில் – ஏப்ரல் 1, 2004, பெண்கள் பெண்கள் பெண்கள்
- மெல்லத் தமிழினிச் சாகுமோ ? ( ‘யாருக்குமேயான ‘ பதிலல்லாத ஒரு மீள்பார்வை மட்டுமே)
- ஈஸ்ரர் தினம்: அதன் வரலாறும் முக்கியத்துவமும்
- திரை விலகியது
- விலக்கப்பட்ட கனி
- எதிரேறும் மீன்கள்
- காலப்பிழை
- சத்தி சக்திதாசனின் கவிக்கட்டு 1
- சோற்றுப் புத்தகம்
- நல்லாமல் நன்றியெது ?
- காவிரி மண் வாக்காளர்களே….!