பி கே சிவகுமார் –
திண்ணை ஆசிரியருக்கு,
1. சிவவாக்கியர் திருவாக்கியங்கள் கட்டுரையில் ஜெயமோகன் புத்தகத்தை மேற்கோள் காட்டியிருந்தது ஏன் என்று திரு.தேவேந்திர பூபதி கேட்டிருந்தார். கீதை மற்றும் கபிலரைப் பற்றிய மேற்கோள்கள் இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதால், அதைக் குறிப்பிட்டிருந்தேன். இதை விவரமாக மூலக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்க வேண்டும். விட்டுவிட்டது இக்கேள்வியை எழுப்பியிருக்கிறது.
2. சிவவாக்கியரின் பாடல்கள் அடங்கிய பூம்புகார் பிரசுரம் வெளியிட்ட ‘சித்தர் பாடல்கள் ‘ புத்தகத்திலிருந்தே சிவவாக்கியரைப் படித்தேன். சித்தர்களின் காலம் பதினான்காம் நூற்றாண்டிலிருந்து தொடங்கப்பட்டதாகவே இப்புத்தகம் சொல்கிறது. அதையே என் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். திரு.தேவேந்திர பூபதி சித்தர்களின் காலம் வேறு என்று அறிந்தால், அந்தக் காலத்தைக் குறிப்பிட்டு எழுதுவது திண்ணை வாசகர்க்கு உதவக் கூடும்.
3. வாழ்க்கை எவரிடமிருந்து எதைக் கற்றுத் தரும் என்று சொல்ல முடியாது. எனவே, சுஜாதா மூலம் சித்தர்களை அறிய நேர்ந்ததில் சித்தர்கள் வருந்தக் கூடிய அளவுக்கு ஒன்றும் இல்லை என்றே நம்புகிறேன். சுஜாதா எழுத்துகளிலிருந்து நான் கற்றவை நிறைய இருக்கின்றன என்று சொல்லிக் கொள்வதில் எனக்குத் தயக்கம் இல்லை.
4. சனாதனம் என்கிற வார்த்தை பழமைவாதம் (Conservative) என்கிற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சடங்குகளின் தொகுப்பாகவும் பஜனைகளின் கூச்சலாகவும் என்கிற மூடநம்பிக்கைகளின் தொகுப்பைச் சொல்ல அந்த வார்த்தைப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட்ட பத்தியைப் படிக்கும்போது அறியலாம்.
5. திரு.தேவேந்திர பூபதி கருத்துகளுக்கு நன்றி.
– பி.கே. சிவகுமார்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 2)
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 19
- பிறந்த மண்ணுக்கு – 2
- ‘சுடச்சுட ஆட்டுக்கறியுடன் சாப்பிட்டு விட்டு சின்னதாய் ஒரு நித்திரை கொள்ள வேணும்… ‘
- கட்டுகள்
- உள் முகம்
- ஈரோட்டுப் பாதை சரியா ? – 1
- வாரபலன் – மே 13, 2004 – ஈராக் இந்தியசோகம் ,எமெர்ஜென்சி முன்னோட்டு, இந்திய வரைபடம் சீனாவின் கபடம்
- அடுத்த பிரதமராக கலைஞர் கருணாநிதி வரவேண்டும்
- உலக வங்கி அறிக்கை : ஆப்பிரிக்க ஏழ்மை 82 சதவீதம் அதிகரிக்கும்
- கூட்டணிகளா, இன்றேல் வேட்டணிகளா ?
- சன்மார்க்கம் – துன்மார்க்கம்
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 5
- ஆக்கலும் அழித்தலும்
- இந்தியத் தேர்தல் 2004 – ஒரு பார்வை
- சில குறிப்புகள்
- சமீபத்தில் படித்தவை 2- இளங்கோவன், அசதா, எம் வேதசகாயகுமார், இடாலோ கால்வினோ(தமிழாக்கம் பிரம்மராஜன்), சந்திரன், மணா, உமா மகேஸ்வரி,
- கந்தர்வனும் கடைசிக் கவிதையும்
- புதிய வடிவத்தை¢ தேடி (தழும்பு – கன்னடச் சிறுகதைத் தொகுதியின் அறிமுகம்)
- ஞானப்பல்லக்கு
- சொல்லவா கதை சொல்லவா…
- கடிதங்கள் – மே 13, 2004
- ராமாயணம் – நாட்டிய நாடகம் – இந்தியா இந்தோனேசியா குழுக்கள்
- கம்பராமாயணம் குறுந்தகட்டில்
- கடிதம் மே 13,2004 – ரஜினி, டி ஆர் பாலு
- கடிதம் மே 13,2004 – ஜோதிர்லதா கிரிஜாவுக்கு: வருத்தமும் விளக்கமும்
- இரு கவிதைகள்
- வேடம்
- விதி
- இந்தியா ஒளிரக்கூடும்…
- அன்புடன் இதயம் – 17. கல்யாணமாம் கல்யாணம்
- கடவுளின் மூச்சு எப்படிப்பட்டது
- உள்ளும் புறமும் எழிற் கொள்ளை
- அரவணைப்பு
- வெள்ளத்தில்…
- விபத்து
- திடார் தலைவன்
- சலிப்பு
- வடு
- நீ எனை தொழும் கணங்கள்….!
- எங்களை அறுத்து
- வலிமிகாதது
- புத்தரும் சில கேள்விகளும்
- உன்னில் உறைந்து போனேன்…
- .. மழை ..
- கவிக்கட்டு 6 – நதியின் ஓரங்களில்
- சொல்லின் செல்வன்
- தமிழவன் கவிதைகள்-ஐந்து
- மனித உடலில் அதிகரிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள்
- தேனீ – சாதீய கட்டமைப்பு
- மலைகளைக் குடைந்து தோண்டிய ஜப்பானின் நீண்ட செய்கன் கடலடிக் குகை [Japan ‘s Seikan Subsea Mountain Tunnel (1988)]
- காதல் தீவு