முத்துக் குளியல்

0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 37 in the series 20090625_Issue

ஒளியவன்



சலனமற்ற அந்த
மழையிரவில்
குடையற்று நடந்திருந்தோம்
மழை வருமென்று
தெரிந்தும்.

பேசிக்கொண்டே
நடந்தாய்…

அமைதியாய்
வா
உன்
உதட்டுச்
சிப்பிக்குள்
விழும் மழைத்துளிகள்
வெளியே முத்துக்களாய்
சிதறி வீணாகிறது
என்றேன்.

என்னைக்
கிள்ளிவிட்டு
முத்து முத்தாய்
முத்துகள் பரிமாறினாய்
சிப்பிகள் கொண்டு.


Series Navigation

author

ஒளியவன்

ஒளியவன்

Similar Posts