பட்டுக்கோட்டை தமிழ்மதி
இந்தக் கிராமத்துக் காற்றில்
நைட்ரஸ் ஆக்சைடு
கலந்திருந்ததோ என்னவோ
பூக்கள்
புன்னகைத்துக் கொண்டிருந்தன.
அந்த
மின்விளக்குப் பூவை தொட்டேன்.
10 வோல்ட் ஏ.சி. டைனமோ
மின்சாரம் மாதிரி
விறுவிறுவென்று ஏறியது
கையில் குத்திய கொடியின் முள்.
தேன்கூடு மின்விளக்கு.
கிளைதொட
கருந்தேனீக்கள் வட்டமிட
இருட்டு.
பகலில்
இருள் தரும் விளக்கு.
அதோ
விண்வெளிபயணி
இல்லை
ரோபோ.
மரத்தில் கட்டப்பட்டு.
இவர்களை இந்த கிரமம்
இப்படிதானா மதிப்பது ?
சோளக்கொல்லை பொம்மை.
இது என்ன
பறக்கத் தெரியாத பலூன்.
பச்சைக்கொடி நூலில்
பரங்கிக்காய்.
கொடிநூலை அறுத்துவிட்டால்
இந்த பலூனும் இளைத்துவிடும்.
எப்படி
கட்டப்படும் நூலே
காற்றை ஊதி பெரிதாக்கிறது ?
இதுவெல்லாம்
இந்த மண்ணின் இரகசியம்.
எழுந்து நடந்தேன்
ஏறாதப்படிக்கு
கருக்கு கட்டப்பட்ட தென்னைமரம்.
எப்படி ஏறினான்
அவன் ?
வானவில்லின் நிறங்களெல்லாம்
பிரிந்துகிடந்தன மண்ணில்
மலர்களிலும் கொடிகளிலும் நீரிலுமாய்.
கணநேரம் என் கண்கள்
முப்பட்டகக் கண்ணாடியாய்
நிறப்பிரிகை நிகழ்த்தின.
கிளையில் கட்டித்தொங்கும்
கட்டை விளக்கமாறு.
அடுத்த மரத்தோடு
அப்படி என்ன சண்டை ?
ஓ
இந்த மரத்தின்
இலைகளை மறைத்துக்கொண்டு
அடுத்த மரம்
ஸ்டார்ச் தயாரிக்கிறதோ ?
தெரிந்தவள் வந்தாள்.
விளக்கமாறின் விளக்கம் புரிந்தது.
அது
கல்லெறிபவனுக்கு காட்டவாம்.
தொடர்ந்து நடந்தேன்.
இரவில்தானா
மின்வெட்டு நிகழவேண்டும் ?
ஒரு
சூரிய மின்விளக்கு முன்
எத்தனை
நட்சத்திர சிம்னிகள் ஏற்றினாலும்
நிகராகுமா ?
நட்சத்திர விளக்குகள்
நனைய அணைய காற்று மழை.
மழையில் நனையவும் ஆசை
அந்த
குடிசையில் ஒதுங்கவும் ஆசை.
இரண்டு ஆசைகளும்
ஈடேறல்.
உள்ளே தூறல்
வெளியே மழை
ஒழுகும் குடிசை.
நினைவுகள் நீள நெஞ்சம் நனைய
இனி
இந்த காற்றுப் படாவிட்டால்
என்
கல்லறைக்குக்கூட
வியர்த்துப் போகும்.
—-
பட்டுக்கோட்டை தமிழ்மதி
tamilmathi@tamilmathi.com
- உண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல் – நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல் ‘
- நனையத்துணியும் பூனைகள்
- அமைதியுறுவாய்
- அடுத்தவன் மனைவியை கவர்வதெப்படி ?
- வால்மீன் ஒளிமுகில் மாதிரித் தூள்கள் ஆய்வு -2 (Stardust Program: Comet ‘s Coma Sample Analysis)
- சி. கனகசபாபதி நினைவரங்கு
- நான் கண்ட சிஷெல்ஸ் -8. நீதித் துறையும் மற்றவையும்
- குறளும் பரிமேலழகர் உரையும்
- ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு : ஒரு பார்வையாளனின் பார்வை
- அந்த நாள்
- நடிகர்திலகம் ‘சிவாஜி ‘யும் ரஜினியின் ‘சிவாஜி ‘யும்
- சிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்)
- தவமாய் தவமிருந்து
- கடிதம்: எழுதத் திட்டமிட்டதும் எழுத நேர்ந்துள்ளதும்
- பிளவுண்ட இந்து சமூகம்… எதிர்வினை
- கடிதம்
- ஜோர்ஜ் எல். ஹார்ட்டுக்கு இயல் விருது
- ஒரு திருத்தம்
- விவாதம்:தெளகீது பிராமணியத்தின் நுனிப்புல் மேய்ந்த வார்த்தைகள்
- காசாம்பு
- எ ரு து ( மூலம் : யே ஷெங்டவோ(சீனா))
- ப்ளூஸ்(1) பாடல்களுக்கான நேரம்.* (மூலம் : தொனினோ பெனக்கிஸ்ட்டா (Tonino BENACQUISTA))
- காதல்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 6
- மதமாற்றம் எனும் செயல் குறித்து
- அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா ?
- அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா ? – 2
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-7) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- யூத மெஸையாக்கள் (Messiahs)
- மார்க்கோ போலோ பயணக் குறிப்புகளிலிருந்து.
- ஆப்பிள் பெண்ணுள் எாியும் நிலவுகள்–(1) (பாப்லோ நெருடாவின் கவிதை தமிழாக்கம்)
- மின்சாரப்பூக்கள்…
- ஸி. செளாிராஜன் கவிதைகள்
- சாதனை
- கீதாஞ்சலி (59) மனமில்லாத யாசகன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )