சத்தி சக்திதாசன்
கிழிந்த மேகங்களாயின
அவன் நினைவுகள்
மறைந்த நிலவாயிற்று
அவன் மகிழ்ச்சி
நான் பார்த்தபோது அவன்
சிரிக்கத்தான் செய்தான்
அந்தச் சிரிப்பை அப்போது
அலங்கரித்தது ஓர்
வெறுமைதான்
இளம் உள்ளத்திலே ஏதோ
இல்லாதது போல
கவலைக்கு காரணம்
அந்த நெஞ்சில்
நிச்சயமாய் நிதர்சனமாய்
நீந்திக் கொண்டு
தானிருக்கிறது
அன்று அவனுடன் இருந்த
சொந்தம் ஒர் நொடியில்
வெகுதூரம் தள்ளி
எப்படி நடந்தது ?
சோகத்தை நெஞ்சில் புதைத்து
சொந்தம் கொடுத்த
சோதனையைத் தங்கியபடி
பாவம் அவன்
ஒரு வாலிபன் தான்
விளக்கமில்லா விடயங்களை
விளங்கிக் கொள்ள
விலையில்லா அனுபவம்
விளையவில்லை இன்னும்
அவன் ஒரு வாலிபன் தான்
அடக்கிக் கொண்டது
அணையாத சோகம் தான்
அமைதியான நதியாக
அழாகாக ஓடியது
அவன் வாழ்க்கை நதி
எங்கிருந்து வந்தது
எமகாதக மழை ?
ஆற்றுவெள்ளம் கரையுடைத்தது
ஆனந்தம் தடம் புரண்டது
ஆடிப்போனான் ஆயினும்
அழுத்திக் கொண்டான் துயரத்தை
புன்னகையை மறந்தவன்
புரிவது
புதிதான ஓர் சிரிப்பு
காலம் மாறும் என்றொரு
கனவு
துயரம் விலகும் என்றொரு
துணிவு
பிரிந்த சொந்தம் கூடுமென்று
ஆறுதல்
புன்னகையை மறந்தவன்
பூமியில்
புதுவாழ்வு நோக்கி
புரிவதும் தவம் தான்
000
sathnel.sakthithasan@bt.com
- பெரியபுராணம் — 5
- டாம் இந்தியா ‘ நிதி நடை நிகழ்ச்சி ‘
- ஆட்டோகிராஃப் 14 ‘பாடல் ஒரு கோடி செய்தேன் கேட்டவர்க்கு ஞானம் இல்லை ‘
- கருணாநிதியின் ஜெக ஜால வெளியீடுகள்:
- மெய்மையின் மயக்கம்-13 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)
- சங்க இலக்கியம்-ஓர் எளிய அறிமுகம்-1
- ஒரு துளியின் சுவை
- அருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்)
- நிலக்கரி எரிவாயு எரிஆயில் எருக்கள் ஈன்றும் எரிசக்தியில் வெளியாகும் விஷ வாயுக்கள் [Toxic Emissions from Fossil Fuel Energy]
- நெரூதா அனுபவம் – நான் சில விஷயங்களை விளக்குகிறேன்
- என் சிறுகதைகள் – ஓர் வேண்டுகோள்
- காவ்யா அறக்கட்டளையும், பாரதி இலக்கியச் சங்கமும் இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி
- மல மேல இருக்கும் சாத்தாவே!
- வேண்டும் – வேண்டாம்
- எனக்குள் காலம்
- தோழி
- 8க்குள் முன்னேற்றம் எட்டு !
- சின்னஞ்சிறு சிட்டு அவள்…
- அன்புடன் இதயம் – 28 – என் குடும்பம்
- ‘இன்னொரு ரஜினிகாந்த் ‘ – ஞாநியின் கட்டுரைக்கான எதிர்வினை
- உயிர்க்குடை
- காதலிக்கச்சொன்ன வள்ளுவர்…(113) தொடர்
- மனித உரிமை ஆணையம்..!!!
- மசாஜ்
- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்- 33
- குரங்கிலிருந்து …
- பாதை மாறினால்….
- எங்கே தவறு ?
- ரயில் பயணங்களில்
- மழை மழையாய்…
- சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது குறிஞ்சிவேலன். – பதிவுகள்
- குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ? – பகுதி 2
- மரண தண்டனை எதற்காக ?
- புன்னகையை மறந்தவன்
- அது
- தனிமை வாசம்
- எங்கள் கிராமத்து ஞானபீடம்
- அன்பு
- நிகழ்வின் ரகசியம்
- காற்று
- டைரி தீம்தரிகிட ஆகஸ்ட் 16-31 2004
- கிள்ளுப் பூ