This entry is in the series 20090326_Issue

ஸ்ரீபன்



காதல் அதன்
அழகான தருணங்களில்
எதையாவது எதிர்பார்க்கிறது

கடைக்கண் பார்வையையோ
ஒரு சிறு புன்னகையைத்தானும்
பரிசாகக் கேட்கிறது

கனவுகளை பூக்களால் நிரப்புகிறது
வெறும் வார்த்தைகளைக்கூட
கவிதையாக்குகிறது
கூட்டத்தின் நடுவில் குழந்தையாகி
அசடு வழிகிறது
முரண்பாடுகளை ரசித்து
மறந்துபோகிறது

ஏமாற்றங்களை மட்டும்
ஏரிமலைக்கு முன்னய
அமைதிபோல
தனக்குள்ளேயே புதைத்து
மௌனித்துப் போகிறது

ஸ்ரீபன்

Series Navigation